Posts

கள் குடிப்பது சினிமாவை விட தீமை அல்ல! - ஈ.வெ.இராமசாமி

Image
ஈ.வெ.இராமசாமியை கைவிட்ட  ஈ.வெ.இராமசாமி சீடர்கள்!  =================================== கள்ளு விஷயத்தில் ஈ.வெ.ராமசாமி சீடர்கள் எல்லாம் வள்ளுவர் பக்கம் சாய்ந்து விட்டார்கள். ஏனெனில், சீமானை எதிர்ப்பதற்கு அதை விட்டால் அவர்களுக்கு வேறு ஆயுதம் எதுவுமில்லை.  ஈ.வெ.இராமசாமி சீடர்கள் கள்ளுண்ணாமை குறித்து பாடம் எடுப்பதைப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. கறுப்புச் சட்டை வீரமணி முதல் கடைசி ஈ.வெ.இராமசாமியின் முரட்டு பக்தர்கள் வரை எப்போதும் சொல்வது ஒன்றுதான்.  "சொந்த புத்தி தேவையில்லை, பெரியார் தந்த புத்தியே போதும்" என்பதுதான். கள்ளு விஷயத்தில் ஈ.வெ.ராமசாமி புத்தியை பயன்படுத்தினால் பூமராங் போல அது திரும்பி நம்மையே தாக்கி விடும் என்பதால் சொந்த புத்தியை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.  ஏனெனில் ஈ.வெ.இராமசாமி கள்ளை எதிர்த்து தென்னை மரம் வெட்டிய கதையை பள்ளிப் பாடப்புத்தகத்தில் படித்தவர்கள் எல்லாம் வளர்ந்து தற்போது விடுதலை படிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர் இறுதிக் காலத்தில்  ஒரு கையில் மதுவையும், மற்றொரு கையில் கள்ளையும் தூக்கித்தான் காட்ட வில்லை. அதைத் தவிர, அந்தளவு...

திராவிடம் மறுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Image
திராவிடம் மறுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்  ================================= "திராவிடம் என்பது ஒரு மாயை" என்பதற்கும், "தேசிய இந்தியம்" பொய் என்பதற்கும், காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகமே சான்று என்று கூறியவர் நம் பாவலரேறு பெருஞ்சித்திரனார். தமிழின் சேய்மொழி திராவிட மொழி  அல்லது  தமிழின் உடன் பிறந்தமொழி திராவிட மொழி - என்ற பெயரால்  கன்னடத்தோடு உறவு கொண்டாடி திராவிடத்தை தமிழர் மீது திணிக்கும் சூழ்ச்சியை சில போலி தமிழ்த் தேசியவாதிகள் செய்து வருகின்றனர். கன்னடர்கள் நம் திராவிடச் சகோதரர்கள் என்றால் கன்னட நாட்டிற்கு சென்று பாடம் நடத்தட்டும்!  கன்னடர்கள் நம் திராவிடச் சேய் என்றால் காவிரி நீரை நமக்கு கன்னட நாட்டிற்கு சென்று பெற்றுக் கொடுக்கட்டும்! தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதை உரக்கச் சொல்வோம். பாவலரேறு பெருஞ்சித்திரனார் தென் மொழியில் எழுதிய பாடல் உணர்த்தும் செய்தி இதுதான்.  தமிழ்நாடு தமிழர்க்கே! =============================== தமிழர்க்குத் திராவிடம் என்பதோ அயன்மை!  தமிழருக்(கு) இந்தியம் என்றுமே எதிர்மை!  தமிழ...

ஆதி திராவிடன் என்பது வரலாற்றுப் பிழை! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Image
"ஆதி (பழந்) தமிழன்"   என்பதே சிறப்பு! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்  ====================================== * "ஆதி திராவிடன்" என்பது வரலாற்றுப் பிழை! * " அரிஜன் " என்பது காந்தியின் ஏமாற்று! * " தாழ்த்தப்பட்டவன்" என்பது தன்மானமின்மை! * " தலித் " என்பது தமிழின இழப்பு * " பழந்தமிழன்" என்பதே சிறப்பும் பெருமையும்! * 'ஆதி ஆந்திரன் '  ' ஆதி கன்னடன் ' ' ஆதி கேரளன் ' - என்று பிறர் தம்மைச் சுட்டும் பொழுது,  " ஆதி (பழந்) தமிழன் என்பதே சிறந்தது! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்  தமிழ் நிலம், ஏப்ரல் -மே 1994 ================================= - கதிர் நிலவன்  Tamilthesiyan.wordpress.com

அன்னியரான துலுக்கனுக்கு - பார்ப்பானுக்கு இங்கு என்ன உரிமை! - ஈ.வெ.இராமசாமி முழு உரை.

Image
அன்னியரான பார்ப்பனர் - துலுக்கருக்கு இங்க என்ன உரிமை! -ஈ.வெ.இராமசாமி ==================================== எத்தனை முறை ஈ.வெ.ரா.வை பற்றி எடுத்துச் சொன்னாலும், ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகள் திருந்த மறுக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் " என் தலைவர் பெரியாரே, தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டி" என்று ஜீனியர் விகடன் இதழில் பேட்டி தந்துள்ளார். தமிழ் மொழி எதிர்ப்பாளர், தமிழின மறுப்பாளர் ஈ.வெ‌.ரா. ஒருபோதும் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாக இருக்க முடியாது.  அவரின் உரையாடல், எழுத்து, பேச்சு எவற்றிலும் தமிழ்மொழி, தமிழர் இனம், தமிழர் தாயக மறுப்பு ஆகியவற்றை அவர் நடத்திய விடுதலை ஏட்டையே சான்றாகத் தந்து பலமுறை எழுதியுள்ளோம். பிராமணீய இந்திய அரசு இசுலாமிய சமூகத்தை எப்படி அணுகுகிறது என்பதை ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. இந்தியாவை இந்து சாம்ராஜ்யமாக மாற்றிட இசுலாமியர்கள் தடையாக இருப்பதால், இசுலாமிய மக்களை அந்நியராகக் கூறி, இந்தியாவை விட்டு வெளியேற வைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பலின் திட்டமாகும்.  இந்த திட்டத்தை வழி மொழியும் ஒருவராக ...

வடக்கெல்லைப் போராளி தளபதி கே.விநாயகம் பிறந்தநாள் 27.5.1914

Image
வடக்கெல்லை மீட்பு போராட்டத் தளபதி கே.விநாயகம் பிறந்த நாள்  27.05.1914 ======================================= மொழிவழித் தாயக மீட்புப் போரில்  வடக்கெல்லையில் ஆந்திரர்களின் தமிழர் மண் பறிப்புக்கு எதிராக மிகத் தீவிரமாகப்  போராடியவர். சட்டமன்றத்திலும் சித்தூர் மண்ணை மீட்டிடவும் வாதாடியவர் தளபதி கே.விநாயகம் . தமிழக எல்லைப் மீட்புப் போராளி தளபதி விநாயகம் புகழ் ஓங்கட்டும்! ம.பொ.சி.யோடு இணைந்து போராடிய தளபதி கே.விநாயகம்அவர்களின் சட்ட மன்ற உரைகளின் சுருக்கம். "சித்தூர் மாவட்டம் ஆந்திரர்களின் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சித்தூர் மாவட்டம் பல மொழியினர் கூடி வாழும் மாவட்டம் ஆகும்.  தமிழர்களே பெருவாரியாக இங்கு வாழ்கின்றனர். ஆனாலும் தாலுகா அலுவலகங்கள், போலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் தெலுங்கில் மட்டுமே ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது.  கடந்த 1908-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக அங்கு வாழும் தமிழர்களுக்கு தங்கள் தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது....

கண்ணகி கோயில் தமிழருக்கே சொந்தம்!

Image
கண்ணகி கோயிலை தமிழருக்கே சொந்தமாக்குவோம்! ====================================== சித்திரை முழுநிலவு நாளில் உறுதியேற்போம்! ====================================== தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு ஆற்றுநீர் உரிமையை பறிக்கும் மலையாளிகளின் அரம்பத்தனத்தை அனைத்துத் தமிழரும் அறிவோம். ஆனால் தமிழர்களுக்குச் சொந்தமான கண்ணகி கோயிலை அபகரிக்க முயலும் மலையாளிகளின் சூழ்ச்சியை தமிழர்கள் இதுவரை அறியாதவர்களாகவே உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளன்று  தேனி மாவட்டம் கூடலூர் மலையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். அங்கு கேரள அரசின் கெடுபிடி காரணமாக முழுச்சுதந்திரோடு தமிழர்கள் வழிபாடு நடத்த முடியாது .  ஒவ்வொரு ஆண்டும்  இடுக்கி மாவட்ட ஆட்சியரும், தேனி மாவட்ட ஆட்சியரும் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தான்  ஒரு நாள் மட்டும் "கண்ணகி சித்திரைப் பெருவிழா" அங்கு நடத்தப்படுகிறது. மொத்தத்தில் 9 மணி நேரம் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது. அங்கு மலையாள பக்தர்களிடம் காட்டும் பரிவு தமிழக பக்தர்களிடம் காட்ட மாட்டார்கள். காரணம் கண்ணகி கோயில் தங்கள் நிலப்பக...

தமிழ்நாட்டின் முதலமைச்சராய் தமிழாய்ந்த தமிழன் வர வேண்டும்! பாரதிதாசன் பாடியது ஏன்?

Image
தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழகத்தின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்! பாரதிதாசன் பாடியது ஏன்? ================================= பாவேந்தர் சார்ந்திருந்த திராவிட இயக்கத்தார் இன்றளவும் தங்கள் மூதாதையராகக் கருதும் ஜஸ்டிஸ் கட்சியார் 1920 தொடங்கி 1937 வரை ஆட்சியிலிருந்த போது தொடர்ந்து ஆந்திரரே முதலமைச்சர்களாக மட்டுமின்றி, அமைச்சர்களாகவும் வந்தனர். இருவேறு சந்தர்ப்பங்களில் தமிழரிருவர் ஒருவன் பின் ஒருவராக அமைச்சரானதுண்டு. அவர்கள் திரு.சிவஞானம் பிள்ளை, சர். பிடி.ராசன் ஆகியோராவார். தமிழ் மாநிலமானது தெலுங்கு - கன்னட- மலையாள மொழிகள் வழங்கும் பிரதேசங்களும் சேர்ந்த சென்னை மாகாணத்திலிருந்த போது, " தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழகத்தின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்" எனப் பாடினார் பாவேந்தர். இது தமிழகம் தனியரசு மாநிலம் ஆவதற்கு முன்னர் 1945இல் அவர் பாடியது. நூல்:  ம.பொ.சி . எழுதிய "எனது பார்வையில் பாவேந்தர்" நூலிலிருந்து.