திராவிடம் மறுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்
திராவிடம் மறுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்
=================================
"திராவிடம் என்பது ஒரு மாயை" என்பதற்கும், "தேசிய இந்தியம்" பொய்
என்பதற்கும், காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகமே சான்று என்று கூறியவர்
நம் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
தமிழின் சேய்மொழி திராவிட மொழி
அல்லது
தமிழின் உடன் பிறந்தமொழி திராவிட மொழி
- என்ற பெயரால்
கன்னடத்தோடு உறவு கொண்டாடி திராவிடத்தை தமிழர் மீது திணிக்கும் சூழ்ச்சியை சில போலி தமிழ்த் தேசியவாதிகள் செய்து வருகின்றனர்.
கன்னடர்கள் நம் திராவிடச் சகோதரர்கள் என்றால் கன்னட நாட்டிற்கு சென்று பாடம் நடத்தட்டும்!
கன்னடர்கள் நம் திராவிடச் சேய் என்றால் காவிரி நீரை நமக்கு கன்னட நாட்டிற்கு சென்று பெற்றுக் கொடுக்கட்டும்!
தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதை உரக்கச் சொல்வோம்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தென் மொழியில் எழுதிய பாடல் உணர்த்தும் செய்தி இதுதான்.
தமிழ்நாடு தமிழர்க்கே!
===============================
தமிழர்க்குத் திராவிடம் என்பதோ அயன்மை!
தமிழருக்(கு) இந்தியம் என்றுமே எதிர்மை!
தமிழர்க்குத் தமிழமே பொருந்திடும் இயன்மை!
'தமிழ்த்தே சியமே'
என்றும்பே ருண்மை!
'திரவிட உணர்வு' ஒரு மாயை என்பதற்கும்,
"தேசிய இந்தியம்' பொய்
என் பதற்கும்,
கரவட மாகவே
காவிரி நீரைக்
கருநா டகம்தர
மறுப்பதே சான்றாம்!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- தென்மொழி, செப்டம்பர் 1991
Comments
Post a Comment