Posts

அன்னை பூபதி நினைவு நாள் 19.04.1988

Image
உண்ணாநிலையில் உயிர் துறந்த 'உலகின் முதல் பெண் போராளி' அன்னை பூபதி நினைவு நாள் ==============================  19.4.1988 பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். இசைப்பிரியாவின் கதறல் காணொளி கண்டும் இந்திய அரசின் பேய் மனம் இரங்க மறுத்தது.  அன்னை பார்வதியம்மாள் சிகிச்சைக்கு வந்த போதும் இந்திய அரசின் கல் நெஞ்சம் கரையவில்லை. தமிழகம் வந்த பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியது.  தமிழ்ப்பெண்களை மதிக்கத் தெரியாத இந்திய அரசின் இந்த இழிகுணம் நேற்று முளைத்ததல்ல; அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே முளைத்த குணம். அன்னை பூபதியம்மாளின் உயிரைப் பறித்த வரலாற்றை அறிவதன் மூலம் இதனை உறுதிப்படுத்தவும் முடியும். 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைக்கும் வி.பு. போராளிகளுக்கும் ஆயுதப் போர் நடைபெற்று வந்த கால கட்டம்.  அன்று காந்திய நாட்டிற்கு அகிம்சை வழியில் பாடம் புகட்ட விரும்பி உண்ணாநிலை கொண்டு உயிர் துறந்தவன் திலீபன்.  அவன் வழியில் உண்ணாநிலையை தொடங்கி உயிர் துறந்த உலகின் முதல் பெண்மணி தான் அன்னை பூபதியம்மாள். திலீபன் உண்ணாநிலைக்கும் அன்னை பூபதியம்மாள் உண்ணாநிலைக்கும் ஒரே வேறுபாடு த...

ரேகை சட்டத்தை எதிர்த்துப் போராடிய பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவு நாள் 03.04.1920

Image
குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்புப்போரில் உயிர் நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவு நாள் 3.4.1920  ============================== ஒரு மனிதனின் வாழ்நிலையை அவனது பிறப்பு தான் தீர்மானிக்கும் என்று மனுதர்மச் சட்டம் கூறுகிறது. அதே கருத்தைத் தான் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டமும் கூறுகிறது. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரான்சு, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் சுரண்டலுக்கு எதிராகவும், சமூகப் பொருளாதார மாற்றத்திற்காகவும் கலகங்கள் வெடித்தன. பிரெஞ்சு புரட்சியால் உத்வேகமடைந்த மக்களைக் கண்டு நடுங்கிய மேலைய வல்லரசுகள் முதலில் சுதந்திரமான வாழ்வியலைக் கொண்ட நாடோடி இனத்தவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர விரும்பின. அதன் பொருட்டு அம்மக்களைச் சமூக வாழ்வுக்கு அந்நியமானவர்கள் என்று கூறி பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களை கொண்டு வந்தன. இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றிய பிரித்தானிய அரசு அதே வழியில், தனது ஆதிக்கத்திற்கு அடிபணியாத மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகள், நாகரிகமற்றவர்கள், படிப்பறிவற்றவர்கள் என்றெல்லாம் முதலில் இழிவுபடுத்தத் தொடங்கியது. பின்னர் அம்மக்கள் மீ...

எங்கள் பரம்பரை விஜயநகரப் பரம்பரை என்று ஈ. வெ. ரா. சொல்லும் போது நாங்கள் மட்டும் மூவேந்தர் பரம்பரை என்று சொல்லக் கூடாதா?

Image
எங்கள் பரம்பரை விஜய நகரப் பரம்பரை என்று ஈ.வெ.ரா. சொல்லும் போது , நாங்கள் மூவேந்தர் பரம்பரை என்று பேசக் கூடாதா? தோழர் திருமாவளவனுக்கு பதில்! ============================= தோழர் திருமாவளவன் தமிழ் மன்னர்களை சீண்டும் வேளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வில் தேவையில்லாமல் மூவேந்தர்களை வம்புக்கு இழுத்துள்ளார். தமிழ் மன்னர்கள் காலத்தில் தான் நாடு குட்டிச் சுவர் ஆனது. வடமொழியும், பிராமண ஆதிக்கமும் வந்தது , இராஜராஜ சோழன் பெயர் தமிழ்ப் பெயரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்.  பல்லவர்கள் காலத்தில் பிராமண ஆதிக்கமும், வடமொழியும் கோலோச்சின. பல்லவர்கள் காலத்திற்கு பின் வந்த தமிழ் மன்னர்கள் காலத்தில்தான் பிராமண ஆதிக்கமும், வடமொழி ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்பட்டது . இந்த உண்மையை எத்தனை முறை வரலாற்று ஆதாரங்களோடு சொன்னாலும் கோயபல்ஸ் வேலையை திருமாவளவன் கைவிடுவதாக இல்லை. மூவேந்தர்கள் மீது அவதூறு செய்வதில் ஈ.வெ.ரா. பேசிய திராவிடத்திற்கு சற்றும் சளைத்ததல்ல திருமாவளவன் பேசும் தலித்தியவாதம்.  இராசராச சோழனுக்கு அருண்மொழி வர்மன் என்ற பெயரும், இராசேந்திர சோழனுக்கு மது...

சின்னச்சாமி ஈகத்தை கொச்சைப்படுத்திய பெரியார்

Image
சின்னச்சாமி ஈகத்தை கொச்சைப்படுத்திய ஈ.வெ.ரா. ========================= 1965ஆம் ஆண்டு சனவரி 26ஆம் நாளில்  இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்திமொழி அமலாகும் என்று அறிவிக்கப்பட்டது.  இதற்கு முன்பே தமிழ்நாட்டில் இந்தி மொழி ஆட்சி மொழியானால் தமிழுக்கு ஆபத்து நேரும் என்பதை தமிழர்கள் உணர்ந்திருந்தனர். இந்தி திணிப்புக்கு எதிராக திமுக தலைவர் அண்ணா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பரப்புரை செய்து வந்தனர். அன்றைய காலத்தில் தென்வியட்நாமில் நடைபெற்ற கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக புத்த பிக்குகள் தீக்குளித்து தமது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதை செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொண்ட அரியலூர் கீழப்பழுவூர் ஊரைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற இளைஞர் தமிழ்மொழி காக்க தீக்குளிப்பதைத் தவிர வேறு வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்.    அதற்கு முன்பு நண்பர் நாகராசனுக்கும் குடும்பத்தினருக்கும் இரண்டு கடிதங்கள் எழுதினார். "தமிழ் வாழ வேண்டும் என்று நான் சாகின்றேன்.. இதை நான் திருச்சியிலிருந்து எழுதுகிறேன். என்னை மன்னித்து வாழ்த்தி வழியனுப்புங்கள். தமிழ் வாழ வேண்டும் என நான் செய்த காரியம் வெல்லும்".     ...

அன்னியரான துலுக்கனுக்கு - பார்ப்பானுக்கு இங்கு என்ன உரிமை! - ஈ.வெ.இராமசாமி முழு உரை.

Image
அன்னியரான பார்ப்பனர் - துலுக்கருக்கு இங்க என்ன உரிமை! -ஈ.வெ.இராமசாமி ==================================== எத்தனை முறை ஈ.வெ.ரா.வை பற்றி எடுத்துச் சொன்னாலும், ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகள் திருந்த மறுக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் " என் தலைவர் பெரியாரே, தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டி" என்று ஜீனியர் விகடன் இதழில் பேட்டி தந்துள்ளார். தமிழ் மொழி எதிர்ப்பாளர், தமிழின மறுப்பாளர் ஈ.வெ‌.ரா. ஒருபோதும் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாக இருக்க முடியாது.  அவரின் உரையாடல், எழுத்து, பேச்சு எவற்றிலும் தமிழ்மொழி, தமிழர் இனம், தமிழர் தாயக மறுப்பு ஆகியவற்றை அவர் நடத்திய விடுதலை ஏட்டையே சான்றாகத் தந்து பலமுறை எழுதியுள்ளோம். பிராமணீய இந்திய அரசு இசுலாமிய சமூகத்தை எப்படி அணுகுகிறது என்பதை ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. இந்தியாவை இந்து சாம்ராஜ்யமாக மாற்றிட இசுலாமியர்கள் தடையாக இருப்பதால், இசுலாமிய மக்களை அந்நியராகக் கூறி, இந்தியாவை விட்டு வெளியேற வைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பலின் திட்டமாகும்.  இந்த திட்டத்தை வழி மொழியும் ஒருவராக ...

தெலுங்கனுக்கு உள்ள உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே! - சுப்பிரமணிய பாரதியார்

Image
தெலுங்கனுக்கு உள்ள உணர்ச்சி தமிழனுக்கு  இல்லையே...!  நெல்லூர் மாஹானசபையில் வந்தே மாதரம் பாடவில்லை....! 'தமிழ்க்கவி' சுப்பிரமணிய பாரதியார் வேதனை! ============================== சென்ற வெள்ளிக்கிழமை (1917) சூன் 1 யன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் சபாநாயகர் ஸ்ரீ வெங்கடப்பய்ய பந்துலு செய்த உபந்யாஸம் கவனிக்கத் தக்கது. ராஜநீதி சாஸ்த்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமையுடையார். பாடலிபுத்ர நகரத்தில் நடந்த ஆந்திர ராஜ்யமும் பிற்காலத்தில் தமிழ் நாட்டைக் கட்டியாண்ட விஜயநகரத்து ராஜ்யமும் கீர்த்தி மிகுந்தனவன்றோ? தெலுங்கர் தமிழரை ஆண்ட அடையாளங்கள் நமது பாஷையிலும் ஆகாராதிகளிலும் அழிக்க முடியாதபடி பதிந்து கிடக்கின்றன.  நமது ஸங்கீதமும் நாட்டியமும் தெலுங்கிலேயே இன்றுவரை முழுகிக் கிடக்கின்றன. பாடகர்கள் பாடும் கீர்த்தனங்கள், தாசிகள் ஆட்டத்தில் பாடும் வர்ணங்கள் ஜாவளிகள் முதலியவற்றில் நல்ல உருப்படியெல்லாம் தெலுங்கு. நமது கிராமங்களிலுள்ள தெலுங்க ரெட்டிகளும், நாயுடுமாரும், ஆந்த்ர பிராமணப் புரோகிதர்களும், தெலுங்கு தாசிகளும் ராயர் சம்ஸ்தான காலத்தில் இங்கே உறுதி பெற்றவர்கள். நமது விவாக க...

உடைபடும் ஈ. வெ.ரா.வின் போலி பிம்பம்!

Image
உடைபடும் ஈ.வெ.ரா.வின் போலி பிம்பம்! 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு பெரும் வீச்சாக எழுந்த திராவிட எதிர்ப்புக் கருத்தியல் தற்போது பெரும் பாய்ச்சலை நோக்கி முன்னேறியுள்ளது. ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த முன்வராத திராவிடத்தால் தில்லி அரசால் தமிழர்கள் இழந்த உரிமைகளை காக்க முன்வராது என்று உணர்ந்த இளையோர் பட்டாளம் தமிழின அடையாளத்தை மறைக்கும் திராவிடத்தை மட்டும் விட்டு வைக்க வில்லை; அதை திட்டமிட்டு பரப்பிய திராவிடப் பிதாமகன் ஈ.வெ.ரா.வின் போலி பிம்ப அரசியலையும் சமூக ஊடகங்களில் உடைக்கத் தொடங்கி விட்டனர். ஆரியத்துவா மோடி அரசை வெளியில் எதிர்ப்பதைப் போல பாவனை செய்து அதனோடு திரைமறைவில் கள்ள உறவு வைத்துள்ள திராவிட மாடல் அரசு ஈ.வெ.ரா.வின் பிம்பத்தைக் காட்டி தமிழ்த் தேசிய உரிமைக்கான போராட்ட எழுச்சியை வளரவிடாமல் அச்சுறுத்தி வருகிறது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தமிழின அடையாளத்தை மறுக்கும் ஈ.வெ.ராவின் திராவிடக் கருத்தியலுக்கு எதிராக தொடர்ந்து தக்க சான்றுகளோடு எழுதியும், சமூக வலைதளங்களில் பேசியும் வருகிறார்.  தலைவர் பெ.மணியரசன் அவர்களை தர்க்...