Posts

Showing posts from May, 2026

தமிழ்நாட்டு வட எல்லையை மீட்க வேண்டும்! - தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார்

Image
தமிழ்நாட்டு வட எல்லையை மீட்க வேண்டும்! - தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார் ============================= அன்றைய சென்னை மாகாணத்தில் சென்னை மற்றும் சென்னைக்கு அப்பால் இருந்த திருவேங்கடம், திருக்காளத்தி, நெல்லூர், சித்தூர் போன்ற தமிழர் பகுதிகளை ஆந்திரர்கள் அபகரிக்க முயன்றனர். இதற்கு எதிராக 1946 ல் தமிழரசுக் கழகத்தை தோற்றுவித்து ம.பொ.சிவஞானம் போராட்டத்தை தொடங்கினார். இதற்கு வலு சேர்க்கும் வகையில் சங்க இலக்கியம்,  வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டு ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வடக்கெல்லை பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார் அவர்கள். 1948 ல் அவர் எழுதிய "தமிழ்நாட்டு வட எல்லை" நூல் வடக்கெல்லை மீட்புப் போராட்டத்திற்கு பேருதவி புரிந்தது. 103 பக்கங்கள் கொண்ட அந்நூலின் கடைசி அத்தியாயத்தில் " " தமிழர் கடமை " என்ற தலைப்பில் எழுதிய பகுதியை தந்துள்ளேன். மா.இராசமாணிக்கனார் அவர்கள் ஆந்திரர்களை தமது சொந்த இனத்து சகோதரர்களாக கருதிய அதே வேளையில், தமிழர்களுக்குரிய தாயகப் பகுதிகளை மீட்க வேண்டும் என்ற வேட்கையை அந்நூலில் வெளிப்படுத்தியிர...

மே நாள் வாழ்த்துகள்! தமிழராய் இணைவோம்!

Image
தமிழராய் இணைவோம்!  மே நாள் வாழ்த்துகள்!  ============================ உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்!  - என்று தமிழ்நாட்டில் உள்ள இடது- வலது பொதுவுடைமையர் மே நாள் கொடியேற்ற - கூட்ட நிகழ்வுகளில் முழங்குகின்றார்கள். இது தவறான மொழி பெயர்ப்பாகும்.  கார்ல் மார்க்ஸ் - பிரடெரிக் ஏங்கல்ஸ் வெளியிட்ட பொதுவுடைமைக் கட்சி அறிக்கை செர்மன் மூலத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதில்  ”Working Men of All Countries, Unite!” என்று தான் உள்ளது.  அதன் பிறகு பிரெடெரிக் ஏங்கெல்ஸ் ஒப்புதலுக்குப் பிறகு முதல் ஆங்கில மொழிபெயர்ப்பில் ”Workers of all countries, unite!” என்று மொழி பெயர்க்கப்பட்டது. இது தமிழில் இப்படித்தான் மொழி பெயர்த்து  இருக்க வேண்டும். “அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!” பாட்டாளிக்கு மொழியும் உண்டு, இனமும் உண்டு, தேசமும் உண்டு என்பதை ஏற்கும் வகையில் தான் "அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ! " என்று விளிக்கப்படுகிறது. ஆனால் பாட்டாளிக்கு மொழி இல்லை, இனமில்லை, தேசமில்லை என்று இங்குள்ள இடது- வலது பொதுவுடைமைக் கட்சிகள் கூப்பாடு போடுவது...