தமிழ்த்தேசிய ஆசான் பெ.மணியரசன் கடந்து வந்த பாதை!
தமிழ்த்தேசிய பேராசான் பெ.மணியரசன் கடந்து வந்த பாதை! -. 1 ----------------------------------------------------------------------------- 1.நேர்காணல் : தோழர் பெ. மணியரசன் உங்களின் அரசியல் பிரவேசம்குறித்துக் கூறுங்கள் ? மாணவர் பருவத்திலிருந்தே என்னுள் தமிழ்உணர்வு மேலோங்கியிருந்தது. அன்றைய அரசியல் சூழலில் தமிழ்மொழி, இனம், எனப் பேசிக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின்பால் ஈர்க்கப்பட்டேன். தி.மு.க.வில் உறுப்பினராகவும் சேர்ந்து செயலாற்றிக் கொண்டிருந்தேன். தி.மு .க. தலைவர்களின் சொற்பொழிவுகளால் கவரப்பட்டு, அக்கட்சியினரால் அன்று நடத்தப்பட்ட பல ஏடுகளைப் படிக்கும் ஆர்வம் ஓங்கியிருந்த காலம் அது. எனது தமிழ் இலக்கிய ஆர்வத்திற்கு அவை ஓரளவுக்கு ஈடு கொடுத்தன. நூலகங்களும் எனது தமிழ் ஆர்வத்திற்கு உறுதுணையாக இருந்தன. தூய தமிழ்ச் சொற்களை நான் அறிமுகம் செய்து கொண்டது, பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி’ இதழின் வாயிலாகத்தான். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நூலகங்களுக்கு ‘தென்மொழி’ போன்ற நல்ல தமிழ் ஏடுகள் வந்து கொண்டிருந்தன. என்போன்ற தமிழ் உணர்வாளர்கள் அவற்றை ஆவலுடன் படித்துப் பயன்பெற்றனர். ஆனால் தம...