Posts

Showing posts from May, 2024

தமிழ்த்தேசிய ஆசான் பெ.மணியரசன் கடந்து வந்த பாதை!

Image
தமிழ்த்தேசிய பேராசான் பெ.மணியரசன் கடந்து வந்த பாதை!  -. 1 ----------------------------------------------------------------------------- 1.நேர்காணல் : தோழர் பெ. மணியரசன் உங்களின் அரசியல் பிரவேசம்குறித்துக் கூறுங்கள் ? மாணவர் பருவத்திலிருந்தே என்னுள் தமிழ்உணர்வு மேலோங்கியிருந்தது. அன்றைய அரசியல் சூழலில் தமிழ்மொழி, இனம், எனப் பேசிக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின்பால் ஈர்க்கப்பட்டேன். தி.மு.க.வில் உறுப்பினராகவும் சேர்ந்து செயலாற்றிக் கொண்டிருந்தேன். தி.மு .க. தலைவர்களின் சொற்பொழிவுகளால் கவரப்பட்டு, அக்கட்சியினரால் அன்று நடத்தப்பட்ட பல ஏடுகளைப் படிக்கும் ஆர்வம் ஓங்கியிருந்த காலம் அது. எனது தமிழ் இலக்கிய ஆர்வத்திற்கு அவை ஓரளவுக்கு ஈடு கொடுத்தன. நூலகங்களும் எனது தமிழ் ஆர்வத்திற்கு உறுதுணையாக இருந்தன. தூய தமிழ்ச் சொற்களை நான் அறிமுகம் செய்து கொண்டது, பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி’ இதழின் வாயிலாகத்தான். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நூலகங்களுக்கு ‘தென்மொழி’ போன்ற நல்ல தமிழ் ஏடுகள் வந்து கொண்டிருந்தன. என்போன்ற தமிழ் உணர்வாளர்கள் அவற்றை ஆவலுடன் படித்துப் பயன்பெற்றனர். ஆனால் தம...

கால்டுவெல் கட்டமைத்த பொய்மைத் திராவிடம் தமிழ்மொழிக்கு எதிரானது!

Image
கால்டுவெல் கட்டமைத்த பொய்மை திராவிடம் தமிழ்மொழிக்கு எதிரானது! ======================================  இராபர்ட் கால்டுவேல் பிறந்த நாளை முன்னிட்டு அவர் "தமிழுக்குச் செய்த சாதனை பாரீர்" என்று திராவிடவாதிகள்  முழங்குகிறார்கள்.  கால்டுவெல் தமிழுக்கு செய்த நன்மையை விட தீமையே அதிகம். கால்டுவெல் கண்டு பிடித்த திராவிடம் தமிழுக்கும், தமிழினத்திற்கும் கேடு செய்த வரலாற்றை சொல்ல மாட்டார்கள். ஏனெனில் திராவிடத்தின் குல தெய்வமாக கால்டுவெல்  திகழ்வதால் கைக்கூப்பி வணங்குவதைத் தவிர திராவிட வாதிகளுக்கு வேறு வழியில்லை. திராவிடக் கருத்தியலுக்கு  ஏற்பட்ட நெருக்கடியை  கால்டுவெலை கொண்டாடுவதன் மூலம் பொ.வேல்ச்சாமி, இரவிக்குமார்  போன்றவர்கள் மூடி மறைக்கவே முயல்கிறார்கள். கால்டுவெல் கண்டுபிடிப்பான திராவிடத்தை எத்தனை முறை கழுவி ஊற்றினாலும் திருந்த மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். கால்டுவெல் கட்டமைத்த பொய்மை திராவிடத்தை வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் மீண்டும் அடித்து நொறுக்குவோம். கால்டுவெல் தமிழிலிருந்து பிரிந்து ஆரியமாகிப் போன மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்...

அயோத்திதாசப் பண்டிதர்

Image
"தமிழ்த் தேசியத்தின் முன்னோடி" அயோத்திதாசப் பண்டிதர் நினைவு நாள் (5.5.1912 ) விடுதலையொன்று வேண்டும்; அதுவும் தொல்குடி தமிழருக்கே முதலில் வேண்டும், என்று முழக்கமிட்டவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார். இவர் இந்திய அடையாளத்தோடு கூடிய ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையென்பதை மறுத்து தமிழ்மொழி அடையாளத்தை முன்னிறுத்தியவரும் கூட! அவர் நடத்திய "ஒருபைசா தமிழன்" ஏடு இதற்கோர் சான்றாகும். 19.6.1907 முதல் தொடங்கப்பட்ட இவ்வேட்டை ஒரு கோடிப் பொன் மதிப்பிற்குரியது என்றார். முதல் இதழிலேயே 'தமிழ்வாழ்த்து' எனும் கவிதையில் அயோத்திதாசர் கூறியது பின் வருமாறு:   "ஒரு பைசாத் தமிழனிவனு தவானென்பார் ஒரு பைசாத் தமிழருமை யறியாமாந்தர் ஒரு பைசாத் தமிழிலுண்மை யறிவாராயின் ஒரு கோடிப் பொன்னி தென்றுரைப்பர் மாதோ" பின்னர் ஓராண்டு கழித்து, 28.8.1908 ஆம் ஆண்டில் ஒரு பைசாவை நீக்கி விட்டு  "தமிழன்" என்ற பெயரில் இதழை நடத்தி வந்தார். தமிழகத்தில் அன்றைய காலத்தில் வடமொழியில் பெயர் சூட்டி தமிழ் இதழ்கள் வந்து கொண்டிருந்தன. அது மட்டுமின்றி இந்தியா, சுதேசமித்திரன் போன்ற ...