தந்தை செல்வா நினைவு நாள் 26.04.1977

தந்தை செல்வா நினைவு நாள்
26.04.1977

தமிழீமே தீர்வு...
தந்தை செல்வா இறுதி உரை!

தந்தை செல்வா என்றழைக்கப்படும் செல்வா நாயகம் அவர்கள் சிங்களருக்கு இணையாக தமிழருக்கு அதிகாரப் பகிர்வு  கேட்டு  தமிழரசுக் கட்சியைத் தொடங்கியவர். கூட்டாட்சி முறையை இலக்காக கொண்டு போராடி வந்தவர்.

சிங்கள அரசுகளோடு சில உடன்பாடுகளும் கண்டார். குறிப்பாக பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் போன்ற  ஒப்பந்தங்களும் சிங்களத் தரப்பில் கிழித்தெறியப்பட்டன. தமிழருக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் வகையில் சிங்கள அரசு முழுமையான சட்ட அமைப்பாக 1972ஆம் ஆண்டின் அரசமைப்பு நிறுவப் பட்ட பிறகு  இனி சிங்கள அரசோடு சேர்ந்து வாழ முடியாது என்று முடிவுக்கு வந்தார்.

தந்தை செல்வா  தலைமையில் அமைக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை மாநாட்டில் தனித் தமிழீழக் கோரிக்கையை எழுப்பியது.

முதன்மைத் தீர்மானங்கள்;

1.இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.

2.அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.

3.அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும்

(வட்டுக்கோட்டை தீர்மானம்,
14.5.1976)

தந்தை செல்வாவின் கோரிக்கையை ஏற்று தமிழீழ மக்கள் 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழீழமே தீர்வு என்பதை வாக்குபெட்டி மூலம் செலுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியை வெற்றி பெற வைத்தனர்.

தமிழீழ மக்கள்  வாக்கு சீட்டு மூலம் இட்ட  தமிழீழ கட்டளையை ஏற்று தந்தை செல்வா அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய இறுதி அரசியல் உரை இது தான்.

"இந்த நாட்டில் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த இரண்டு பிரதமர்களுடனும் தமிழர் பிரச்னைகுறித்து ஒப்பந்தம் செய்தேன்; ஆனால், அவர்கள் இருவருமே பின்னர் சிங்கள மக்களுக்குப் பயந்து அவ்வொப்பந்தங்களை நிறைவேற்றவில்லை. 

இந்நிலையில், சமஷ்டி கோரிய நாம், அக் கொள்கையினைக் கைவிட்டு, அடுத்த நிலைபற்றி நிதானமாக யோசித்தோம். தனிநாடு ஒன்றுதான் எமக்குள்ள ஒரேவழி என்ற முடிவுக்கு வந்தோம். 

தனிநாடு அமைப்பதென்பது சுலபமானதொன்றல்ல என்பது எமக்குத் தெரியும். எனினும், இந்த நாட்டில் நாம் சிங்கள மக்களின் பிடியிலிருந்து விடுபடவேண்டும்; அல்லது, அழிந்துபோகவேண்டும்.

‘நமது மூதாதையர் புத்திசாலிகளாக இருந்தனர். தமக்கென்று ஒரு நாட்டை அவர்கள் வைத்திருந்தார்கள்.

‘நாம் பிரிந்துபோவதை இந்த அரசாங்கம் ஏன் மறுக்கிறது என்பது தெரியவில்லை. இந்த அரசாங்கம் மறுத்தாலும் இனி வரப்போகின்ற ஒரு சிங்கள அரசாங்கம் எமது நாட்டைப் பிரித்துத் தரும். அயர்லாந்து நூறு வருடங்களுக்குமேல் போராடி பிரிந்துசென்றது. நாம் எமது முடிவை உலகநாடுகளுக்கு அறிவித்துவிட்டோம். எமது கோரிக்கைகளை அவை ஏற்றுக்கொள்ளும்.

‘சாத்வீகமான முறையிலேயே போராடுவோம். இந்த நாட்டில் நாம் உரிமைபெறுவோம்; அல்லது, அழிந்துபோவோம். இந்தப் பின்னணியில்தான் எமது கொள்கை இருக்கின்றது. எங்கள் எதிர்காலம் எங்கள் சிந்தனையிலேயே தங்கியிருக்கிறது.’

(19.11. 1976 தந்தை செல்வா பாராளுமன்றத்தில் ஆற்றிய இறுதி உரை)

தந்தை செல்வா காலத்தில் சட்ட வழிப்பட்ட போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் , ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழ மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையை ஏற்றுக் கொண்டு தமிழீழ இலட்சியத்தை அடைய இலட்சக்கணக்கனோர் தங்கள் உயிரை ஈகம் செய்தனர்.

சிங்கள அரசின் மயக்குமொழியான "அதிகாரப் பரவல் " என்ற மோசடி வார்த்தைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல்,  இன்றளவும் தமிழீழத்தை மட்டுமே தீர்வாக ஏற்றுக் கொண்டு தமிழீழ மக்களும், புலம் பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் போராடி வருகின்றனர் .

அதற்குக் காரணம் தந்தை செல்வா முன்மொழிந்த வட்டுக்கோட்டை பிரகடனமே! தமிழீழத்திற்கு மாற்றான எந்த ஒன்றையும் ஏற்க முடியாது ஏன்பதே தந்தை செல்வாவின் இறுதி நிலைப்பாடாகும்.

தந்தை செல்வா நினைவு நாளில் தமிழீழம் காண உறுதியேற்போம்!

- கதிர் நிலவன் 

Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்