வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது வெறுப்பு அரசியலா? தமிழர் உரிமை அரசியலா?

வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது வெறுப்பரசியலா? தமிழர் உரிமை அரசியலா?
===================================
மனுஷ்ய புத்திரனுக்கு மறுப்பு!
====================================

கவிஞர் மனுஷ்யபுத்திரன் அண்மையில் வெளிவந்த "ரயில்" திரைப்படத்தை பார்த்து விட்டு, இது வெறுப்பரசியலுக்கு எதிரான படமென்று புகழாரம் சூட்டியுள்ளார். 

தமிழ்நாட்டில் திமுகவை உருவாக்கிய அண்ணாதுரை வடவர்களுக்கு எதிராக பேசாத பேச்சா? ( எல்லாம் வாய்ச் சவடால் தான்!) 

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது, 
வடவர்கள் நல்லவருமல்ல; நம்மவர்களுமல்ல; 

 - என்று வெறுப்பு அரசியலை தொடங்கி வைத்ததே அண்ணாதுரை தான் என்று சொன்னால் திராவிட கத்துக்குட்டி மனுஷ்ய புத்திரன் ஒத்துக் கொள்வாரா? 

மதராசி என்று வட இந்தியர்கள் தமிழர்களை அழைக்க வில்லையா? பாண்டியா என்றால் திருடன் என்று தங்கள் திரைப்படங்களில் மலையாளிகள் காட்ட வில்லையா?

தமிழ் நாட்டில் புகுந்து குறைந்த கூலி என்ற பெயரில் தமிழர்களின் வேலைகளை பறித்து வருபவர்கள் வட இந்தியர்கள். தற்போது தமிழர்களின் பாரம்பரிய வேளாண் தொழிலுக்குள்ளும் புகுந்து விட்டார்கள்.

அது மட்டுமல்ல; கொலை, கற்பழிப்பு, நகைத் திருட்டு, காவல் துறையினரை தாக்குவது என்று அத்தனை குற்றச் செயல்களிலும் ஈடுபடுபவர்களும் அவர்கள் தான்.

இந்தியாவிற்கு வெளியே தமிழர்கள் வசித்து வருவது உண்மைதான். ஆனால் மிகை எண்ணிக்கையில் அவர்கள் ஒருபோதும் இல்லை. 

ஆனால், தமிழ்நாட்டில் ஒரு கோடி வட இந்தியர்கள் இருக்கிறார்கள். இது மிகை எண்ணிக்கை இல்லையா? இவர்களுக்கு ஓட்டுரிமை, வாக்குரிமை கொடுப்பதன் காரணம் என்ன ? மோடி ஒரே இந்தியா - ஒரே ரேசன் என்று முழங்குவதன் நோக்கம் என்ன? 

தமிழ் நாட்டை கலப்பினத் தாயகமாக மாற்றுவதுதான் தில்லி ஆட்சியாளர்களின் திட்டமாகும்.

எந்த ஒரு வட இந்தியத் தொழிலாளியும் ஒட்டிய வயிற்றோடு இங்கு வருவதில்லை. தானொரு இந்தியன் என்றொரு தலை கனத்தோடு வருகிறான்.
தமிழர்கள் இந்தியாவிற்குள் இருந்து கொண்டு இந்தி தெரியாமல் இருப்பதை அவமானமாகக் கருதுகிறான். 

வட இந்தியர்களின் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மனோபாவத்தை ரயில் போன்ற திரைப்படங்கள் ஒருபோதும் தண்டவாளம் ஏற்றாது.

தொடர் வண்டிகளில் பயணச் சீட்டு எடுக்காமல், முன் பதிவு பெட்டிகளில் ஏறி அமர்ந்து பெண்களையும், குழந்தைகளையும் நிற்க வைத்து அட்டூழியம் செய்திடும் வட இந்தியர்களைப் பற்றி சொல்லாமலே இந்த ரயில் வேகமெடுத்து ஓடும்.

தமிழன் என்றால் குடிகாரன், சோம்பேறி, உடலுழைப்புக்குத் தயாராக இல்லாதவன், வடவர்கள் மீது வன்மம் கொண்டவன் என்ற போலியான சித்தரிப்பை திட்டமிட்டு சில தமிழர் விரோத சமூக ஊடகங்களும், ரயில் போன்ற திரைப்படங்களும் உருவாக்க முயல்கின்றன.

தமிழர்கள் அனைவரும் குடிகாரர்கள் என்று குற்றம் சாட்டும் தமிழர் விரோத கும்பல்கள் திராவிட ஆட்சியாளர்கள் நடத்தும் டாஸ்மாக் கடைகளைப் பற்றியோ, மதுபானங்களை தயாரித்து கோடிக்கணக்கில் கொள்ளை இலாபம் ஈட்டும் திராவிடத் திமிங்கலங்களைப் பற்றியோ ஒரு போதும் கை நீட்டி பேச மாட்டார்கள்.

வட இந்தியர்களால் வேலை இழப்புக்கு ஆளான தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று வீதிக்கு வந்து போராடக் கூடாது என்பதில் கொள்கை வேறுபாடு கொண்ட காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், திராவிட வாதிகள், தலித்திய வாதிகள் எல்லாம் இதில் ஒன்று பட்டு நிற்கின்றனர்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உயர்ந்த இலட்சியத்தை சொன்னவர்கள் தமிழர்கள் தான். தமிழர்கள் கூறியதை தமிழர்களுக்கே சொல்லி இவர்கள் பாடம் நடத்துவது நகைப்பிற்குரியது. 

அதே தமிழர்கள்தான் "விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு" என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் அதை வசதியாக மறைத்து விடுவார்கள். 

உலகமெங்கும் எல்லா நாடுகளிலும் பிற மொழி பேசும் நாட்டு மக்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மைதான். அங்கெல்லாம் குடியேறுவதற்கு கட்டுப்பாடுகள் உண்டு.

வரம்புக்கு மீறிய வெளியார் ஆதிக்கத்தை தமது இறையாண்மை ( sovereignty )மூலம் கட்டுப்படுத்துகிறார்கள். 

இந்தியா என்பது ஒரே நாடு கிடையாது. பல்வேறு தேசிய இனங்கள் வாழும் துணைக் கண்டம். 1956இல் மொழி வழி மாநிலங்கள் நடத்திய போராட்டங்கள் அந்தந்த தேசிய இனங்களின் தாயகத்தை காப்பதற்காக நடைபெற்ற போராட்டங்களாகும். ஆனால் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் இறையாண்மை இல்லை. இது தமிழ்நாட்டிற்கும் பொருந்தும். 

தமிழ்நாடு தமிழருக்கே என்றால் என்னுடைய மொழி, இனம், தாயகம் மூன்றும் சேர்ந்ததுதான். தமிழினம் தன்னை தற்காத்துக் கொள்ள , வெளியார் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு வட கிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல குறைந்த பட்சம் உள் நாட்டு அனுமதிச் சீட்டு வழங்கப் பட வேண்டும் என்கிறோம்.

மனுஷ்ய புத்திரன் திமுகவில் உட்கார்ந்து கொண்டு தமிழர்களுக்கு வெறுப்பு அரசியல் குறித்து பாடம் எடுக்க வேண்டாம். நீங்கள் வட இந்தியர்களை பற்றி என்னென்ன பேசி , வெறுப்பு அரசியலை வளர்த்தீர்கள் என்பது தமிழர்களுக்கு தெரியும். 

திமுக தில்லி அரசியலோடு தன்னை இணைத்துக் கொண்டு, இந்திய அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமான அதானி, அம்பானிகளோடு, பின்னிப் பிணைந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகி விட்டது.

அதாவது தமிழ் நாட்டு உரிமைகளை தில்லி ஆட்சியாளர்களிடம் திமுக ஒப்படைத்து விட்டது என்பதே இதன் பொருளாகும்.

அதனால் கடந்த காலத்தில் திமுக பேசிய வெறுப்பு பேச்சுகளுக்கு வேலையில்லாமல் போய் விட்டது என்பதே உண்மை. மனிதர்களுடையே அன்பை போதிக்கும் மனிதப் புனிதர் போல மனுஷ்ய புத்திரன் வேடம் தரிக்க வேண்டாம்.

தமிழ் நாட்டு வேலைகள் தமிழருக்கே என்பது வெறுப்பு அரசியல் அல்ல; அது தமிழர் உரிமை மீட்கும் இலட்சிய அரசியல் என்பதை மனுஷ்ய புத்திரன் காதில் ஓங்கி ஒலிப்போம்!

- கதிர் நிலவன்

Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்