திராவிடர் என்பது பிராமணரை குறிக்கும்! - துக்ளக் குருமூர்த்தி
பிராமணர்கள் திராவிடர்களே!
- "துக்ளக்" குருமூர்த்தி ஒப்புதல்!
=====================================
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு மூளையாகச் செயல்படும் "துக்ளக்" ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் திராவிடர்கள் என்றால் பிராமணர்களை குறிக்கும் சொல்தான் என்று ஒப்புக் கொண்டு "துக்ளக்" ஏட்டில் (9.10.2019 - பக்கம் 9, பெட்டிச் செய்தி) எழுதியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் பல ஆண்டுகளாக திராவிடர் என்பது பிராமணர்களை குறிக்கும் சொல் என்று தக்க சான்றுகளோடு கூறி வருகிறார்.
குறிப்பாக பிராமின் டுடே இதழ் பிராமணர்களை திராவிடர் என்று அழைக்கிறது.
ஆந்திர புதூரு பிராமணர்களும் தங்களை திராவிடப் பிராமணர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.
தமிழ் நாட்டில் உள்ள சென்னையில் "தென்கனரா திராவிட பிராமணர் சங்கம்" என்ற அமைப்பே உள்ளது.
பிரித்தானிய கலைக் களஞ்சியம் "தென்னாட்டு பிராமணர்களை மட்டும் குறிக்கும் சொல் தான் திராவிடர் என்பதாகும், கெடுவாய்ப்பாக பிற்காலத்தில் மரபு வழிப்பட்ட மண்ணின் மக்களை குறித்தது" என்று கூறுகிறது.
இவையெல்லாம் ஐயா மணியரசன் தரும் தக்கச் சான்றுகள்.
தமிழர் என்றால் அதில் பிராமணர்கள் வந்து சேருவார்கள். திராவிடர்கள் என்றால் பிராமணர்கள் வரமாட்டார்கள் என்று பெரியார் கூறி வந்தார். அதற்கு ஆதரவாக எந்த வரலாற்றுச் சான்றையும் அவர் காட்ட வில்லை. அவர் வழி வந்த பெரியார் இயக்கத்தவரும் இதுவரை எந்த மூலச் சான்றையும் காட்ட முன் வரவில்லை.
இப்போதும் கிரிக்கெட் வீரர் இராகுல் திராவிட், சமசுகிருத பேராசிரியர் மணி திராவிட் போன்ற பிராமணர்கள் தங்களை திராவிடர்கள் என்பதை மறுக்க வில்லை.
அந்த வரிசையில் தற்போது ஆர்.எஸ். எஸ். இயக்கத்தின் நெருங்கிய கூட்டாளி துக்ளக் குருமூர்த்தி அவர்கள் சேர்ந்துள்ளார்.
திராவிடர் என்போர் பிராமணர்களே என்று துக்ளக் இதழில் கேள்வி பதில் பகுதியில் கூறியுள்ளார். ஆரியமும், திராவிடமும் ஒரு கரு இரட்டையர்கள் என்பது குருமூர்த்தி மூலம் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதியதை அப்படியே தருகிறோம்.
யார் திராவிடன்? என்று சா. சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரத்திலிருந்து கேட்டுள் ளார்.
கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங் கரரை, கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் பிறந்த அபிநவ சங்கரர் 'திராவிட சிசு' (திராவிடத்தின் குழந்தை ) என்று அழைத்தார். கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் திராவிட சிசு என்றால், ஆதிசங்கரர் உள்பட திராவிட தேசத்தில் பிறந்த அனைவரும் திராவிடர்கள்தான்.
ஆரியர்கள் என்று எந்த பிராமணர்களை கழகங்கள் அழைக்கின்றனவோ, அவர்களே திராவிட பிராமணர்கள் என்றும், கௌட பிராமணர்கள் என்றும் பிரிக்கப்படுகிறார்கள். விந்திய மலைக்கு வடக்கே இருப்பவர்களைக் கௌட பிராமணர்கள் என்றும், அதற்கு தெற்கே இருப் பவர்களை திராவிட பிராமணர்கள் என்றும் அழைக்கிறார்கள்.
திராவிட தேசத்தில் இருக்கும் பிராமணர்களை ஐந்தாகப் பிரித்து, பஞ்ச திராவிடர்கள் என்று அழைக்கிறார்கள். கௌட தேசத்தில் இருக்கும் ஐந்து வகையான பிராமணர்களை பஞ்ச கௌட பிராம ணர்கள் என்று அழைக்கிறார்கள்.
தமிழ், கன்னட, தெலுங்கு, கேரள, மகாராஷ்டிர, குஜராத், மார்வாரி, குஜராத்தி பிராமணர்களை, பஞ்ச திராவிடர்கள் என்றும், கௌடா, கன்யக்புஜா, மைதிலி, சரஸ்வதி, உத்கல முதலான ஐந்து வகையான பிராமணர் களை பஞ்ச கௌடர்கள் என்றும் அழைக்கிறார்கள். இந்த விவரங்கள் ஸ்கந்தபுராணத்தில் இருக்கின்றன.
சம்ஸ்க்ருதப் புலவரான கல்கணன் எழுதிய ராஜதரங்கிணி என்கிற காஷ்மீர் மற்றும் மேற்கிந்திய ராஜ வம்சங்களைப் பற்றிய சரித்திர புத்தகத்திலும் இது இருக்கிறது. கௌடம், திராவிடம் என்று பாரத தேசம் இரண்டு பகுதிகளாக இருந்தது. வெள்ளைக் காரர்கள் அதை இனப் பிரிவாக மாற்றினார்கள் என்பது பலருடைய கருத்து. திராவிடன்என்றால் விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவன் என்பதுதான் சரி என்று தோன்றுகிறது.
( துக்ளக் - 9.10.2019)
திராவிடன் என்றால் பார்ப்பான் பயந்து நடுங்கி காலுக்கிடையில் சிறுநீர் கழிப்பான் என்று திராவிடர்கள் புருடா விட்டுக் கொண்டிருக்குக்கின்றனர்.
திராவிடன் என்றால் பார்ப்பானுக்கு பன்னீர் சோடா சாப்பிடுவது போன்றது என்ற உண்மையை இனியாவது திராவிட பாடி சோடாக்கள் உணர்வார்களா?
Comments
Post a Comment