தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடுவதால் உன் தமிழ்த்தாய்க்கு கொம்பு முளைக்குமா? - ஈ.வெ.இராமசாமி
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுவதால் உன் தமிழ்த் தாய்க்கு கொம்பு முளைக்குமா?
- ஈ.வெ.ராமசாமி
=====================================
இங்கு கூட தமிழ் தாய் வாழ்த்துப் பாடினார்கள். - எதற்காக ? நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்து விடுமா ? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால் உடனே தமிழ் தாய் வாழ்த்து .
ஒரு முட்டாள்தனத்துக்குப் பதில் இன்னொரு முட்டாள்தனமா ? நாறுகிறது எடுத்தெறி என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்று கேட்பதா ?
ஏன் வைக்க வேண்டும் - அந்த இடத்தில் சாணியைப் போட்டு மெழுக வேண்டியது தானே ?
உன் தமிழ்த்தாய் 2000 வருடமாக இருக்கிறாளே ! - அதனாலே உனக்கு என்ன லாபம் ? கல்வி வளர்ந்ததா ? தகுதி வளர்ந்ததா ? தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுகிறாயே ! எந்த வெள்ளைக்காரனாவது "இங்கிலீஷ்" வாழ்த்துப் பாடுகிறானா?
வெங்காய வாழ்த்து
=============================
வேண்டுமானால் அரசு வாழ்த்துப்பாடேன். உன்னை இந்தத் தகுதிக்கு உயர்த்திய அரசாங்கத்தை நன்றியோடு வாழ்த்துப் பாடினாலும் பொருளுண்டு. அதை விட்டு விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து, வெங்காய வாழ்த்துப் பாடுகிறாயே ? இது புத்திசாலித்தனம் ஆகுமா ?
- ஈ.வெ.ராமசாமி
விடுதலை (13.4.72)
(18 .3 .72ல் நன்னிலம் ஊராட்சி ஒன்றியம், சொரக்குடி பஞ்சாயத்து துவக்கப்பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் ஈ.வெ.இராமசாமி பேசியது )

Comments
Post a Comment