Posts

தமிழ்நாட்டு வட எல்லையை மீட்க வேண்டும்! - தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார்

Image
தமிழ்நாட்டு வட எல்லையை மீட்க வேண்டும்! - தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார் ============================= அன்றைய சென்னை மாகாணத்தில் சென்னை மற்றும் சென்னைக்கு அப்பால் இருந்த திருவேங்கடம், திருக்காளத்தி, நெல்லூர், சித்தூர் போன்ற தமிழர் பகுதிகளை ஆந்திரர்கள் அபகரிக்க முயன்றனர். இதற்கு எதிராக 1946 ல் தமிழரசுக் கழகத்தை தோற்றுவித்து ம.பொ.சிவஞானம் போராட்டத்தை தொடங்கினார். இதற்கு வலு சேர்க்கும் வகையில் சங்க இலக்கியம்,  வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டு ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வடக்கெல்லை பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார் அவர்கள். 1948 ல் அவர் எழுதிய "தமிழ்நாட்டு வட எல்லை" நூல் வடக்கெல்லை மீட்புப் போராட்டத்திற்கு பேருதவி புரிந்தது. 103 பக்கங்கள் கொண்ட அந்நூலின் கடைசி அத்தியாயத்தில் " " தமிழர் கடமை " என்ற தலைப்பில் எழுதிய பகுதியை தந்துள்ளேன். மா.இராசமாணிக்கனார் அவர்கள் ஆந்திரர்களை தமது சொந்த இனத்து சகோதரர்களாக கருதிய அதே வேளையில், தமிழர்களுக்குரிய தாயகப் பகுதிகளை மீட்க வேண்டும் என்ற வேட்கையை அந்நூலில் வெளிப்படுத்தியிர...

மே நாள் வாழ்த்துகள்! தமிழராய் இணைவோம்!

Image
தமிழராய் இணைவோம்!  மே நாள் வாழ்த்துகள்!  ============================ உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்!  - என்று தமிழ்நாட்டில் உள்ள இடது- வலது பொதுவுடைமையர் மே நாள் கொடியேற்ற - கூட்ட நிகழ்வுகளில் முழங்குகின்றார்கள். இது தவறான மொழி பெயர்ப்பாகும்.  கார்ல் மார்க்ஸ் - பிரடெரிக் ஏங்கல்ஸ் வெளியிட்ட பொதுவுடைமைக் கட்சி அறிக்கை செர்மன் மூலத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதில்  ”Working Men of All Countries, Unite!” என்று தான் உள்ளது.  அதன் பிறகு பிரெடெரிக் ஏங்கெல்ஸ் ஒப்புதலுக்குப் பிறகு முதல் ஆங்கில மொழிபெயர்ப்பில் ”Workers of all countries, unite!” என்று மொழி பெயர்க்கப்பட்டது. இது தமிழில் இப்படித்தான் மொழி பெயர்த்து  இருக்க வேண்டும். “அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!” பாட்டாளிக்கு மொழியும் உண்டு, இனமும் உண்டு, தேசமும் உண்டு என்பதை ஏற்கும் வகையில் தான் "அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ! " என்று விளிக்கப்படுகிறது. ஆனால் பாட்டாளிக்கு மொழி இல்லை, இனமில்லை, தேசமில்லை என்று இங்குள்ள இடது- வலது பொதுவுடைமைக் கட்சிகள் கூப்பாடு போடுவது...

கண்ணகி கோயிலை தமிழருக்கே சொந்தமாக்குவோம்!

Image
கண்ணகி கோயிலை தமிழருக்கே சொந்தமாக்குவோம்! =========================== சித்திரை முழுநிலவு நாளில் உறுதியேற்போம்! ============================ தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு ஆற்றுநீர் உரிமையை பறிக்கும் மலையாளிகளின் அரம்பத்தனத்தை அனைத்துத் தமிழரும் அறிவோம். ஆனால் தமிழர்களுக்குச் சொந்தமான கண்ணகி கோயிலை அபகரிக்க முயலும் மலையாளிகளின் சூழ்ச்சியை தமிழர்கள் இதுவரை அறியாதவர்களாகவே உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளன்று தேனி மாவட்டம் கூடலூர் மலையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். அங்கு கேரள அரசின் கெடுபிடி காரணமாக முழுச்சுதந்திரோடு தமிழர்கள் வழிபாடு நடத்த முடியாது . ஒவ்வொரு ஆண்டும் இடுக்கி மாவட்ட ஆட்சியரும், தேனி மாவட்ட ஆட்சியரும் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தான் ஒரு நாள் மட்டும் "கண்ணகி சித்திரைப் பெருவிழா" அங்கு நடத்தப்படுகிறது. மொத்தத்தில் 9 மணி நேரம் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது. அங்கு மலையாள பக்தர்களிடம் காட்டும் பரிவு தமிழக பக்தர்களிடம் காட்ட மாட்டார்கள். காரணம் கண்ணகி கோயில் தங்கள் நிலப்பகுதியில் இருப்பதால் தங்களுக்கே சொந்...

தமிழ் ஊர்ப் பெயர்களை அழித்த நீதிக்கட்சி முதல்வர் பொப்பிலி அரசர் !

Image
தமிழறிஞர் மு.வரதராசனார் பிறந்த நாள் 25.04.1912 ============================= தமிழ் ஊர்ப்பெயர்களை தெலுங்கில் மாற்றிய பொப்பிலி அரசர்! ============================= 1911ஆம் ஆண்டு ஏப்ரல் வரைக்கும் வடவேங்கடம் தமிழ்நாட்டின் எல்லையாக இருந்தது. ஆங்கிலேய அரசு நிர்வாக வசதிக்காக வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருத்தணி, புத்தூர், சித்தூர், திருப்பதி, குப்பம் ஆகிய வட்டங்களை இணைத்து சித்தூர் பெயரில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது. அப்போது ஆந்திரா மகாசபை அமைத்து “விசாலா ஆந்திரம்” கேட்டுப் போராடிய தெலுங்கர்கள் சித்தூர் பகுதியை தங்களுக்குரியதாக வாதாடி வந்தனர். இதை தமிழர்களுக்காக பாடுபடுவதாக கூறிக் கொண்ட நீதிக்கட்சி ஆந்திரர்களும் கண்டிக்க வில்லை. குறிப்பாக சென்னை மாகாண நீதிக்கட்சி முதல்வர் பொப்பிலி அரசர் (1932-1936) சித்தூர் மாவட்ட தமிழ் ஊர்ப் பெயர்களை தெலுங்கில் மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். ராவு ஸ்வச்சல்லபதி ராம்கிருஷ்ணா ரங்காராவ் என்ற பொப்பிலி அரசர் என்பது இவரின் முழுப்பெயராகும். பதிவுத்துறை, அஞ்சல் துறை இவ்விரண்டிலும் தெலுங்குப் பெயர்களை புகுத்தி தமிழ் ஊர்ப்பகுதிகளை அழித்ததாக தனது ‘மொழிப்...

அன்னை பூபதி நினைவு நாள் 19.04.1988

Image
உண்ணாநிலையில் உயிர் துறந்த 'உலகின் முதல் பெண் போராளி' அன்னை பூபதி நினைவு நாள் ==============================  19.4.1988 பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். இசைப்பிரியாவின் கதறல் காணொளி கண்டும் இந்திய அரசின் பேய் மனம் இரங்க மறுத்தது.  அன்னை பார்வதியம்மாள் சிகிச்சைக்கு வந்த போதும் இந்திய அரசின் கல் நெஞ்சம் கரையவில்லை. தமிழகம் வந்த பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியது.  தமிழ்ப்பெண்களை மதிக்கத் தெரியாத இந்திய அரசின் இந்த இழிகுணம் நேற்று முளைத்ததல்ல; அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே முளைத்த குணம். அன்னை பூபதியம்மாளின் உயிரைப் பறித்த வரலாற்றை அறிவதன் மூலம் இதனை உறுதிப்படுத்தவும் முடியும். 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைக்கும் வி.பு. போராளிகளுக்கும் ஆயுதப் போர் நடைபெற்று வந்த கால கட்டம்.  அன்று காந்திய நாட்டிற்கு அகிம்சை வழியில் பாடம் புகட்ட விரும்பி உண்ணாநிலை கொண்டு உயிர் துறந்தவன் திலீபன்.  அவன் வழியில் உண்ணாநிலையை தொடங்கி உயிர் துறந்த உலகின் முதல் பெண்மணி தான் அன்னை பூபதியம்மாள். திலீபன் உண்ணாநிலைக்கும் அன்னை பூபதியம்மாள் உண்ணாநிலைக்கும் ஒரே வேறுபாடு த...

ரேகை சட்டத்தை எதிர்த்துப் போராடிய பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவு நாள் 03.04.1920

Image
குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்புப்போரில் உயிர் நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவு நாள் 3.4.1920  ============================== ஒரு மனிதனின் வாழ்நிலையை அவனது பிறப்பு தான் தீர்மானிக்கும் என்று மனுதர்மச் சட்டம் கூறுகிறது. அதே கருத்தைத் தான் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டமும் கூறுகிறது. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரான்சு, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் சுரண்டலுக்கு எதிராகவும், சமூகப் பொருளாதார மாற்றத்திற்காகவும் கலகங்கள் வெடித்தன. பிரெஞ்சு புரட்சியால் உத்வேகமடைந்த மக்களைக் கண்டு நடுங்கிய மேலைய வல்லரசுகள் முதலில் சுதந்திரமான வாழ்வியலைக் கொண்ட நாடோடி இனத்தவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர விரும்பின. அதன் பொருட்டு அம்மக்களைச் சமூக வாழ்வுக்கு அந்நியமானவர்கள் என்று கூறி பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களை கொண்டு வந்தன. இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றிய பிரித்தானிய அரசு அதே வழியில், தனது ஆதிக்கத்திற்கு அடிபணியாத மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகள், நாகரிகமற்றவர்கள், படிப்பறிவற்றவர்கள் என்றெல்லாம் முதலில் இழிவுபடுத்தத் தொடங்கியது. பின்னர் அம்மக்கள் மீ...

எங்கள் பரம்பரை விஜயநகரப் பரம்பரை என்று ஈ. வெ. ரா. சொல்லும் போது நாங்கள் மட்டும் மூவேந்தர் பரம்பரை என்று சொல்லக் கூடாதா?

Image
எங்கள் பரம்பரை விஜய நகரப் பரம்பரை என்று ஈ.வெ.ரா. சொல்லும் போது , நாங்கள் மூவேந்தர் பரம்பரை என்று பேசக் கூடாதா? தோழர் திருமாவளவனுக்கு பதில்! ============================= தோழர் திருமாவளவன் தமிழ் மன்னர்களை சீண்டும் வேளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வில் தேவையில்லாமல் மூவேந்தர்களை வம்புக்கு இழுத்துள்ளார். தமிழ் மன்னர்கள் காலத்தில் தான் நாடு குட்டிச் சுவர் ஆனது. வடமொழியும், பிராமண ஆதிக்கமும் வந்தது , இராஜராஜ சோழன் பெயர் தமிழ்ப் பெயரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்.  பல்லவர்கள் காலத்தில் பிராமண ஆதிக்கமும், வடமொழியும் கோலோச்சின. பல்லவர்கள் காலத்திற்கு பின் வந்த தமிழ் மன்னர்கள் காலத்தில்தான் பிராமண ஆதிக்கமும், வடமொழி ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்பட்டது . இந்த உண்மையை எத்தனை முறை வரலாற்று ஆதாரங்களோடு சொன்னாலும் கோயபல்ஸ் வேலையை திருமாவளவன் கைவிடுவதாக இல்லை. மூவேந்தர்கள் மீது அவதூறு செய்வதில் ஈ.வெ.ரா. பேசிய திராவிடத்திற்கு சற்றும் சளைத்ததல்ல திருமாவளவன் பேசும் தலித்தியவாதம்.  இராசராச சோழனுக்கு அருண்மொழி வர்மன் என்ற பெயரும், இராசேந்திர சோழனுக்கு மது...