தமிழ்நாடு விடுதலைக் குரல் சி.பா.ஆதித்தனார்
"தமிழ்நாடு விடுதலைக் குரல்" சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் 27.9.1905 1938இல் முதல் இந்தி எதிர்ப்புப் போரில் "தமிழ்நாடு தமிழருக்கே " முழக்கம் பிறந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த முழக்கம் "சுதந்திரத் தமிழ்நாடு" முழக்கமாக ஒலித்தது. அதற்கு காரணமானவர் 'தமிழர் தந்தை' எனக் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனார் ஆவார். சி.பா . ஆதித்தனார் திருநெல்வேலி மாவட்டம் காயாமொழி என்ற ஊரில் 27.9.1905 இல் சிவந்தி ஆதித்தர்- கனகம் அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ஆதித்தனாருக்கு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். மூத்தவர் பெயர் தையல்பாசு ஆதித்தனார். இளையவர் பெயர் தனஞ்செய ஆதித்தனார். மற்ற இரு தங்கைகள் பெயர் வாமசுந்தர தேவி, கமலம் அம்மையார். ஆதித்தர்கள் என்னும் சொல் வரலாற்று பின்னணி கொண்டது. பிற்கால பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு திருநெல்வேலியில் பாளையக்காரர்களின் ஆட்சி முறை ஏற்பட்டது. மற்ற பாளையக்காரர்கள் எல்லாம் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு அஞ்சி நடுங்கிய காலத்தில் அவரை தீரத்தோடு போராடி அடக்கியாண்டவர்கள் தான் ஆதித்தர்கள். இந்தப் பெயரையே சி.பா.ஆதித்தனாரின் முன...