Posts

Showing posts from September, 2023

தமிழ்நாடு விடுதலைக் குரல் சி.பா.ஆதித்தனார்

Image
"தமிழ்நாடு விடுதலைக் குரல்" சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் 27.9.1905 1938இல் முதல் இந்தி எதிர்ப்புப் போரில் "தமிழ்நாடு தமிழருக்கே " முழக்கம் பிறந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த முழக்கம் "சுதந்திரத் தமிழ்நாடு" முழக்கமாக ஒலித்தது. அதற்கு  காரணமானவர் 'தமிழர் தந்தை' எனக் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனார் ஆவார். சி.பா . ஆதித்தனார் திருநெல்வேலி மாவட்டம் காயாமொழி என்ற ஊரில் 27.9.1905 இல் சிவந்தி ஆதித்தர்- கனகம் அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ஆதித்தனாருக்கு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். மூத்தவர் பெயர் தையல்பாசு ஆதித்தனார். இளையவர் பெயர் தனஞ்செய ஆதித்தனார்.  மற்ற இரு தங்கைகள் பெயர் வாமசுந்தர தேவி, கமலம் அம்மையார். ஆதித்தர்கள் என்னும் சொல் வரலாற்று பின்னணி கொண்டது. பிற்கால பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு திருநெல்வேலியில் பாளையக்காரர்களின் ஆட்சி முறை ஏற்பட்டது. மற்ற பாளையக்காரர்கள் எல்லாம் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு அஞ்சி நடுங்கிய காலத்தில் அவரை தீரத்தோடு போராடி அடக்கியாண்டவர்கள் தான் ஆதித்தர்கள். இந்தப் பெயரையே  சி.பா.ஆதித்தனாரின் முன...

ஜெய்கிந்த் முழக்கம் தந்த தமிழர் செண்பகராமன் பிள்ளை

Image
இன்று செப் 15 பிறந்த நாள். ----------------------------------------------- தமிழர்களின் விடுதலை வேட்கைக்கு இவர் ஒரு எடுத்துக் காட்டு. ஹிட்லரையே மன்னிப்புக் கேட்க வைத்த தமிழன். அதனாலேயே உயிரிழந்த வீரன். செண்பகராமன் பிள்ளை. (15-09-1891 26-05-1934) மிதவாதத்தை நம்பாத நேதாஜி, கடல் தாண்டிச் சென்று படை திரட்டுவதற்கு முழு முக்கிய காரணமாக இருந்தவர் செண்பகராமன் பிள்ளை. நேதாஜி தொடர்பான ஆவணங்கள், மக்கள் முன்பு ரகசியம் உடைத்து விரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம், அண்மையில் நாடு தழுவிய அளவில் எழுந்தது. ஆனால், நேதாஜிக்கே வழிகாட்டியாக இருந்த, சுதந்திரத்திற்காக போராடிய, கற்பனைக்கும் எட்டாத வீரம் பொதிந்த செண்பகராமன் பிள்ளை தொடர்பான விஷயங்கள் சொந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் போனது எவ்வாறு?… 1914ஆம் ஆண்டு எம்டன் என்ற மகா நாசகரக் கப்பலை இந்தியாவுக்கு கொண்டு வந்து, பிரிட்டிஷ் இந்தியா மீது தாக்குதல் தொடுத்தார் செண்பகராமன் பிள்ளை. திருவனந்தபுரத்தில் பிறந்து, ஜெர்மனியில் தங்கி, சொந்த நாட்டின் சுதந்திர சுவாசத்திற்காக இயங்கி வந்த பிள்ளை, இந்தியர்களை மோசமாக விமர்சித்த ஹிட்லரை முகமுகமாக எதிர்த்...

செப்: 11 தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் பிறந்தநாள்

Image
“தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கம் பிறந்த நாள் 11.9.1938 1938ஆம் ஆண்டு தமிழகப் பள்ளிகளில் கட்டாய இந்தியை இராசாசி கொண்டு வந்து புகுத்தினார். அதனை எதிர்த்து முதன் முதலில் குரல் கொடுத்தவர்கள் தமிழறிஞர்கள் ஆவார்கள். 10.8.1937இல் கட்டாயப் பாடத் திட்டத்தை இராசாசி அறிவித்த போது தஞ்சை மாவட்டம் கரந்தை தமிழ்ச்சங்கம், திருவையாற்றுச் செந்தமிழ்க்கழகம் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. 27.8.37இல் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தமிழவேள் உமா மகேசுவரனார் தலைமையில் கட்டாய இந்தி எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. 5.9.1937இல் சென்னையில் நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணாத்துரை ஆகியோர் பேசினர். 28.5.1938இல் இந்தி கட்டாய பாட உத்தரவை எதிர்த்து திருச்சியில் மந்திராலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தியைக் கட்டாய பாடமாக வைக்கப் பெறும் பள்ளிக் கூடங்கள் உள்ள ஊர்களுக்குச் சென்று பரப்புரை செய்ய இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்கப்பட்டது. வாரியத் தலைவராக பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களும், அதன் உறுப்பினர்களாக த.வே. உமா மகேசுவரனார், ...

தமிழ் நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்

Image
தமிழ் நாடக உலகின் தந்தை தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாள்  07.09.1867 “நாடக உலகின் இமயமலை“ என்று என்.எஸ். கலைவாணர்  அவர்களால் வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றை  இன்றைய இளம் தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.  தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை இவரது காலத்துக்கு முன் இவரது காலத்திற்கு பின் என்று பிரித்துப் பார்க்கும் அளவிற்கு தமிழ் நாடகங்களில் இவரது பங்கு அளப்பரியது. தமிழ் நாடக தலைமை ஆசிரியர், மறு மலர்ச்சியாளர், தமிழ் நாடக விடிவெள்ளி என்றெல்லாம் கொண்டாடப்பட்டு வருபவர் தான் தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள். இவரைப்பற்றி ஒளவை தி.க.சண்முகம் அவர்கள் கூறும்போது, "தென்பாண்டி நாட்டின் துறைமுக நகரங்களில் ஒன்றான தூத்துக்குடியிலே, வெள்ளையரை விரட்டியடித்த வெள்ளையத் தேவன் பரம்பரையிலே போரில் புறமுதுகு காட்டாத வீர மறக்குடியிலே தாமோதரக் கணக்கப்பிள்ளை என்பாரின் செல்வத் திருமகனாகப் பிறந்தார் சங்கரதாஸ் சுவாமிகள்." என்பார். 1867-ம் ஆண்டு  செப்டம்பர் 7  ஆம் தேதி பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், நாடக நடிகராக தன் வாழ்க்கையைத் துவக்கினார். 1918-ஆம் ஆண...