Posts

Showing posts from February, 2025

பிப்: 21 உலகத் தாய்மொழி நாள்

Image
பிப்.21: #உலகத்தாய்மொழிநாள் தெற்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடல் பிரதேசத்தில் உள்ள தாஜிக்ஸ்தான் மலைகிராமம் ஒன்றில் பிறந்தவர் அலீயெவா. அவரது தாய் மொழி அவார். அதற்கு வரி வடிவம் கிடையாது. 1930-களில்தான் இதற்கு என புது வரி வடிவம் உருவாக்கப்பட்டது. ஆகவே, எழுத்து மரபு இம்மொழிக்கு கிடையது. வாய்மொழி மரபைச் சேர்ந்த பாடல் களும், கதைகளும் மட்டுமே அவார் மக்களிடம் இருந்தன. பள்ளி வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்து, பின்பு ரஷ்யாவின் மிகமுக்கிய கவிஞர்களில் ஒருவராக உயர்ந்தார் அலீயெவா. அவார் மொழியின் மகத்தான கவி ரசூல் கம்சுதேவ். ‘நாளை அவார் மொழி மடியுமானால் இன்றைக்கே நான் இறந்து போவேன்’ - எனப் பாடியவர் ரசூல். ஒருமுறை ரசூல் கம்சுதேவ் இத்தாலியப் பயணத்தின்போது ஒரு வணிகர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்று இருந்தார். அந்த வணிக நண்பர் இனிமையாகப் பேசி, உபசரித்து பரிசுகள் எல்லாம் கொடுத்து அனுப்பி வைத்தார். ஊர் திரும்பியதும் வணிகரின் தாயைச் சந்தித்து அவரது மகனைச் சந்தித்த நிகழ்வைப் பற்றி எடுத்துக் கூறி விருந் தோம்பலுக்கு நன்றி கூறினார் ரசூல். வணிகரின் தாய் ரசூலிடம் ‘‘என் மகன் உங்களோடு அவார் மொழியில் பேசினானா?’’ என்று ஒரே...

பிப்.21: உலகத் தாய்மொழி நாள்

Image
பிப்.21: #உலகத்தாய்மொழிநாள் =============================== தமிழே நம் குறி! குறளே நம் நெறி! மொழி விடுதலை என்பது ஒரு தேசிய இனத்தின் தாயக விடுதலையோடு இணைந்தது. வங்காள தேசம் பாகிஸ்தானோடு இணைந்து இருந்த 1952ஆம் ஆண்டில் மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் மீது உருது மொழியைத் திணித்தது.  அந்த மொழித் திணிப்பை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தானில் போராடினார்கள். வங்க மொழி காக்கும் போரில் 11 வங்காளிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். வங்கதேச மக்கள் மொழிப் போராட்டத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தாயக விடுதலைக்காகப் போராடி வெற்றியும் கண்டனர். வங்காள தேசம் தனிநாடாக உருவெடுத்தது.  பிறகு வங்கதேசம் ஐ.நா.மன்றத்தில் உறுப்பு நாடாகத் தன்னை இணைத்துக் கொண்டது.  அப்போது வங்கமொழிக்காக 11பேர் உயிர் ஈகம் செய்த நாளான பிப்.21ஆம் நாளை தாய்மொழி நாளாக அறிவிக்கும் படி கேட்டுக் கொண்டது. அதனை ஏற்றுக் கொண்டு ஐ.நா.மன்றம் பிப்.21ஆம் நாளை உலகத்தாய்மொழி நாளாக அறிவித்தது. உலகத்தாய்மொழி நாளான இன்று வங்கதேச மொழிப்போர் நாள்தான் உலகமெங்கும் நினைவு கூறப்படுகிறது. 1965ஆம் ஆண்டு தமிழர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு மொ...

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

Image
பார்ப்பன அடிமை அண்ணாமலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்! ==================================== பெரியார் பண  விஷயத்தில் கறார் பேர்வழி என்று கேள்விப்பட்டுள்ளோம். அது கூட குற்றமில்லை; ஆனால்,  எப்போதும் பிராமணர்கள் எனக்கு எதிரிகள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்  செல்வந்தர்களாக இருக்கக்கூடிய பிராமணர்களிடமும் பணம் கறப்பதில் பெரும் கில்லாடி ஆவார்.  பிராமண செல்வந்தர்களான   எஸ்.எஸ். வாசன், சிம்சன் அனந்த இராமகிருஷ்ணன்,  மாவூர் சர்மா என்று ஒரு பட்டியலே உண்டு. பிராமணர்களை திட்டிக் கொண்டு அவர்களிடமே பணமோ, உதவியோ பெறுவதில் எந்த குற்ற உணர்ச்சியும் அவருக்கு இருந்ததில்லை. பிராமணர் அல்லாத செல்வந்தர்களிடமும் அப்படியே தான்.  பிராமண எதிர்ப்பை பேசி கறந்து விடுவார்.  திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்களிடம் மாதாமாதம் ரூபாய் 100 ஐ முதல் நாளன்று  காசோலை வாங்கிக் கொண்டு அவரை வாழ்த்துவார்; பிறகு அதை அவர் நிறுத்தி விட்டால்  தூற்றுவதுதான் அவர் பழக்கம். (கி.ஆ.பெ.விசுவநாதம், தமிழர் நாடு இதழ் , 17.8.1949)  இதுபோல் ஒரு முறை அண்ணாமலை அரசர் தமது  60 வத...