Posts

Showing posts from November, 2023

தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள்

Image
தமிழ் உலகின் நாடகத் தந்தை  தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாள் 13.11.1922 நம் தமிழ் மொழியானது 'முத்தமிழ்' என்று அழைக்கப்படும் பெருமையுடையது. அவை இயற்றமிழ், இசைத்தமிழ் , நாடகத்தமிழ் என்பனவாகும். தொல்காப்பியர் காலத்திலேயே நாடகம் குறித்து பேசப்பட்டுள்ளது. "நாடக வழக்கிலும், உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்" (தொல்: பொருள் - அகத்-53) உலகியலை ஒட்டிச் சுவைபடக் காட்டும் நாடக வகை மரபுகளோடும், உலக மரபுகளோடும் பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம் என்பதே இதன் பொருளாகும். சங்ககாலத்தை அடுத்து வந்த  சிலப்பதிகாரம் நூல் முத்தமிழ் காப்பியம் என்று மட்டும் அழைக்கப்படுவதில்லை. அது நாடகக் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது. 17,19ஆம் நூற்றாண்டுகளில் பள்ளு, குறம், குறவஞ்சி, நொண்டி , கீர்த்தனை, மேலை மரபு , மரபுவழி மேடை நாடகம் போன்ற நாடக வகைகள் தோன்றின. இருப்பினும்,  சங்ககால , பிற்கால மூவேந்தர் ஆட்சிகளுக்குப் பிறகு ஏற்பட்ட விஜயநகர, ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில் தெலுங்கு மொழியும், ஆங்கில மொழியும் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருந்து வந்தது. இசையரங்குகளில் தெலுங்கு ம...

ஆந்திரனிடம் போய் பித்தலாட்டக்காரன் என்று பெரியார் சொல்வாரா? - கி.ஆ.பெ.விசுவநாதம்

Image
தமிழர் கழகம் கண்ட  கி.ஆ.பெ.விசுவநாதம்  பிறந்த நாள்  10.11.1899 தமிழ்நாடு தமிழருக்கே..! என்பது பித்தலாட்ட கருங்காலிகளின் கோரிக்கையா? அண்மையில் சென்னை கோகலே ஹாலில் திரு.சி.டி.டி.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழர் ராஜீயம் என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள் என்று பெரியார் அழுத்தந்திருத்தமாகக் கூறியிருக்கிறார். இது ஏற்கெனவே பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. 'இப்போது தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று எழுதியும், பேசியும் வருகிறார்கள். ஆகவே, வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருக்கிறதாக நன்கு விளங்குகிறது. இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் அரசு என்று கூறக் கூடாதென்றும் திராவிடம், திராவிடர், திராவிடநாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு என்றே கூற வேண்டுமென்று அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது, தமிழ்நாட்டின் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம் ஆந்திர, மலையாள, கன்னட மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர...

தேவிகுளம் - பீர்மேடு போராட்டத்தில் துரோகம் செய்தது யார்? ம.பொ.சி.யா? பெரியாரா?

Image
பெரியாருக்கு ஆதரவாக சுப.வீ. கூறும் அத்தனை செய்தியும் பொய். தேவிகுளம், பீர்மேடு போராட்டத்தில் துரோகம் செய்தது ம.பொ.சியா? பெரியாரா? சுப.வீ.க்கு மறுப்பு! நக்கீரன் வலையொளியில் சுப.வீ. நேர்காணல் அளித்துள்ளார். அதில், தேவிகுளம், பீர்மேடு மீட்புக்காக ம.பொ.சி.  அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். அதில் பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பெரியார் சில நிபந்தனைகளை விதித்து கலந்து கொள்ள மறுத்து விடுகிறார். ம.பொ.சி. பெரியாரின் நிபந்தனைகளை ஏற்க மறுத்து விட்டதாலே பெரியார் அந்தக் கூட்டத்தை புறக்கணித்ததாக சுப.வீ. குற்றம் சாட்டி பேசியுள்ளார். உண்மையில் நடந்தது என்ன? 10.10.1955இல் தமிழக தெற்கெல்லை தொடர்பாக அமைக்கப்பட்ட பசல்அலி ஆணையம் தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அவ்வாணையம்  தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, கொச்சி சித்தூர் பகுதிகளை தமிழகத்தோடு சேர்க்க மறுப்பு தெரிவித்ததோடு, ‘தமிழ்நாடு’ என்னும் பெயரை ஏற்க மறுத்து சென்னை ராஜ்யம் எனும் பெயரில் புதிய தமிழ் மாநிலம் அமைத்திடவும் பரிந்துரை செய்தது. அப்போது இதற்கு எதிராக தமிழகத்தில் எந்த கட்சியும் தனது எதிர்ப்பைக் காட்ட முன்வரவ...