Posts

Showing posts from June, 2024

சென்னை யாருக்கு சொந்தம்?

Image
தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஶ்ரீராமுலு என்னும் ஆந்திரர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ம.பொ.சி. போயிருந்தார். அந்நிகழ்ச்சியைப் பின்வருமாறு "எனது போராட்டம்" என்னும் நூலில் ம.பொ.சி. குறிப்பிட்டுள்ளார்.  "அந்த வீரத் தியாகி என்னைக் கண்டதும் கைகூப்பி வணங்கி வரவேற்றார். அப்போது அங்கு ஆந்திர கேசரி பிரகாசம் அவர்களும் இருந்தார். அப்பெரியவர் பொட்டியின் உயிரைக் காப்பாற்ற நான் உதவி புரிய வேண்டும் என்றார். அதற்கு நான், " சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு, ஆந்திர மாநிலம் கோரினால் தமிழரசுக் கழகம் ஆந்திரர்களுடன் பூரணமாக ஒத்துழைக்கும் " என்றேன். பிரகாசம் சிறிது சினங் கொண்டவராகி , " தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு தாலுகாவின் தலைநகரும் மாநிலத் தலைநகராக இருக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளன. ஈரோட்டின் நிலையிலுள்ள ஒரு நகரம் கூட ஆந்திராவில் இல்லை. இந்த நிலையில் சென்னை இல்லாத ஆந்திராவைக் கொடுத்தால் தலைநகருக்கு நாங்கள் எங்கே போவது என்று படபடப்புடன் பேசினார். அவருடன் விவாதம் நடத்த விரும்பாமல் "ஆந்திரத்திற்குத் தலைநகர் கொடு...

வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது வெறுப்பு அரசியலா? தமிழர் உரிமை அரசியலா?

Image
வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது வெறுப்பரசியலா? தமிழர் உரிமை அரசியலா? =================================== மனுஷ்ய புத்திரனுக்கு மறுப்பு! ==================================== கவிஞர் மனுஷ்யபுத்திரன் அண்மையில் வெளிவந்த "ரயில்" திரைப்படத்தை பார்த்து விட்டு, இது வெறுப்பரசியலுக்கு எதிரான படமென்று புகழாரம் சூட்டியுள்ளார்.  தமிழ்நாட்டில் திமுகவை உருவாக்கிய அண்ணாதுரை வடவர்களுக்கு எதிராக பேசாத பேச்சா? ( எல்லாம் வாய்ச் சவடால் தான்!)  வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது,  வடவர்கள் நல்லவருமல்ல; நம்மவர்களுமல்ல;   - என்று வெறுப்பு அரசியலை தொடங்கி வைத்ததே அண்ணாதுரை தான் என்று சொன்னால் திராவிட கத்துக்குட்டி மனுஷ்ய புத்திரன் ஒத்துக் கொள்வாரா?  மதராசி என்று வட இந்தியர்கள் தமிழர்களை அழைக்க வில்லையா? பாண்டியா என்றால் திருடன் என்று தங்கள் திரைப்படங்களில் மலையாளிகள் காட்ட வில்லையா? தமிழ் நாட்டில் புகுந்து குறைந்த கூலி என்ற பெயரில் தமிழர்களின் வேலைகளை பறித்து வருபவர்கள் வட இந்தியர்கள். தற்போது தமிழர்களின் பாரம்பரிய வேளாண் தொழிலுக்குள்ளும் புகுந்து விட்டார்கள். அது மட்டுமல்ல; கொலை, கற்...

விவேகானந்தர் நினைவு மண்டபம்: ஆர்.எஸ்.எஸ்.க்கு துணை நின்ற திமுக

விவேகானந்தர் நினைவு மண்டபம்; ஆர்.எஸ்.எஸ்.க்கு துணை நின்ற திமுக! ================================== விவேகானந்தர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1963ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் எழுப்பிட ஆர்.எஸ்.எஸ். முயன்றது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு மற்றுமொரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏக்நாத் ரானடேவிடம் ஒப்படைக்கப்பட்டது.  விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுவதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். கிறிஸ்துவர்களின் எதிர்ப்பையும் , தமிழ்நாடு காங்கிரஸ் முதலமைச்சர் பக்தவத்சலம் , மத்திய அமைச்சர் ஹீமாயூன் கபீர் ஆகியோரின் எதிர்ப்பையும் கடுமையாகச் சந்தித்தது. பின்னர் காங்கிரஸ் மத்திய அமைச்சர் இலால் பகதூர் சாஸ்திரியை ரானடே சந்தித்து, ஆதரவைப் பெற்றுக் கொண்டதோடு 300 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தையும் பெற்று நேருவிடம் ஒப்படைத்தார். விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுவதற்கு நேருவின் ஆசியும் கிடைத்தது. இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு அடங்கியது.  காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கும்பல் கன்னியாகுமரியில் கால்பதிக்க வாய்ப்பை ...