Posts

Showing posts from October, 2024

திராவிடம் என்பதே தீது! - மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

Image
'திரவிடம்' என்பதே தீது! - மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்  ================================== நாடுகளெல்லாம் பெரும்பாலும் மொழியடிப்படையிலேயே அமைந்திருப்பதனாலும், அதன் வழியாகவே முன்னேறுவதாலும், தமிழர் யாவரும் தமிழ்ப்பற்றுக் கொண்டிருத்தல் வேண்டும். எந்நாட்டாராயினும். தமிழ்ப்பற்றுடையார் தமிழரே. இந்நாட்டாராயினும், அஃதில்லார் அயலாரே தமிழ்ப் பெயரே தாங்குதலும், இயன்றவரை தூயதமிழிற் பேசுதலும், எழுதுதலும், திருமணமும், சடங்குகளும் கோயில் வழிபாடும் தமிழிலேயே நடப்பித்தலும், மக்கள் உலகத்தில் தேவமொழி'யில்லை யென நம்புதலும், இந்திக் கட்டாயக் கல்வியைத் தமிழ் நாட்டில் அடியோடொழித்தலும் தமிழ் நாட்டிற்குத் தமிழ் நாடென்ற பெயரிடுதலும், தமிழன் என்பதற்கு அடையாளமாம். தமிழிற்கு இடைக்காலத்தில் நேர்ந்த இழிவினால் பல தென் சொற்கள் வழக்கற்றுப் போயின. அவற்றை மீண்டும் வழக்கிற்குக் கொண்டு வருதல் வேண்டும். கால்டுவெல் கண்காணியார் முதன் முறையாகத் திராவிட மொழி களை ஆய்ந்ததினாலும், அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சியின்மை யாலும், தமிழைத் திரவிடத்தினின்று வேறுபடுத்திக் காட்டத் தேவையில்லா திருந்தது. இக்காலத்திலோ, ஆராய்ச...

திராவிடர் இருக்கத் தமிழர் அழிந்தனர்! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Image
வெல்லாத ஆரியர் வென்ற கதை இது ! வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே ! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்  ================================== தமிழம் திரிந்து சமற்கிரு தத்தில் 'திரமிளம்' ஆகித் 'திரவிடம்' நின்றது!  அமிழ்தாம் தமிழை அழித்துத் திராவிடம் ஆக்கிய ஆரியத் தில்லு முல்லிது!  கமழும் மொழிப்பெயர் இனப்பெயர் அழிந்ததா கன்னித் தமிழும் தமிழரும் அழிந்தே உமிழத் தக்க 'திராவிடர்' ஆயினர்! உயிர்போய் விட்ட பிணமாய்க் கிடந்தனர்! 'திராவிடர்' எனும்சொ(ல்)லைத் தமிழர் தவிரத் தெலுங்கரோ, கன்னட ரோ,மலை யாளரோ பராவுதல் இல்லை; பயில்தலும் இல்லை!  பாழும் தமிழரே பயின்று வந்ததால் திராவிடர் இருக்கத் தமிழர் அழிந்தனர்! தமிழர் அழிந்ததால் தமிழுணர் வழிந்தது! திராவிடர் எனும்சொல் கழகநூல் எதனினும் தெள்ளிப் பார்க்கினும் தெரியவியலாதே! இல்லாத பெயரை இருப்பதாய்ச் சொல்லி இருந்த பெயரை இழந்தனர் தமிழர்!  பொல்லாத ஆரியச் சூழ்ச்சியை அறியாப் புழுக்கைத் தமிழரே தமிழரை அழித்தனர்! எல்லாரும் தெலுங்கர் கன்னடர் மலையராய் இருந்திடத் தமிழர் இல்லாது போயினர்,  வெல்லாத ஆரியர் வென்ற கதையிது! வீரத் தமிழினம் வீழ்ந்த இழி...

திராவிடர் என்பது பிராமணரை குறிக்கும்! - துக்ளக் குருமூர்த்தி

Image
பிராமணர்கள் திராவிடர்களே! - "துக்ளக்" குருமூர்த்தி ஒப்புதல்! ===================================== தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு மூளையாகச் செயல்படும் "துக்ளக்" ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் திராவிடர்கள் என்றால் பிராமணர்களை குறிக்கும் சொல்தான் என்று ஒப்புக் கொண்டு "துக்ளக்" ஏட்டில் (9.10.2019 - பக்கம் 9, பெட்டிச் செய்தி) எழுதியுள்ளார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் பல ஆண்டுகளாக திராவிடர் என்பது பிராமணர்களை குறிக்கும் சொல் என்று தக்க சான்றுகளோடு கூறி வருகிறார். குறிப்பாக பிராமின் டுடே இதழ் பிராமணர்களை திராவிடர் என்று அழைக்கிறது. ஆந்திர புதூரு பிராமணர்களும் தங்களை திராவிடப் பிராமணர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர். தமிழ் நாட்டில் உள்ள சென்னையில் "தென்கனரா திராவிட பிராமணர் சங்கம்" என்ற அமைப்பே உள்ளது. பிரித்தானிய கலைக் களஞ்சியம் "தென்னாட்டு பிராமணர்களை மட்டும் குறிக்கும் சொல் தான் திராவிடர் என்பதாகும், கெடுவாய்ப்பாக பிற்காலத்தில் மரபு வழிப்பட்ட மண்ணின் மக்களை குறித்தது" என்று கூறுகிறது. இவையெல்லாம் ஐயா மணியரச...

சங்கரலிங்கனார் முன் வைத்த 12 கோரிக்கைகள் என்ன?

சங்கரலிங்கனார் முன் வைத்த 12 கோரிக்கைகள்: 1. மொழிவழி மாநிலம் 2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல். 3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் 4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கம். 5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் . 6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் . 7. தேர்தல் முறையில் சீர்திருத்தம். 8. தொழிற் கல்வி். 9. இந்தியா முழுவதும் மதுவிலக்கு. 10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை மானியம். 11. மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது. 12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல். கதிர் நிலவன்