சென்னை மீட்புப் போரில் ஈ.வெ.ராவின் திருவிளையாடல்கள்!
சென்னை மீட்புப் போரில் பெரியாரின் திருவிளையாடல்கள்! 1938 இந்தி எதிர்ப்புப் போரில் தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் பீறிட்டெழுந்த போது அதை திராவிடநாடு திராவிடருக்கே என்று மடைமாற்றம் செய்தவர் பெரியார். அது போல் 1953இல் சென்னை மீட்புக் கிளர்ச்சியிலும் நடந்து கொண்டவர் தான் பெரியார். 1947 முதல் ஆந்திரர்கள் விசால ஆந்திரம் கேட்டு மிகத் தீவிரமாக போராடி வந்தனர். அத்தோடு சென்னை நகரையும் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினர். 15.12.1952 இல் பட்டினிப்போரில் பொட்டி சிறிராமுலுவின் இறப்பிற்குப் பிறகு போராட்டம் சூடு பிடித்தது. 1947 முதல் சென்னை முதல் திருப்பதி வரை கேட்ட ஆந்திரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ம.பொ.சி . ஒருவர் தான். அவர் சென்னை மேயர் செங்கல்வராயனோடு இணைந்து சென்னையை ஆந்திராவோடு இணைப்பதற்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்து பெருமை சேர்த்தவர். பெரியாரோ தன்னை சென்னை மீட்பு போரில் எப்போதும் ஈடுபடுத்திக் கொண்டவரல்ல. திராவிட நாடு கோரிக்கைக்கு சென்னை மீட்பை தடையாக கருதி வந்தவர். 1947இல் மதராஸ் மனதே, சலோ மதராஸ் என்று சென்னைக்கு ஆந்திரர்கள் படையெடுத்து வந்தனர். அப்போது அதைக...