Posts

Showing posts from August, 2024

சென்னை மீட்புப் போரில் ஈ.வெ.ராவின் திருவிளையாடல்கள்!

சென்னை மீட்புப் போரில் பெரியாரின் திருவிளையாடல்கள்! 1938 இந்தி எதிர்ப்புப் போரில் தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் பீறிட்டெழுந்த போது அதை திராவிடநாடு திராவிடருக்கே என்று மடைமாற்றம் செய்தவர் பெரியார். அது போல் 1953இல் சென்னை மீட்புக் கிளர்ச்சியிலும் நடந்து கொண்டவர் தான் பெரியார். 1947 முதல் ஆந்திரர்கள் விசால ஆந்திரம் கேட்டு மிகத் தீவிரமாக போராடி வந்தனர். அத்தோடு சென்னை நகரையும் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினர். 15.12.1952 இல் பட்டினிப்போரில் பொட்டி சிறிராமுலுவின் இறப்பிற்குப் பிறகு போராட்டம் சூடு பிடித்தது. 1947 முதல் சென்னை முதல் திருப்பதி வரை கேட்ட ஆந்திரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ம.பொ.சி . ஒருவர் தான். அவர் சென்னை மேயர் செங்கல்வராயனோடு இணைந்து சென்னையை ஆந்திராவோடு இணைப்பதற்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்து பெருமை சேர்த்தவர். பெரியாரோ தன்னை சென்னை மீட்பு போரில் எப்போதும் ஈடுபடுத்திக் கொண்டவரல்ல. திராவிட நாடு கோரிக்கைக்கு சென்னை மீட்பை தடையாக கருதி வந்தவர். 1947இல் மதராஸ் மனதே, சலோ மதராஸ் என்று சென்னைக்கு ஆந்திரர்கள் படையெடுத்து வந்தனர். அப்போது அதைக...

சென்னை மாநகராட்சி - மூவேந்தர் கொடியை உருவாக்கியவர் ம.பொ.சி.

வில்லும் புலியும் மீனும் சென்னை கார்ப்பரேஷன் சின்னங்கள்! ==================================== இமயச் சிகரத்தில் பறந்த கொடி ரிப்பன் கட்டிடத்தின் உச்சியிலே! 'தமிழரசுக் கழகம் தோன்றி இதுவரை என்ன சாதித் திருக்கிறது?' என்று கேள்வி கேட்கும் மேதாவிகளுக்கு நமது சாதனைகளில் புதிதாக ஒன்றைச் சொல்லுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது தமிழரசுக் கழகத் தோழர்களுக்கு. சென்னை கார்ப்பரேஷன் தனது அதிகாரச் சின்னத் தை திருத்தி அமைத்து புகிய சின்னங்களைப் பொறித்து வைத்திருக்கிறது. அந்தச் சின்னங்கள் யாவை? கருப்பு, சிவப்பு நிறங்களா? இல்லை. பண்டைத் தமிழகத்தில் அரசியல் சின்னங்களாக விளங்கிய வில், புலி, மீன் ஆகிய மூன்றையும் தனது அதிகாரச் சின்னங்களாக ஏற்றுக் கொண்டு விட்டது சென்னை கார்ப்பரேஷன். அதற்கு சென்னை அரசாங்கமும் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. இனி, ரிப்பன் கட்டிடத்தில் அறவாழி பொறித்த தேசியக் கொடியோடு மூவேந்தர் சின்னங்கள் பொறித்த கார்ப்பரேஷன் கொடியும் சுதந்திரக் காற்றில் ஆடிப்பறக்கும். கார்ப்பரேஷன் அதிகாரச் சின்னத்தைத் திருத்தி அமைக்க நியமிக்கப்பட்ட ஆலோசனைக் கமிட்டியில் தலைவர் ம.பொ.சி.யும், தளபதி கே.வ...