தந்தை செல்வா நினைவு நாள் 26.04.1977
தந்தை செல்வா நினைவு நாள் 26.04.1977 தமிழீமே தீர்வு... தந்தை செல்வா இறுதி உரை! தந்தை செல்வா என்றழைக்கப்படும் செல்வா நாயகம் அவர்கள் சிங்களருக்கு இணையாக தமிழருக்கு அதிகாரப் பகிர்வு கேட்டு தமிழரசுக் கட்சியைத் தொடங்கியவர். கூட்டாட்சி முறையை இலக்காக கொண்டு போராடி வந்தவர். சிங்கள அரசுகளோடு சில உடன்பாடுகளும் கண்டார். குறிப்பாக பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களும் சிங்களத் தரப்பில் கிழித்தெறியப்பட்டன. தமிழருக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் வகையில் சிங்கள அரசு முழுமையான சட்ட அமைப்பாக 1972ஆம் ஆண்டின் அரசமைப்பு நிறுவப் பட்ட பிறகு இனி சிங்கள அரசோடு சேர்ந்து வாழ முடியாது என்று முடிவுக்கு வந்தார். தந்தை செல்வா தலைமையில் அமைக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை மாநாட்டில் தனித் தமிழீழக் கோரிக்கையை எழுப்பியது. முதன்மைத் தீர்மானங்கள்; 1.இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். 2.அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித...