Posts

Showing posts from April, 2024

தந்தை செல்வா நினைவு நாள் 26.04.1977

Image
தந்தை செல்வா நினைவு நாள் 26.04.1977 தமிழீமே தீர்வு... தந்தை செல்வா இறுதி உரை! தந்தை செல்வா என்றழைக்கப்படும் செல்வா நாயகம் அவர்கள் சிங்களருக்கு இணையாக தமிழருக்கு அதிகாரப் பகிர்வு  கேட்டு  தமிழரசுக் கட்சியைத் தொடங்கியவர். கூட்டாட்சி முறையை இலக்காக கொண்டு போராடி வந்தவர். சிங்கள அரசுகளோடு சில உடன்பாடுகளும் கண்டார். குறிப்பாக பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் போன்ற  ஒப்பந்தங்களும் சிங்களத் தரப்பில் கிழித்தெறியப்பட்டன. தமிழருக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் வகையில் சிங்கள அரசு முழுமையான சட்ட அமைப்பாக 1972ஆம் ஆண்டின் அரசமைப்பு நிறுவப் பட்ட பிறகு  இனி சிங்கள அரசோடு சேர்ந்து வாழ முடியாது என்று முடிவுக்கு வந்தார். தந்தை செல்வா  தலைமையில் அமைக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை மாநாட்டில் தனித் தமிழீழக் கோரிக்கையை எழுப்பியது. முதன்மைத் தீர்மானங்கள்; 1.இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். 2.அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித...

#பாரதிதாசன் இறுதி ஊர்வலம்

Image
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்  இறுதி ஊர்வலம்! கவிஞர் முருகு சுந்தரம் ==================================== 21.4.64 சென்னையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. சென்னையிலிருந்து என் தம்பி இளங்கோவன் எழுதியிருந்தான். மாரடைப்பினால் தாக்கப்பட்டுச் சென்னை அரசாங்க மருத்துவமனையில் பாவேந்தர் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  அன்று இரவு சென்னை செல்வதற்கு வேண்டிய முயற்சிகளில் நான் ஈடுபட்டேன். எதற்கும் மாலைச் செய்தித் தாளைப் பார்த்து விடலாம் என்று எண்ணினேன். சேலம் மாலைமுரசில் பாவேந்தர் இறப்பைப் பற்றிய செய்தி கொட்டையெழுத்தில் அவர் படத்தோடு போடப்பட்டிருந்தது.  அடக்கம் செய்வதற்காக அன்று மாலை அவர் சடலம் ‌புதுச்சேரிக்குக் கொண்டு செல்லப்படும் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது.  உடனே கடலூர் மார்க்கமாகச் செல்லும் புகைவண்டியில் ஏறிப் புதுவை புறப்பட்டேன். அடுத்த நாள் காலை எட்டு மணியளவில் புதுவையை அடைந்தேன். புதுவை நகரமே வெள்ளக்காடாக இருந்தது. பெருமாள் கோயில் தெருவில் எள் விழ இடமில்லை.  பாவேந்தர் வீடு தொட்டிக்கட்டு வீடு. நடுவில் இருந்த தொட்டியில் தென்வடலாகப் பாவேந்தர...

உண்ணாநிலைப் போரில் உயிர் நீத்த முதல் பெண் போராளி அன்னை பூபதி நினைவு நாள் 19.4.1988

Image
உண்ணாநிலையில் உயிர் துறந்த 'உலகின் முதல் பெண் போராளி' அன்னை பூபதி நினைவு நாள் 19.4.1988 பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். இசைப்பிரியாவின் கதறல் காணொளி கண்டும் இந்திய அரசின் பேய் மனம் இரங்க மறுத்தது. அன்னை பார்வதியம்மாள் சிகிச்சைக்கு வந்த போதும் இந்திய அரசின் கல் நெஞ்சம் கரையவில்லை. தமிழகம் வந்த பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியது. தமிழ்ப்பெண்களை மதிக்கத் தெரியாத இந்திய அரசின் இந்த இழிகுணம் நேற்று முளைத்ததல்ல; அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே முளைத்த குணம். அன்னை பூபதியம்மாளின் உயிரைப் பறித்த வரலாற்றை அறிவதன் மூலம் இதனை உறுதிப்படுத்தவும் முடியும். 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும்  ஆயுதப் போர் நடைபெற்று வந்த கால கட்டம். அன்று காந்திய நாட்டிற்கு அகிம்சை வழியில் பாடம் புகட்ட விரும்பி உண்ணாநிலை கொண்டு உயிர் துறந்தவன் திலீபன். அவன் வழியில் உண்ணாநிலையை தொடங்கி உயிர் துறந்த உலகின் முதல் பெண்மணி தான் அன்னை பூபதியம்மாள். திலீபன் உண்ணாநிலைக்கும் அன்னை பூபதியம்மாள் உண்ணாநிலைக்கும் ஒரே வேறுபாடு தான். அவன் நீர் அருந்த வில்லை. இவர் நீர் அருந்தினார். இத...

#பெருங்காமநல்லூர் ஈகியர் நாள் 3.4.1920

Image
குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்புப்போரில் உயிர் நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவு நாள் 3.4.1920  ஒரு மனிதனின் வாழ்நிலையை அவனது பிறப்பு தான் தீர்மானிக்கும் என்று மனுதர்மச் சட்டம் கூறுகிறது. அதே கருத்தைத் தான் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டமும் கூறுகிறது. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரான்சு, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் சுரண்டலுக்கு எதிராகவும், சமூகப் பொருளாதார மாற்றத்திற்காகவும் கலகங்கள் வெடித்தன. பிரெஞ்சு புரட்சியால் உத்வேகமடைந்த மக்களைக் கண்டு நடுங்கிய மேலைய வல்லரசுகள் முதலில் சுதந்திரமான வாழ்வியலைக் கொண்ட நாடோடி இனத்தவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர விரும்பின. அதன் பொருட்டு அம்மக்களைச் சமூக வாழ்வுக்கு அந்நியமானவர்கள் என்று கூறி பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களை கொண்டு வந்தன. இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றிய பிரித்தானிய அரசு அதே வழியில், தனது ஆதிக்கத்திற்கு அடிபணியாத மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகள், நாகரிகமற்றவர்கள், படிப்பறிவற்றவர்கள் என்றெல்லாம் முதலில் இழிவுபடுத்தத் தொடங்கியது. பின்னர் அம்மக்கள் மீது பல்வேறு அடக்குமுறைச்சட்டங்கள...