Posts

Showing posts from July, 2023

கவிமணி தேசிக விநாயகம் பிறந்த நாள் 27.7.1876

Image
'கட்டுரை குமரி நாட்டுப் பெருங் கவிஞர் "கவிமணி'" தேசிக விநாயகம் "உள்ளத்துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை" கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு மேற்படி கவிதையை கவிதை நடையிலேயே அழகாகச் சொன்னவர் " கவிமணி" தேசிக விநாயகம் ஆவார். இவரைக் குழந்தைக் கவிஞர் என்றே பலரும் அறிமுகப் படுத்துகின்றனர். இது ஒருமுகப் பார்வையாகும். கூர்ந்த மதிநுட்பத்தோடு சிந்திக்கும் ஆற்றல் கைவரப் பெற்ற இவர் தமிழுலகுக்கு பல அரிய படைப்புகளை தந்து விட்டுச் சென்றுள்ளார். இனி இவரின் வரலாற்றைக் காண்போம். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் சுசீந்தரம் வடக்கே உள்ள தேரூர் எனும் சிற்றூரில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலெட்சுமி இணையருக்கு மகனாக 27.7. 1876ஆம் ஆண்டில் பிறந்தார். இவரின் தந்தையார் தமது குடும்ப வழக்கப்படி தமது பாட்டனார் பெயரான தேசிக விநாயகம் பெயரைச் சூட்டினார். இவரின் தந்தையார் அரசுப் பணியாளராகப் கோட்டாற்றில் பணியாற்றி வந்தார். அக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர் ப...

பிரித்தானியரிடம் ஜீவாவை மன்னிப்பு கேட்கச் சொன்ன பெரியார்

Image
பிரித்தானியரிடம் ஜீவாவை மன்னிப்பு கேட்கச் சொன்னவர் பெரியார்! அரசாங்கம் (ஜஸ்டிஸ் கட்சி) மீண்டும் 1935ல் பத்திரிகையில் ஜாமீன் கேட்டனர். பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடான “நான் நாஸ்திகன் ஏன்?”- பற்றி பிரச்னை வந்தது. இந்நூல் பகத்சிங் இறுதிக் காலத்தில் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு! வெளியிட்டவர் என்பதற்காக ஈ வே கிருஷ்ணசாமியையும், மொழி பெயர்த்தவர் என்பதற்காக என்னையும் கைது செய்தனர். ‘சுயமரியாதை இயக்கத்தின்’ மீது சர்க்காரின் கோபப்பார்வை விழுந்தது. அதிகாரத்தில் இருந்தது பொப்பிலி அரசரின் ஜஸ்டிஸ் கட்சி. தேர்தலில் ஈவேரா ஜஸ்டிஸ் கட்சிக்கு தோள்போட்டு, அதை சமதர்மக் கட்சி ஆக்கியதன் விளைவுதான் இந்த அடக்குமுறை. சர்க்கார் அழிவு நடவடிக்கையைக் கண்டு ஈவேரா மிரண்டார். சமதர்மத்திற்கு விரோதிகளான R K சண்முகம் செட்டி போன்றவர்கள் தருணத்தைத் தவறவிடாமல் செயல்பட்டனர். ஏற்கனவே மந்திரியாக இருந்த பன்னீர்செல்வம், GD நாயுடு மூலம் நாஸ்திகப் பொதுவுடமைப் பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கட்சியை சர்க்கார் அழிக்க முடிவு கட்டி விட்டதென்றும் ஈவேரா வை மிரட்டிய கதையும் நமக்குத் தெரியு...

முத்துலெட்சுமி ரெட்டி எழுதிய சுயசரிதையில் சொல்லப்படாத இருவர் 1.சத்தியமூர்த்தி ஐயர் 2. ஈ.வெ.ரா.

Image
முத்துலெட்சுமி எழுதிய சுயசரிதையில் சொல்லப்படாத இருவர்... 1.சத்திய மூர்த்தி 2.ஈ.வெ.ரா. பெரியார் தேவதாசிமுறை ஒழிப்புக்காக பாடுபட்டவர் முத்துலெட்சுமி அம்மையார். இவர் 1927இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமாவர். இவர் தேவதாசி ஒழிப்புக்காக சட்ட முன்வரைவை கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தவர் சத்திய மூர்த்தி ஐயர். இவர் இறைவனுக்கு ஆற்றும் பணியை தடுக்கக்கூடாது என்று சொன்ன போது, உங்கள் ஆத்துப் பெண்களை இறைப்பணி செய்ய அனுப்புங்களேன் என்று கூறி, சத்தியமூர்த்தியின் வாயடைத்தவர் முத்துலெட்சுமி அம்மையார் என்று தான் பலரும் சொல்லி வருகிறோம். குறிப்பாக, ஈ.வெ.ரா. பெரியார்தான் முத்துலெட்சுமியை தூண்டிவிட்டு கேட்கச் சொன்னதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. முத்துலெட்சுமி அம்மையார் 1964ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் சுயசரிதை நூல் எழுதியுள்ளார். அந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது. அந்நூலை தற்போது தான் படிக்க நேர்ந்தது. அந்நூலிலே, முத்துலெட்சுமி அம்மையார் சத்திய மூர்த்தி ஐயரிடம் இப்படியொரு விவாதம் நடத்தப்பட்டதை எங்கும் குறிப்பிடவே இல்லை, (ஓரிடத்தில் தன்னுடைய வகுப்பு...

சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மீட்க தீர்மானம் கொண்டுவரப்பட்ட நாள் 18.7.1967

Image
தமிழ் நாடு பெயர் மாற்றத் தீர்மான நாள் 18.7.1967 உண்மை வரலாறு! (1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் மொழிவழித் தமிழ் நாடு உருவாக்கப்பட்ட நாளாகும். மார்சல் நேசமணி, குஞ்சன் நாடார், மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றவர்களின் போராட்டங்களால் அண்டைய தேசிய இனங்களால் பறிக்கப்பட்ட தமிழக எல்லைகள் ஓரளவு மீட்கப்பட்டன. நவம்பர் 1ஆம் நாளை தமிழகப் பெருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் தேசியர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இதற்கு ஏற்பு வழங்கப்பட்ட து. ஆனால் தற்போதைய ஸ்டாலின் ஆட்சியில் "தமிழ் நாடு நாள்" சூலை 18க்கு என்று மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிறந்த நாளை விட, தமிழ் நாடு பெயர் சூட்டிய நாளை கொண்டாடுவது தான் சிறப்பு என்று ஸ்டாலின் அரசு விளக்கம் தருவது ஏற்கத்தக்கதல்ல. தமிழக எல்லை மீட்புப் போரில் திராவிட இயக்கம் தலைமை தாங்கிப் போராட வில்லை என்பதை உண்மையான வரலாறு படித்தோர் அறிவர். சூலை 18இல் தமிழ்நாடு பெயர் சூட்டியது அண்ணாவின் ஆட்சி என்பதால் வேறு நாளுக்கு மாற்றுவது என்பது எல்லை மீட்கப் போராடிய தலைவர்களின் ஈகத்தை மறைக்கின்ற முயற்சியாகும். குழந்தை பிறந்த நாளை கொண்டாடுவது ...

தமிழ் நாடு பெயர் மாற்றமும் - பெரியாரின் எதிர் நிலைப்பாடும்

Image
தமிழ் நாடு பெயர் மாற்றமும்- பெரியாரின் எதிர் நிலைப்பாடும் 1955 கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் ஆந்திரா, கர்நாடக, மலையாளப் பகுதிகள் பிரிந்து போன பிறகு எஞ்சிய தமிழர் பகுதிகளுக்கு “தமிழ் நாடு ” என்று பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. அப்போது பெரியார் தமிழக எல்லை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்காமல் பிற மொழியினரை உள்ளடக்கி திராவிட நாடு கோரிக்கையை எழுப்பி வந்தார். ஆனால், மற்ற பிறமொழிப் பகுதியினர் பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையை ஏற்காமல் தனி மொழி வழி மாநிலக் கோரிக்கைக்கு புத்துயிரூட்டியதோடு வெற்றி பெறும் நிலையில் இருந்தனர். இதனை அறிந்த பெரியார் வேறு வழியின்றி மொழிவழி தமிழகக் கோரிக்கையை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது வரை தமிழ் நாடு பற்றி கவலைப்படாத பெரியார் திடீரென்று தமிழ் நாடு பெயர்கூட வைக்கமுடிய வில்லையே என்று பெரிதும் கவலைப்பட்டார். 11.10.1955இல் பின் வருமாறு எழுதினார். “தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் கூட இருக்கக்கூடாது என்றும் பார்ப்பானும், வட நாட்டானும் சூழ்ச்சி செய்து இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து சென்னை நாடு என்று பெயர் கொடுக்க இருப்பதாகத் தெரிய...

தமிழ் நாட்டின் சர்வாதிகாரி காமராசர் தோற்கடிக்கப்பட வேண்டும். -பெரியார்

Image
தமிழ் நாட்டின் சர்வாதிகாரி காமராசர் தோற்கடிக்கப்பட வேண்டும். -பெரியார். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஒரு சில முக்கியமான காங்கிரசு தலைவர்களையாவது அவசியம் தோற்கடிக்க வேண்டும். இது மிக மிக இன்றியமையாதது ஆகும். கீழ்க்கண்டவர்களைத் தோற்கடித்தால் காங்கிரசின் விச­ப்பற்களைப் பிடுங்கியது போலாகும் என்பது நமது கருத்து. 1.காமராசு  2.டி.கே.கிருஷ்ணமாச்சாரி  3.சந்தானம் அய்யங்கார்  4.ராம்நாத் கோயங்கா 5.பக்தவச்சலனார்  6.ஆலாஸ்யம் அய்யர்  7.தேனி தியாகராஜன்  8.குமாரசாமி ராஜா  முரட்டுக்காளைக் கொம்புகளை நறுக்கிவிட்டு தீய்த்துவிடுகிற மாதிரி பொதுமக்கள் இவர்களைக் கூர்ந்து கவனிக்க (ஒழிக்க) வேண்டும். அலட்சியம் கூடாது. இந்த எட்டு பேரும் டெபாசிட் தொகையை இழக்கடிக்கப்படும் அளவுக்கு தோற்கடிக்கப் படுவார்களானால்; தமிழர்களுக்கு நல்ல அரசியல் அறிவு வந்துவிட்டதாகக் கருதலாம். இந்த எட்டு பேர் மட்டும் எப்படியாவது தோற்கடிக்கப்பட்டே தீர வேண்டும். வெறும் தோல்வி மட்டும் போதாது. டெப்பாசிட் போகிற மாதிரியான தோல்வியாக இருக்க வேண்டும். தமிழ் மக்களின் காங்கிரசு எதிர்ப்பு சக்தி முழுவதும் இந்த...

மூணார் தமிழர்களின் போராளி ஆர்.குப்புச்சாமி

Image
மூணார் தமிழர்களின் போராளி ஆர்.குப்புசாமி  நினைவு நாள்  15.7.2014 பதிவு: என்.டி.தினகர் திருவாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்டிருந்த தேவிகுளம் - பீர்மேடு தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்திப் போராடிய தலைவரான ஆர்.குப்புசாமி தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வந்த தொழிற்சங்கவாதியும் ஆவார். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் தியதி காலமான அவர், தனது கடைசி காலம் வரைக்கும் தொழிலாளர்களுக்காக தொடர்ந்து போராடி வந்தவர். தான் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக கொலை முயற்சிகளுக்கு இலக்காகியும் ஆதிக்க சக்திகளுக்கு பணிந்து விடாமல், மூணார் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த ஒரு தீர்க்கமான அரசியல் தலைவர். 1865-ம் ஆண்டு முதல் தேவிகுளம் பீர்மேடு மலைப்பகுதிகளில் தேயிலை சாகுபடியைத் தொடங்கிய ஆங்கிலேயர்கள் கங்காணிகள் என்றழைக்கப்பட்ட தரகர்கள் மூலம் தமிழ் தொழிலாளர்களை ஏமாற்றி வரவழைத்து கொத்தடிமைகளாக நடத்தத் தொடங்கினர். தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அதிகப்படியான வேலைப்பளு, மிகக்குறைந்த கூலி, சுகாதாரமற்ற வாழிடம...

பார்ப்பனர்கள் தேடிப் பிடித்த ஆட்களில் ஒருவர் காமராசர்! - பெரியார்

Image
பெரியார் பிராமணராகிய இராசாசி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் பச்சைத் தமிழன் காமராசரை ஆதரித்ததாக கூறுவார்கள். அது பச்சைப் பொய்யாகும். தன்னிடமிருந்து பிரிந்த அண்ணாவின் திமுகவை ஒழித்துக் கட்டவே பெரியார் 17 ஆண்டுகள் காமராசரை ஆதரித்தார் என்பதுதான் உண்மையான காரணமாகும். காங்கிரசை ஒழித்துக் கட்ட புறப்பட்ட பெரியார் 1952 பொதுத் தேர்தலில் காமராசர் திருவில்லிபுத்தூர் போட்டியிட்ட போது காமராசர் பச்சைத் தமிழனாக தெரியவில்லை. மாறாக , பார்ப்பனர்கள் தேடிக்கண்டு பிடித்த ஆட்களில் ஒருவராகவே காமராசரை கருதினார். அதுமட்டுமல்ல; காமராசரை தேர்தலில் தோற்கடிக்க தனது ஆருயிர் நண்பர் ஜி.டி.நாயுடுவை தேர்தலில் களமிறக்கினார். தேர்தலில் காமராசரே வென்றார். அப்போது பெரியார் விடுத்த அறிக்கையில், இராவணீயம் தோற்றுவிட்டது; விபீஷணத்தும் வெற்றி பெற்றுவிட்டது.'' என்றார். 1954ஆம் ஆண்டு காமராசர் குடியாத்தம் இடைத் தேர்தலில் நின்றார். அந்தத் தேர்தலில் பெரியார் காமராசரை ஆதரித்தார். அப்போது முதல் பெரியார் விபிஷணன் காமராசரை இராவணன் ஆக்கினார். தன்னை எதிர்த்த அண்ணாவை விபிஷணன் ஆக்கினார். இராசாசிக்கு இராமன...