Posts

Showing posts from February, 2024

பிப்.21: உலகத் தாய்மொழி நாள்

Image
பிப்.21: #உலகத்தாய்மொழிநாள் தெற்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடல் பிரதேசத்தில் உள்ள தாஜிக்ஸ்தான் மலைகிராமம் ஒன்றில் பிறந்தவர் அலீயெவா. அவரது தாய் மொழி அவார். அதற்கு வரி வடிவம் கிடையாது. 1930-களில்தான் இதற்கு என புது வரி வடிவம் உருவாக்கப்பட்டது. ஆகவே, எழுத்து மரபு இம்மொழிக்கு கிடையது. வாய்மொழி மரபைச் சேர்ந்த பாடல் களும், கதைகளும் மட்டுமே அவார் மக்களிடம் இருந்தன. பள்ளி வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்து, பின்பு ரஷ்யாவின் மிகமுக்கிய கவிஞர்களில் ஒருவராக உயர்ந்தார் அலீயெவா. அவார் மொழியின் மகத்தான கவி ரசூல் கம்சுதேவ். ‘நாளை அவார் மொழி மடியுமானால் இன்றைக்கே நான் இறந்து போவேன்’ - எனப் பாடியவர் ரசூல். ஒருமுறை ரசூல் கம்சுதேவ் இத்தாலியப் பயணத்தின்போது ஒரு வணிகர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்று இருந்தார். அந்த வணிக நண்பர் இனிமையாகப் பேசி, உபசரித்து பரிசுகள் எல்லாம் கொடுத்து அனுப்பி வைத்தார். ஊர் திரும்பியதும் வணிகரின் தாயைச் சந்தித்து அவரது மகனைச் சந்தித்த நிகழ்வைப் பற்றி எடுத்துக் கூறி விருந் தோம்பலுக்கு நன்றி கூறினார் ரசூல். வணிகரின் தாய் ரசூலிடம் ‘‘என் மகன் உங்களோடு அவார் மொழியில் பேசினானா?’’ என்று ஒரே...

பிப்.21: உலகத் தாய்மொழி நாள்

Image
பிப்.21: #உலகத்தாய்மொழிநாள் தமிழே நம் குறி! குறளே நம் நெறி! மொழி விடுதலை என்பது ஒரு தேசிய இனத்தின் தாயக விடுதலையோடு இணைந்தது. வங்காள தேசம் பாகிஸ்தானோடு இணைந்து இருந்த 1952ஆம் ஆண்டில் மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் மீது உருது மொழியைத் திணித்தது. அந்த மொழித் திணிப்பை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தானில் போராடினார்கள். வங்க மொழி காக்கும் போரில் 11 வங்காளிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். வங்கதேச மக்கள் மொழிப் போராட்டத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தாயக விடுதலைக்காகப் போராடி வெற்றியும் கண்டனர். வங்காள தேசம் தனிநாடாக உருவெடுத்தது. பிறகு வங்கதேசம் ஐ.நா.மன்றத்தில் உறுப்பு நாடாகத் தன்னை இணைத்துக் கொண்டது. அப்போது வங்கமொழிக்காக 11பேர்  உயிர் ஈகம் செய்த நாளான பிப்.21ஆம் நாளை தாய்மொழி நாளாக அறிவிக்கும் படி கேட்டுக் கொண்டது. அதனை ஏற்றுக் கொண்டு ஐ.நா.மன்றம் பிப்.21ஆம் நாளை உலகத்தாய்மொழி நாளாக அறிவித்தது. உலகத்தாய்மொழி நாளான இன்று  வங்கதேச மொழிப்போர் நாள்தான் உலகமெங்கும் நினைவு கூறப்படுகிறது. 1965ஆம் ஆண்டு தமிழர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் போது இந்திய இராணுவத்தால் 300 ...

திராவிடம் தீது!

Image
#திராவிடம் தீது! - பாவாணர் பாவாணர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு "தமிழியற் கட்டுரைகள்" என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. அதில் "திரவிடம் என்பதே தீது" என்ற தலைப்பில் பக்கம் 27 மற்றும் 28 இல் ஒரு கட்டுரை உள்ளது. அதன் முக்கிய வரிகள் கீழே, * தமிழர்கள் திரவிடர்கள் அல்லர். திராவிடர்கள் தமிழர்கள் அல்லர். * தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது. * பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாததுபோல், வடமொழி கலந்து ஆரியவண்ணமாய்ப்போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது. * தமிழ் தூய்மையான தென்மொழியென்றும் திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழி என்றும் வேறுபாடு அறிதல் வேண்டும். * தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையுங் கலப்பது போன்றது. * தமிழ் என்னுஞ்சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும் திரவிடம் என்னுஞ்சொல்லில் இல்லை. * திரவிடம் முக்கால் ஆரியமாதலால், அதனொடு தமிழையும் இணைப்பின், அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போலக் கெட்டுப்போம். பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான். * வடமொழியை நட்பாகக்கொள்ளும் திரவிடத்திற்கும், பகையாகக்கொள்ளும் தம...