நாம் திராவிடரில்லை, தமிழரே!
தமிழர் தலைவர்கள் அயோத்திதாசர், இரட்டை மலை சீனிவாசன் முதுகுக்கு பின்னால் ஒழியும் திராவிடம்! ================================= நம் கையை வைத்து நம் கண்ணை குத்துவது தான் ஆதி திராவிடர் என்ற சொல்லாகும். கால்டுவெல் பரப்பிய திராவிடம், திராவிடர் கருத்தாக்கத்தை நம்முடைய தாழ்த்தப்பட்ட தமிழர் தலைவர்கள் அயோத்தி தாசர், இரட்டை மலை சீனிவாசன், எம்.சி.இராசா போன்றோர் ஏற்றுக் கொண்டது உண்மைதான். ஒடுக்கப்பட்ட மக்களை சாதி இழிவிழிருந்து திராவிடம் என்ற சொல் மீட்டு விடும் என்று கருதியதும் உண்மைதான். ஒடுக்கப்பட்ட தமிழர்களை சாதி பேதமற்ற திராவிடர்கள் என்று அழைத்ததும் உண்மைதான்.ஆனால், அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழரல்லாத தெலுங்கு, கன்னடம், மலையாள ஒடுக்கப்பட்ட மக்கள் யாவரும் தங்கள் இழிவிழிருந்து திராவிடர் என்ற சொல் மீட்கும் என்று ஒருபோதும் கருதவே இல்லை. 1922 ஆம் ஆண்டு நீதிக்கட்சி பிறப்பித்த அரசாணை எண்: 817, 25.03.1922 படி பஞ்சமர் , பறையர் என்று குறிப்பிடுவதை நீக்கி அதற்குப் பதிலாக ஆதி திராவிடர் என்றும், ஆதி ஆந்திரர் என்றும் குறிப்பிடப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது. தாழ்த்தப்பட்ட தமிழர்கள் ...