Posts

Showing posts from November, 2024

நாம் திராவிடரில்லை, தமிழரே!

Image
தமிழர் தலைவர்கள் அயோத்திதாசர், இரட்டை மலை சீனிவாசன் முதுகுக்கு பின்னால் ஒழியும் திராவிடம்! ================================= நம் கையை வைத்து நம் கண்ணை குத்துவது தான் ஆதி திராவிடர் என்ற சொல்லாகும். கால்டுவெல் பரப்பிய திராவிடம், திராவிடர் கருத்தாக்கத்தை  நம்முடைய தாழ்த்தப்பட்ட தமிழர் தலைவர்கள் அயோத்தி தாசர், இரட்டை மலை சீனிவாசன், எம்.சி.இராசா போன்றோர் ஏற்றுக் கொண்டது உண்மைதான். ஒடுக்கப்பட்ட மக்களை சாதி இழிவிழிருந்து திராவிடம் என்ற சொல் மீட்டு விடும் என்று கருதியதும் உண்மைதான்.  ஒடுக்கப்பட்ட தமிழர்களை சாதி பேதமற்ற திராவிடர்கள் என்று அழைத்ததும் உண்மைதான்.ஆனால், அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழரல்லாத தெலுங்கு, கன்னடம், மலையாள ஒடுக்கப்பட்ட மக்கள் யாவரும் தங்கள் இழிவிழிருந்து திராவிடர்  என்ற சொல் மீட்கும் என்று ஒருபோதும் கருதவே இல்லை. 1922 ஆம் ஆண்டு நீதிக்கட்சி பிறப்பித்த  அரசாணை எண்: 817, 25.03.1922 படி பஞ்சமர் , பறையர் என்று குறிப்பிடுவதை நீக்கி அதற்குப் பதிலாக ஆதி திராவிடர் என்றும், ஆதி ஆந்திரர் என்றும் குறிப்பிடப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது. தாழ்த்தப்பட்ட தமிழர்கள் ...

பெரியார் ஆந்திரர்களை பித்தலாட்ட கருங்காலிகள் என்பாரா?

Image
தமிழ்நாடு தமிழருக்கே..! என்பது பித்தலாட்ட கருங்காலிகளின் கோரிக்கையா? =============================== அண்மையில் சென்னை கோகலே ஹாலில் திரு.சி.டி.டி.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழர் ராஜீயம் என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள் என்று பெரியார் அழுத்தந்திருத்தமாகக் கூறியிருக்கிறார். இது ஏற்கெனவே பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. 'இப்போது தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று எழுதியும், பேசியும் வருகிறார்கள். ஆகவே, வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருக்கிறதாக நன்கு விளங்குகிறது. இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் அரசு என்று கூறக் கூடாதென்றும் திராவிடம், திராவிடர், திராவிடநாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு என்றே கூற வேண்டுமென்று அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது, தமிழ்நாட்டின் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம் ஆந்திர, மலையாள, கன்னட மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும் நாட்டையை...

திராவிடம் - ஒரு கற்பனை கோஷம்! - ப.ஜீவானந்தம்

Image
"திராவிட நாடு”- ஒரு கற்பனை கோஷம்! =================================== ஐக்கிய கேரளம், ஐக்கிய தமிழகம், விசால ஆந்திரம், சம்யுக்த கன்னடம், ஐக்கிய மகாராஷ்டிரம், மகாகூர்ஜரம், ஐக்கிய பாஞ்சாலம் என்று, குமரி முதல் இமயம் வரை மொழி ராஜ்யக் கிளர்ச்சி நடப்பதே இன் றைய யதார்த்த நிலைமை.  இந்த கிளர்ச்சி எதைக் காட்டுகிறது? இந் தியாவில் மொழிவழியில் புதிதாக உருவாகியுள்ள தேசீய இனங்கள் சிதறிக்கிடக்கும் தங்கள் தாயகங்களை முறையாகச் சீரமைத்துக் கொள்ளும்பொருட்டு, சிதறுண்ட நிலையே சீரான நிலை எனக்கூறு வோரை எதிர்த்துப் போராடுகின்றன என்பதையே காட்டுகிறது. இந்த மொழி ராஜ்ய ஜனநாயகக் கிளர்ச்சியில், தென்னிந்தியாவிலும் சரி, வட இந்தியாவிலும் சரி, எங்கும் "திராவிட-ஆரிய இன"ப் பேச்சு எழுந்ததில்லை; எழவில்லை. பொதுவான மொழி, பொதுவான நிலப்பரப்பு, பொதுவான பொருளாதார வாழ்வு, பொதுவான கலை, கலாச்சாரப் பண்பாடுகளுடையதும் சரித்திர பூர்வமாகப் பரிணமித்ததுமான நிலையான சமுதாயத்தையே தேசிய இனம் என்று நவீன சமுதாய விஞ்ஞானிகள் வரையறுத்துக் கூறுகிறார்கள்.  இத்தகைய தேசீய இனங்கள் (Nationalities) அல்லது மொழிவழி இனங்கள்தான் இன்றிர...

திராவிடம் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டா? ப.ஜீவானந்தம்

Image
திராவிடம் என்பதற்கு இலக்கியச் இலக்கியச் சான்றுகள் உண்டா? ================================ ப.ஜீவானந்தம் ================================== மீண்டும் திராவிடமா? தமிழ்த்தேசியமா? கருத்துரையாடல்கள் சமூக ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மதில் மேல் பூனையாக நின்று வேடிக்கை பார்ப்பது வியப்பாக உள்ளது. திராவிட கட்சிகளிடம் மடியேந்தி சீட்டுப் பிச்சை கேட்கும் நிலை இருப்பதால் திராவிட மறுப்பை பேசவே அஞ்சுகின்றன.  கடந்த கால வரலாற்றில் ஆரிய-  திராவிட இனக் கோட்பாட்டை கடுமையாகவே கம்யூனிஸ்டுகள் மறுத்து வந்துள்ளனர்.  கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ப.ஜீவானந்தம் இதில் முதன்மையானவர். மொழிவழி தேசிய இன வரையறையை முன்மொழிந்து, திராவிட இன வரையறையை முற்றிலும் மறுத்துள்ளார்.  திராவிடம் குறித்து அவர் எழுதியவற்றிலிருந்து சிலவற்றை இங்கு தந்துள்ளோம். திராவிடம் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டா? =============================== "திராவிட நாடு" கோஷத்தை நியாயப்படுத்த பழைய இலக் கியங்களிலிருந்து சான்றுக் காட்டப்படுகிறது. பழைமையான தமிழ் இலக்கியம் எதிலாவது தமிழனை, திர...