வடக்கெல்லைப் போராளி தளபதி கே.விநாயகம் பிறந்தநாள் 27.5.1914
வடக்கெல்லை மீட்பு போராட்டத் தளபதி கே.விநாயகம் பிறந்த நாள் 27.05.1914 ======================================= மொழிவழித் தாயக மீட்புப் போரில் வடக்கெல்லையில் ஆந்திரர்களின் தமிழர் மண் பறிப்புக்கு எதிராக மிகத் தீவிரமாகப் போராடியவர். சட்டமன்றத்திலும் சித்தூர் மண்ணை மீட்டிடவும் வாதாடியவர் தளபதி கே.விநாயகம் . தமிழக எல்லைப் மீட்புப் போராளி தளபதி விநாயகம் புகழ் ஓங்கட்டும்! ம.பொ.சி.யோடு இணைந்து போராடிய தளபதி கே.விநாயகம்அவர்களின் சட்ட மன்ற உரைகளின் சுருக்கம். "சித்தூர் மாவட்டம் ஆந்திரர்களின் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சித்தூர் மாவட்டம் பல மொழியினர் கூடி வாழும் மாவட்டம் ஆகும். தமிழர்களே பெருவாரியாக இங்கு வாழ்கின்றனர். ஆனாலும் தாலுகா அலுவலகங்கள், போலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் தெலுங்கில் மட்டுமே ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 1908-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக அங்கு வாழும் தமிழர்களுக்கு தங்கள் தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது....