அன்னியரான துலுக்கனுக்கு - பார்ப்பானுக்கு இங்கு என்ன உரிமை! - ஈ.வெ.இராமசாமி முழு உரை.
அன்னியரான பார்ப்பனர் - துலுக்கருக்கு இங்க என்ன உரிமை! -ஈ.வெ.இராமசாமி ==================================== எத்தனை முறை ஈ.வெ.ரா.வை பற்றி எடுத்துச் சொன்னாலும், ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகள் திருந்த மறுக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் " என் தலைவர் பெரியாரே, தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டி" என்று ஜீனியர் விகடன் இதழில் பேட்டி தந்துள்ளார். தமிழ் மொழி எதிர்ப்பாளர், தமிழின மறுப்பாளர் ஈ.வெ.ரா. ஒருபோதும் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாக இருக்க முடியாது. அவரின் உரையாடல், எழுத்து, பேச்சு எவற்றிலும் தமிழ்மொழி, தமிழர் இனம், தமிழர் தாயக மறுப்பு ஆகியவற்றை அவர் நடத்திய விடுதலை ஏட்டையே சான்றாகத் தந்து பலமுறை எழுதியுள்ளோம். பிராமணீய இந்திய அரசு இசுலாமிய சமூகத்தை எப்படி அணுகுகிறது என்பதை ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. இந்தியாவை இந்து சாம்ராஜ்யமாக மாற்றிட இசுலாமியர்கள் தடையாக இருப்பதால், இசுலாமிய மக்களை அந்நியராகக் கூறி, இந்தியாவை விட்டு வெளியேற வைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பலின் திட்டமாகும். இந்த திட்டத்தை வழி மொழியும் ஒருவராக ...