ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்
ஈரோட்டுப் பண்டார சன்னதிகள்! ================================ எழுதியவர்: கி.ஆ.பெ. விசுவநாதம் ================================= ( 1949 இல் ஈவெரா - மணியம்மையார் திருமணம் நடைபெற்ற போது திராவிடர் கழகத்திலிருந்த பலரும் ஆத்திரப்பட்டார்கள். தமிழர் கழகம் நடத்திக் கொண்டிருந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களிடமும் தங்கள் கருத்தை கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். திராவிடர் கழகத் தொண்டர்களுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் "தமிழர் நாடு" இதழில் விடையிறுத்தார். பெரியார் யார்? என்பதை நான் முன்னே கண்டேன்: நீங்கள் பின்னே காண்கிறீர்கள். அவ்வளவுதான் எனக்கும் உங்களுக்குமுள்ள வேறுபாடு என்று பதில் தந்தார். ஈவெராவின் கிழமணத்திற்கு ஆத்திரப்படும் நீங்கள் பல கட்டங்களில் இயக்கத்தை சீர்குலைத்த ஈவெரா மீது ஏன் ஆத்திரம் வர வில்லை என்ற கேள்வியை எழுப்பினார். ஈவெரா இயக்கத்திற்கு செய்த தீங்குகளைப் பட்டியலிட்டு "ஈரோட்டுப் பண்டார சன்னதிகள்" என்ற தலைப்பில் கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய கட்டுரை இது.) பெரியார் ஈ.வெ.ரா. திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல கடிதங்கள் எனக்கு வந்தும், வந்து கொண்டும் இருக்கின்றன. ...