தமிழ்நாட்டின் முதலமைச்சராய் தமிழாய்ந்த தமிழன் வர வேண்டும்! பாரதிதாசன் பாடியது ஏன்?
தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழகத்தின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்! பாரதிதாசன் பாடியது ஏன்? ================================= பாவேந்தர் சார்ந்திருந்த திராவிட இயக்கத்தார் இன்றளவும் தங்கள் மூதாதையராகக் கருதும் ஜஸ்டிஸ் கட்சியார் 1920 தொடங்கி 1937 வரை ஆட்சியிலிருந்த போது தொடர்ந்து ஆந்திரரே முதலமைச்சர்களாக மட்டுமின்றி, அமைச்சர்களாகவும் வந்தனர். இருவேறு சந்தர்ப்பங்களில் தமிழரிருவர் ஒருவன் பின் ஒருவராக அமைச்சரானதுண்டு. அவர்கள் திரு.சிவஞானம் பிள்ளை, சர். பிடி.ராசன் ஆகியோராவார். தமிழ் மாநிலமானது தெலுங்கு - கன்னட- மலையாள மொழிகள் வழங்கும் பிரதேசங்களும் சேர்ந்த சென்னை மாகாணத்திலிருந்த போது, " தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழகத்தின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்" எனப் பாடினார் பாவேந்தர். இது தமிழகம் தனியரசு மாநிலம் ஆவதற்கு முன்னர் 1945இல் அவர் பாடியது. நூல்: ம.பொ.சி . எழுதிய "எனது பார்வையில் பாவேந்தர்" நூலிலிருந்து.