Posts

Showing posts from April, 2025

தமிழ்நாட்டின் முதலமைச்சராய் தமிழாய்ந்த தமிழன் வர வேண்டும்! பாரதிதாசன் பாடியது ஏன்?

Image
தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழகத்தின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்! பாரதிதாசன் பாடியது ஏன்? ================================= பாவேந்தர் சார்ந்திருந்த திராவிட இயக்கத்தார் இன்றளவும் தங்கள் மூதாதையராகக் கருதும் ஜஸ்டிஸ் கட்சியார் 1920 தொடங்கி 1937 வரை ஆட்சியிலிருந்த போது தொடர்ந்து ஆந்திரரே முதலமைச்சர்களாக மட்டுமின்றி, அமைச்சர்களாகவும் வந்தனர். இருவேறு சந்தர்ப்பங்களில் தமிழரிருவர் ஒருவன் பின் ஒருவராக அமைச்சரானதுண்டு. அவர்கள் திரு.சிவஞானம் பிள்ளை, சர். பிடி.ராசன் ஆகியோராவார். தமிழ் மாநிலமானது தெலுங்கு - கன்னட- மலையாள மொழிகள் வழங்கும் பிரதேசங்களும் சேர்ந்த சென்னை மாகாணத்திலிருந்த போது, " தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழகத்தின் முதலமைச்சராய் வருதல் வேண்டும்" எனப் பாடினார் பாவேந்தர். இது தமிழகம் தனியரசு மாநிலம் ஆவதற்கு முன்னர் 1945இல் அவர் பாடியது. நூல்:  ம.பொ.சி . எழுதிய "எனது பார்வையில் பாவேந்தர்" நூலிலிருந்து.

சிறையில் நஞ்சு வைத்து கொல்லப்பட்ட உழவர் போராளி களப்பால் குப்புச்சாமி நினைவு நாள் 18.4.1948

Image
சிறையில் நஞ்சு வைத்து கொல்லப்பட்ட உழவர் போராளி களப்பால் குப்புச்சாமி நினைவு நாள் 18.4.1948 1940 கால கட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் பண்ணையார்கள் சாணிப்பால் , சவுக்கடி தந்து உழவர்களை கொடுமைப் படுத்தி வந்தனர். இந்த அநீதிக்கு எதிராக போராடி சிறை சென்று உயிர் நீத்த  ஒப்பற்ற போராளிதான் களப்பால் குப்பு என்றழைக்கப்படும் குப்புச்சாமி. இவர் மன்னார் குடி வட்டம் களப்பால் கிராமத்தில்  11.3.1911இல் அருணாசலம்- சமுத்திரம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தையார் ஊர்த் தலையாரி. அக்காலத்தில் ஊர்த்தலையாரி ஆனாலும், உழவுக் கூலி செய்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாது. அருணாசலம் மகனாகிய குப்புச்சாமியை  எப்படியோ ஒரு ஆசிரியர் பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவன் மற்ற சாதி குழந்தைகளை தொட்டுவிடக்கூடும் என்பதால் திண்ணையில் நின்று படிக்க வற்புறுத்தப்பட்டான். மற்ற சாதி குழந்தைகளையோ, ஆசிரியர்களையோ தொட்டு விட்டால் பிரம்படி தருவது அங்கு வழமையாகும். பல்வேறு நெருக்கடி காரணமாக ஆறாம் வகுப்பு வரை மட்டுமே குப்புசாமியால் படிக்க...