திருமணம் என்பது கிரிமினல் குற்றம்! - ஈ.வெ.இராமசாமி
திருமணம் என்பது கிரிமினல் குற்றம்! .ஈ.வெ.இராமசாமி ==================================== திருமண வீட்டில் ஒலிபெருக்கி முன்னால் நின்று கொண்டு திருமணம் என்பது கிரிமினல் குற்றம் என்பார் ஈ.வெ.ரா. திருமணத்தை கிரிமினல் குற்றம் என்று சொல்பவரே திருமணத்தை நடத்தி வைத்தால் அவரும் கிரிமினல் குற்றத்திற்கு உடந்தை என்று தானே பொருள். திருமணங்களில் புரோகித பிராமணர்களை ஒழிக்க முடியாததால், திருமணத்தை தடை செய்வதன் மூலம் புரோகித பிராமணர்களை ஒழிக்க முடியும் என்று ஈ.வெ.ரா. நம்பினாரா என்றும் தெரியவில்லை? ஈ.வெ.ரா. நடத்தும் சுயமரியாதை திருமணங்களில் புரோகிதர்கள் கிடையாதே? அப்புறம் ஏன் திருமணத்தை தடை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. ஏன், திருமணத்தை தடை செய்யச் சொன்ன ஈ.வெ.ரா.வே இரண்டுமுறை திருமணம் செய்து கொண்டவர் தானே? பெண்கள் ஆண்கள் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரே வழி திருமணத்தை தடை செய்தால் குடும்பம் என்ற அமைப்பு இல்லாமல் போகாதா? மனித உற்பத்திக்கு திருமண உறவு தேவையில்லை என்றால் , மனித உற்பத்தி நின்று விடாதா? அல்லது திருமணம் செய்யாமலே விருப்பப்பட்ட ஆண...