Posts

Showing posts from January, 2025

திருமணம் என்பது கிரிமினல் குற்றம்! - ஈ.வெ.இராமசாமி

Image
திருமணம் என்பது  கிரிமினல் குற்றம்! .ஈ.வெ.இராமசாமி  ==================================== திருமண வீட்டில் ஒலிபெருக்கி முன்னால் நின்று கொண்டு திருமணம் என்பது கிரிமினல் குற்றம் என்பார் ஈ.வெ.ரா. திருமணத்தை கிரிமினல் குற்றம் என்று சொல்பவரே திருமணத்தை நடத்தி வைத்தால் அவரும் கிரிமினல் குற்றத்திற்கு உடந்தை என்று தானே பொருள். திருமணங்களில் புரோகித பிராமணர்களை ஒழிக்க முடியாததால், திருமணத்தை தடை செய்வதன் மூலம் புரோகித பிராமணர்களை ஒழிக்க முடியும் என்று ஈ.வெ.ரா. நம்பினாரா என்றும் தெரியவில்லை?  ஈ.வெ.ரா. நடத்தும் சுயமரியாதை திருமணங்களில் புரோகிதர்கள் கிடையாதே? அப்புறம் ஏன் திருமணத்தை தடை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. ஏன், திருமணத்தை தடை செய்யச் சொன்ன ஈ.வெ.ரா.வே இரண்டுமுறை திருமணம் செய்து கொண்டவர் தானே?  பெண்கள் ஆண்கள் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரே வழி திருமணத்தை தடை செய்தால் குடும்பம் என்ற அமைப்பு இல்லாமல் போகாதா? மனித உற்பத்திக்கு  திருமண உறவு  தேவையில்லை என்றால் , மனித உற்பத்தி நின்று விடாதா?  அல்லது திருமணம் செய்யாமலே விருப்பப்பட்ட ஆண...

ஈ.வெ.இரா.பெரியாரும் - இந்தியும்!

Image
ஈ.வெ.இரா.பெரியாரும் - இந்தியும்! - புலவர் வி. பொ.பழனிவேலனார் பெருஞ்சித்திரனார் நடத்திய  " தென்மொழி"யில் எழுதிய கட்டுரை இது! (மார்ச் - 1965). ===================================== ஈ.வே. இராமசாமிப் பெரியார் 1925 முதல் என் மதிப்பிற் குரியராயிருந்தவர்; தமிழரின் தன்மானத்தைத் தட்டி யெழுப்பியவர். அவர்தம் தன்மான இயக்கக் கொள்கைகளை இன்றுவரை அடியொற்றி நடைமுறையில் பின்பற்றி வருகின்றவன் யான்.  ஆனால் அவர் இன்று மேற்கொண்டுள்ள கொள்கை தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் கேடு பயப்பதாய் உள்ளது . மேலும், 'தமிழ்ப் புலவர்களெல்லாம் குமுக(சமூக) த்திற்கிரண்டகஞ் செய்பவர்கள்' என்றும் கூறிவருகின்றார். இது நனியும் வருந்தற் பாலதே.  1938-இல் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார் திரு. இராசாசி. அதைமுனைந்து நின்று எதிர்த்தார் பெரியார் பின்னர், இருப்புப் பாதைப் பெயர்ப் பலகைகளில் முதலில் இந்தியில் பெயர் எழுதப்பட்டிருந்ததை எதிர்த்துக் கரி நெய் (Tar) கொண்டு அழித்தார்; பிறரையும் அழிக்கச் செய்தார். இதனால் பலர் சிறைப்படுத்தப் பெற்றுத் தண்டிக்கப்பட்டனர்.  அத்தகையப் பெரியார் இன்ற...

பூணூலை அறுத்தால் ஜாதி ஒழியுமா - ப.ஜீவானந்தம்

Image
1957ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது.  அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியாரை பற்றி தலைவர் ப.ஜீவானந்தம் அவர்கள் பேசியது: தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான 'ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும் ' என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப் புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக்குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய 'அறப்போர் ' முறைகள் இந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டன. இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தி...

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்

ஈ.வெ.கி.சம்பத்திற்காக காங்கிரசு ஆதரவை விலக்கிக் கொண்ட பெரியார்! "இரத்தம் தண்ணீரைவிட அடர்த்தி மிகுந்தது" (Blood is thicker than water)  ===================================== 1957ஆம் ஆண்டு தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நீதிக்கட்சி பிரமுகர் தமிழரான சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியன் போட்டியிட்டார். பெரியாரிடம் அவர் ஆதரவு கேட்ட போது, பெரியார் ஆதரவு தர மறுத்து விட்டார்.  அதே சமயத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிராமணராகிய டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்தார். தமிழரை ஆதரிக்காமல் ஒரு பிராமணரை ஆதரிப்பது சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது இல்லையா? என்று கேட்டால், காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து பெரியார் எடுத்த முடிவாகும் . அதன் காரணமாகவே அங்கு போட்டியிட்ட டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரிக்கும் நிலை வந்தது.  எனவே, இதை பிராமணர் - பிராமணர் அல்லாத சிக்கலாக அணுகாமல் காங்கிரஸ் - திமுக எதிரெதிர் போட்டி சிக்கலாக அணுக வேண்டும் என்று பெரியாரிஸ்டுகள் நமக்கு பாடம் நடத்துகிறார்கள். இதே தென்சென்னையில் மீண்டும் 1962 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வந்தது. அதே பிராமணர் டி.டி‌. கிருஷ்ணமாச்சா...