Posts

Showing posts from August, 2023

ம.பொ.சி. பார்வையில் கலைவாணர்

Image
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்  நினைவு நாள் 30.8 1957 ம.பொ.சி. பார்வையில்----- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்னை வாட்டிய வறுமைக்கு வருந்தி எனக்குப் பொருள் உதவி புரிந்த மற்றொரு கலைஞரை இங்கு நான் நன்றி உணர்வோடு குறிப்பிட வேண்டும். அவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஆவார். 1948 மே 14இல்  தமிழ் எழுத்தாளர் மூன்றாவது மாநாடு நாகர் கோவிலில் நடந்தது. அந்த மாநாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், 'ஓளவை' தி.க.சண்முகம் ஆகிய கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு ' ஓளவை' தி.க.சண்முகத்துடன் கோவையிலிருந்து விமானத்தில் சென்று நானும் கலந்து கொண்டேன்.  அப்போது தெள்கெல்லை மீட்புக் கிளர்ச்சி வலுப்பெற்றிருந்தது. நாகர் கோயிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் நான் மிகுதியும் மதிக்கப் பெற்றேன். தமிழரசுக் கழகம் நடத்தி வந்த வடக்கு- தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை ஆதரிக்கும் தீர்மானம் ஒன்றும் எழுத்தாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் தமிழரசுக் கழகத்திற்கு தாம் ரூபாய் ஆயிரம் நன்கொடை அளிக்கப் போவதாக தமது செயலாளர் திரு.வே.நாராயணனைக் கொண்டு அறிவித்தார்.  அறிவித்த அ...

தமிழ், தமிழகம், தமிழினம் என்று இன்று பேசாத தமிழரில்லை! - ப.ஜீவானந்தம்

Image
தமிழ், தமிழகம், தமிழினம் என்று இன்று பேசாத தமிழன் இல்லை! -ப.சீவானந்தம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று முரசறைந்தான் புறநானூற்றுப் புலவன். “யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்றார் திருமூலர். “சேரவாரும் ஜெகத்தீரே” என்று எண்டிசையும் எதிரொலிக்க சங்கநாதம் செய்து, அகிலத்தை அரவணைத்தார் தாயுமானவர். உலகத்தை நாடாகவும் வீடாகவும் கண்ட உள்ளம்; “உள்ளியதெல்லாம் உயர்வு உள்ளிய உள்ளம்” தமிழனின் உள்ளம். காலமறிந்து, புதுமைக்குப் புதுமை செய்வது தமிழனின் மரபு. “நன்றென்று கொட்டு முரசே – இந்த நானில மாந்தருக் கெல்லாம்” என்றும், “வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரதமணித் திருநாடு” என்றும் மறுமலர்ச்சி சகாப்தத்தில் தமிழ் முரசு ஒலிக்கிறது. உலகம் தழுவிய தமிழன், “இந்தியா எங்கள் நாடு” என்று இசைமுழக்கம் செய்த தமிழன், “வாழ்க நற்றமிழர்” என்று வாழ்த்தியது ஏன்? தமிழினத்தைச் சிறப்பாகக் குறிப்பிட்டு, பல்லாண்டு பாட வேண்டியது எதற்காக? காரணம், காலத்தின் சிறப்பு. தமிழ், தமிழகம், தமிழினம் என்று இன்று பேசாத தமிழன் இல்லை எனலாம். இன உணர்ச்சி அலைமேல் அலையாக மோதுகிறது. “கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும்” காவிரிப்...

சென்னை நாள் கொண்டாடுவோர் ம.பொ.சி.யை மறக்கலாமா?

Image
#ChennaiDay #Madrasday ஆக:22  சென்னை தினம் கொண்டாடுபவர் ம.பொ.சி.யை மறக்கலாமோ? சென்னை நகரம் 22.8.1639ஆம் ஆண்டு உருவான நாளை "சென்னை தினம்" எனும் பெயரில் கடந்த பல்வேறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு செய்தி ஊடகங்களில் சென்னை குறித்து வரலாற்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  அதில் சென்னையை மீட்க தமிழர்கள் ஆந்திரர்களோடு நடத்திய போராட்டம் குறித்தும் விடாப்பிடியாகப் போராடி தமிழகத்திற்கு சென்னையை மீட்டுத் தந்த ம.பொ.சிவஞானம் குறித்தும் எந்தப்பதிவும் இல்லை. தமிழரல்லாதவர்கள் ஊடகத்துறையில் செல்வாக்கு செலுத்துவதால் சென்னை மீட்புப் போராட்டம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சென்னை மீட்பு வரலாற்றை இனி சுருக்கமாகக் காண்போம். சென்னை நகரம் தொன்று தொட்டு தமிழர்களின் பூமியாகும். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆண்ட தொண்டை மண்டலப்பகுதியில் கட்டுப்பட்ட பகுதியாகும். பிற்காலத்தில் தொடர்ந்து படையெடுத்து வந்த தமிழரல்லாதவர்கள்  கையில் சென்னை நகரம் இருந்த போதும் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக இருந்துள்ளனர். 1912ஆம் ஆண்டில் ஆந்திரர்கள் ஆந்திர மகாசபை அமைத்து மொழிவழி மாகாணம் கேட்டுப் போராடி வந...

ப.ஜீவானந்தம்

Image
'பொதுவுடைமைப் போராளி'  ப.சீவானந்தம் பிறந்த நாள்: 21.8.1907 தமிழ்நாட்டில் இந்தியப் பொதுவுடைமை இயக்கங்கள் தமிழ்மொழி, இனம், பண்பாடு குறித்துப் பேசினாலே அது குறுகிய இனவெறி என்று முத்திரை குத்துகின்றனர்.  குறிப்பாக சி.பி.எம். கட்சி பாரதமாதாவின் பாதந்தாங்கி கட்சியாகவே செயல்பட்டு வருகிறது.  தமிழின உணர்வு என்றாலே அதற்கு வேப்பங்காய் தான். ஆனால் பழைய பொதுவுடைமை இயக்க வரலாறு அவ்வாறு இல்லை.  இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு தமிழ்மரபு  வேர்களிலிருந்து பொதுவுடைமைக் கருத்துகளை வெளிக் கொணர்ந்து தமிழர் நலன் நோக்கில் போராடிய ஒரு மாபெரும் தலைவர் ப.சீவானந்தம். அவர் தொடக்கத்தில் காந்தியின் மீது ஈர்ப்பு கொண்டு கதராடை உடுத்திய படி பேராயக் கட்சியில் பணியாற்றினார். இந்திய விடுதலைக்காக பிரித்தானியரை எதிர்த்து சிறை சென்றார். பின்னர்  பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தோடு தோழமை கொண்டார். பெரியாரின் குடியரசு ஏட்டில் தொடர்ந்து எழுதினார். பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன ஆனேன்? நூலை எழுதியதற்காக சிறை தண்டனை பெற்றார்.  சீர்திருத்தம், பொதுவுடைமை  கருத்துகளை பர...

எல்லைப் போராளி குஞ்சன் நாடார்

Image
தெற்கெல்லை மீட்புப் போராளி'  குஞ்சன் நாடார் நினைவு நாள் 19.8.1974   குஞ்சன் நாடார் அவர்கள் இன்றைய கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை திருப்புறம் என்ற ஊரில் அப்பியான் வைத்தியர் என்ற இராயன் நாடார் ஆசான் -அறத்தம்மாள் இணையருக்கு மகனாக 23.1.1910இல் பிறந்தார். இவரின் தந்தையார் பண்டாரவிளை தறவாடு என்ற செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ் மருத்துவம் கற்றதோடு சிலம்பம், களரி விளையாட்டுகளில் கை தேர்ந்தவர். குஞ்சன் நாடார் சிறுவயதிலே தந்தையாரிடம் மரபுக்கலைகளை கற்றுத் தெளிந்தார்.   நெல்லிமூடு பள்ளியில் தொடக்கக் கல்வியையும், நெய்யாற்றின்கரையில் பள்ளி இறுதி வகுப்பையும் முடித்த இவர் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அதன் பிறகு அரசர் சட்டக்கல்லூரியில் பயின்று வழக்கறிஞர் தொழிலை மேற் கொண்டார். 1935இல் பேராயக் கட்சியில் இணைந்து செயல்பட்டார். அதன்பிறகு  திருவிதாங்கூர் சமசுதானக் காங்கிரசில் இணைந்தார். 1938ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் பொறுப்பாட்சிப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். திருவனந்தபுரம் வட்டியூர...

பெரியாரின் முகத்தில் கரி பூசிய ஜின்னா

Image
பெரியாரின் முகத்தில் கரிபூசிய ஜின்னா! 1940ஆம் ஆண்டு பெரியார் மும்பைக்குச் சென்று ஜின்னா, அம்பேத்கர் ஆகிய இரண்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசிய நிகழ்வை வரலாற்றின் முக்கிய நிகழ்வாக திராவிட இயக்கத்தவர் குறிப்பிடுவர். அந்தச் சந்திப்பில் பெரியார் திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவளிக்க வேண்டுமாறு ஜின்னாவை வற்புறுத்தினார் என்று ஒற்றை வரியில் சொல்லி மழுப்பி விடுவார்கள். உண்மையில் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவு தந்தாரா? இல்லையா? எனும் கேள்விக்கு விடை சொல்வார் எவருமில்லை. பெரியாரும், அண்ணாவும் கூட இந்தச் சந்திப்பு குறித்து திறந்த மனதோடு கூறிட முன்வரவில்லை. அதற்குக்காரணம் திராவிடநாடு விடுதலை என்பது மக்களின் விருப்பமானதும் அல்ல. சாத்தியமானதும் அல்ல என்பதை ஜின்னா தெளிவுபடுத்தி விட்ட காரணத்தால் இதனை தமது இயக்கத்தவர்களிடம் கூற வேண்டியிருக்கும். இதன் காரணமாக இயக்கத்தவர் நம்பிக்கை இழந்து விடுவர் என்பது தான். இதைப் பற்றி விரிவாகக் காண்போம். 8.1.1940 மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை ஜின்னா, அம்பேத்கர், பெரியார் சந்திப்பு கலந்துரையாடல் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பில் அண்ணா பங்கேற்காமல் தாராவி சென்று விடுகி...

திருப்பதிக்கு சென்று ம.பொ.சி. போராடிய நாள் 16.8.1947

Image
"திருப்பதி தமிழர்களுக்கே" ம.பொ.சி. தொண்டர் படையோடு புறப்பட்டு போராடிய நாள்: 16.8.1947 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அன்று சென்னை மாநகரில் விடுதலை விழாக் கொண்டாடிய தமிழக எல்லைப் மீட்புப் போராளி ம.பொ.சி. அவர்கள் "போர் முறையும் போர் முனையும் மாறும் நாள்" என்று அறிவித்தார்.  திருப்பதியை மீட்பதே இனி என் முதல் வேலை என்று கூறி விட்டு மறுநாள் (16.8.1947) காலையில் 12 பேர்களோடு வடக்கெல்லையில் உள்ள திருப்பதி நோக்கிப் புறப்பட்டார். அவருடன் புறப்பட்ட தமிழரசுக் கழகத் தோழர்களின்  பெயர்கள் வருமாறு: 1.திரு. கொ.மோ. ஜனார்த்தனம்  2.திரு. சோம. சுவாமிநாதன்  3.திரு. தாமோதரம் 4.திரு. வேங்கடசாமி 5.திரு. கிருஷ்ணமூர்த்தி  6.திரு. அம்மையப்பன் 7.திரு. விசுவநாதன்  8.திரு. லூயிஸ் 9.திரு. மு. வேணுகோபால்  10.திரு. தங்கவேலு  11.திரு. டி. ஆறுமுகம் 12.திரு. ஜி. சுப்ரமணியம்  இந்தத் தோழர்களை தமிழினத்தவர் ஒருபோதும் மறத்தல் கூடாது. அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயராகும். ஏனெனில், திருப்பதி நோக்கிச் சென்ற இந்தத் தமிழர்கள் மீது ஆந்திரர்கள் ...

மலையாளி பணிக்கருடன் சண்டை போட்ட ம.பொ.சி.

Image
தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுக்க   மலையாளி பணிக்கருடன் சண்டை போட்ட ம.பொ.சி! ( இந்தியத் துணைக்கண்டத்தில் 1952க்குப் பிறகு மொழிவழி தாயகப்  போராட்டங்கள் வெடித்த பிறகு அந்தந்த மொழி பேசும் தாயகப் பகுதிகளை கண்டறிந்து உருவாக்க  பசல்அலி ஆணையம் அமைக்கப்பட்டது. அதில் ஒரு உறுப்பினர் தான்  மலையாளி கே.எம்.பணிக்கர். அவர் மலையாள இன உணர்வோடு செயல்பட்டு தமிழர் தாயகப் பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை எப்படி கேரளவோடு இணைத்தார்  என்பதை விளக்குகிறார் ம.பொ.சி.) பணிக்கரின் வாய்ச் சண்டை நான் பஸல் அலி கமிஷனைப் பேட்டி கண்டபோது, அக்கமிஷன் அங்கத்தினரான கே. எம். பணிக்கர் என்னிடம் சுமார்அரைமணி நேரம் உரையாடினார்-இல்லை, திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் ‘வாய்ச்சண்டை’ நடத்தினார்.  தேவிகுளம், பீருமேடு தாலுக்காக் களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாய மென்றும், கமிஷன் அதனை ஏற்க முடியாது என்றும் பணிக்கர் ஆவேசமாகக் கூறினார்.  அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது. அதனால், நான், “தாங்கள் மலையாளிகள் சார்பில் ...

மைனாரிட்டி முஸ்லீம்களுக்கு சலுகை கொடுப்பது ஆபத்தானது! - பெரியார்

Image
1962ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்  திமுகவை தோற்கடிக்க பெரியார் அரும் பாடுபட்டார். இசுலாமியர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் திமுகவை வாக்களித்தனர். பெரியார் சும்மா இருப்பாரா? எப்போதும் பிராமண  பூச்சாண்டி காட்டும் பெரியார் இந்த தடவை முஸ்லீம்கள் பூச்சாண்டியை கையிலெடுத்தார். மைனாரிட்டி முஸ்லீம்களுக்கு அதிக சலுகை காட்டி விட்டோம். அதாவது, "பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதிக்க அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது" என்று எழுதினார். மைனாரிட்டிகளுக்கு அதிக சலுகை கொடுப்பது தமிழ்நாட்டிற்கு கேடு என்பதை மைனாரிட்டி அறிக்கை என்று தலைப்பில் பெரியார் எழுதினார். அது பின்வருமாறு: மைனாரிட்டி அறிக்கை: ஈவெரா (மார்ச் 6, 1962  ‘விடுதலை தலையங்கம்; ‘பெரியார்’ ஈவெரா எழுதியது) நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிட்டி [சிறுபான்மையினர்] சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ- இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு பொது வ...