ம.பொ.சி. பார்வையில் கலைவாணர்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள் 30.8 1957 ம.பொ.சி. பார்வையில்----- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்னை வாட்டிய வறுமைக்கு வருந்தி எனக்குப் பொருள் உதவி புரிந்த மற்றொரு கலைஞரை இங்கு நான் நன்றி உணர்வோடு குறிப்பிட வேண்டும். அவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஆவார். 1948 மே 14இல் தமிழ் எழுத்தாளர் மூன்றாவது மாநாடு நாகர் கோவிலில் நடந்தது. அந்த மாநாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், 'ஓளவை' தி.க.சண்முகம் ஆகிய கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு ' ஓளவை' தி.க.சண்முகத்துடன் கோவையிலிருந்து விமானத்தில் சென்று நானும் கலந்து கொண்டேன். அப்போது தெள்கெல்லை மீட்புக் கிளர்ச்சி வலுப்பெற்றிருந்தது. நாகர் கோயிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் நான் மிகுதியும் மதிக்கப் பெற்றேன். தமிழரசுக் கழகம் நடத்தி வந்த வடக்கு- தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை ஆதரிக்கும் தீர்மானம் ஒன்றும் எழுத்தாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் தமிழரசுக் கழகத்திற்கு தாம் ரூபாய் ஆயிரம் நன்கொடை அளிக்கப் போவதாக தமது செயலாளர் திரு.வே.நாராயணனைக் கொண்டு அறிவித்தார். அறிவித்த அ...