Posts

Showing posts from July, 2024

திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிர்ச் சொல்லா? - சுப.வீ.க்கு மறுப்பு!

Image
திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிர்ச் சொல்லா? - சுப.வீ.க்கு மறுப்பு! ==================================== திராவிடம் என்பது கருத்தியல், திராவிடம் என்பது கோட்பாடு, திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிர்ச் சொல் என்று தோழர் சுப.வீ. உருட்டுவதில் ஏதாவது சான்று உண்டா? திராவிடப் பிதா மகன் ஈ.வெ.ரா . அவர்கள் தெலுங்கர், கன்னடர்,   மலையாளிகளுக்காக " தமிழர்" என்ற சொல்லை மறுத்து " திராவிடர்" என்ற ஆரிய உருவாக்கச் சொல்லைத் தமிழர் மீது திணித்தார் என்பதுதான் உண்மை. இதற்கு சான்று தருகிறோம்; சேலம் செவ்வாப் பேட்டையில் ஈ.வெ.ரா.பேசி குடியரசு இதழில் 29.01.1944ல் வெளியாகி (ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி-2, இயக்கங்கள் 1 பக்கம் 889)  ”திராவிடச் சமுதாயம் என்று நம்மைக் கூறிக்கொள்ளவே கஷ்டமாயிருக்கும்போது ’தமிழர்’ என்று எல்லாரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும். இங்கே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாதுரை தமிழர்.  இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள் என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனெனச் சொல்லிக் கொள்ள ஒப்புக் கொள்கிறேன். ஆனால், எல்லாக் கன்னடியரும் ஒப்ப...

திராவிட நாடு திராவிடருக்கே! ஈவெரா மாற்றியது ஏன்? - கவி.கா.மு.செரீப்

Image
தமிழ்நாடு எல்லை மீட்புப் போராளி  கவி.கா.மு.செரீப் நினைவு நாள்  7.7.1994 =================================== தமிழரசுக் கழகம் ஏன் வந்தது? - கவி.கா.மு.செரீப் தமிழ்....தமிழர்....தமிழ் நாட்டை... திராவிடம்...திராவிடர்... திராவிட நாடு... என்று ஈவெரா   மாற்ற வேண்டும் என்று  சொன்னது பொருந்தாக் கூற்று.  பிராமண எதிர்ப்புக்காக ஈவெரா திராவிடத்தை தூக்கிப் பிடித்தார் என்பதை ஏற்க முடியாது என்பதை 1954ல்  "தமிழரசுக் கழகம் ஏன் வந்தது"  என்ற தலைப்பில் கா.மு.செரீப் தெளிவாக விளக்கியுள்ளார். ) திராவிட நாடு திராவிடருக்கே !  ஈவெரா முழக்கத்தை மாற்றியது  ஏன்? ================================== தமிழ்நாட்டை " திராவிட நாடு"  என்று மாற்றிக் குரல் கொடுக்க ஆரம்பித்ததற்கு அவர்கள் சொல்லும் காரணம் தமிழ்நாடு என்றால் அது தமிழர்கள் அனைவருக்கும் உரிய நாடு ஆகிறதாம்.  தமிழருக்குரிய நாடு என்று ஒப்புக் கொண்டுவிட்டால் " நாங்களும் தமிழர்கள் தான்" என்று கூறி, பிராமணர்களும் தமிழகத்தில் இடம் பெற்று நிலைத்து விடுவார்களாம்!  எனவே, "திராவிட நாம் திராவிடருக்கே" என்று மாற்றிக...