Posts

Showing posts from April, 2026

கண்ணகி கோயிலை தமிழருக்கே சொந்தமாக்குவோம்!

Image
கண்ணகி கோயிலை தமிழருக்கே சொந்தமாக்குவோம்! =========================== சித்திரை முழுநிலவு நாளில் உறுதியேற்போம்! ============================ தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு ஆற்றுநீர் உரிமையை பறிக்கும் மலையாளிகளின் அரம்பத்தனத்தை அனைத்துத் தமிழரும் அறிவோம். ஆனால் தமிழர்களுக்குச் சொந்தமான கண்ணகி கோயிலை அபகரிக்க முயலும் மலையாளிகளின் சூழ்ச்சியை தமிழர்கள் இதுவரை அறியாதவர்களாகவே உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளன்று தேனி மாவட்டம் கூடலூர் மலையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். அங்கு கேரள அரசின் கெடுபிடி காரணமாக முழுச்சுதந்திரோடு தமிழர்கள் வழிபாடு நடத்த முடியாது . ஒவ்வொரு ஆண்டும் இடுக்கி மாவட்ட ஆட்சியரும், தேனி மாவட்ட ஆட்சியரும் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தான் ஒரு நாள் மட்டும் "கண்ணகி சித்திரைப் பெருவிழா" அங்கு நடத்தப்படுகிறது. மொத்தத்தில் 9 மணி நேரம் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது. அங்கு மலையாள பக்தர்களிடம் காட்டும் பரிவு தமிழக பக்தர்களிடம் காட்ட மாட்டார்கள். காரணம் கண்ணகி கோயில் தங்கள் நிலப்பகுதியில் இருப்பதால் தங்களுக்கே சொந்...

தமிழ் ஊர்ப் பெயர்களை அழித்த நீதிக்கட்சி முதல்வர் பொப்பிலி அரசர் !

Image
தமிழறிஞர் மு.வரதராசனார் பிறந்த நாள் 25.04.1912 ============================= தமிழ் ஊர்ப்பெயர்களை தெலுங்கில் மாற்றிய பொப்பிலி அரசர்! ============================= 1911ஆம் ஆண்டு ஏப்ரல் வரைக்கும் வடவேங்கடம் தமிழ்நாட்டின் எல்லையாக இருந்தது. ஆங்கிலேய அரசு நிர்வாக வசதிக்காக வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருத்தணி, புத்தூர், சித்தூர், திருப்பதி, குப்பம் ஆகிய வட்டங்களை இணைத்து சித்தூர் பெயரில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது. அப்போது ஆந்திரா மகாசபை அமைத்து “விசாலா ஆந்திரம்” கேட்டுப் போராடிய தெலுங்கர்கள் சித்தூர் பகுதியை தங்களுக்குரியதாக வாதாடி வந்தனர். இதை தமிழர்களுக்காக பாடுபடுவதாக கூறிக் கொண்ட நீதிக்கட்சி ஆந்திரர்களும் கண்டிக்க வில்லை. குறிப்பாக சென்னை மாகாண நீதிக்கட்சி முதல்வர் பொப்பிலி அரசர் (1932-1936) சித்தூர் மாவட்ட தமிழ் ஊர்ப் பெயர்களை தெலுங்கில் மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். ராவு ஸ்வச்சல்லபதி ராம்கிருஷ்ணா ரங்காராவ் என்ற பொப்பிலி அரசர் என்பது இவரின் முழுப்பெயராகும். பதிவுத்துறை, அஞ்சல் துறை இவ்விரண்டிலும் தெலுங்குப் பெயர்களை புகுத்தி தமிழ் ஊர்ப்பகுதிகளை அழித்ததாக தனது ‘மொழிப்...

அன்னை பூபதி நினைவு நாள் 19.04.1988

Image
உண்ணாநிலையில் உயிர் துறந்த 'உலகின் முதல் பெண் போராளி' அன்னை பூபதி நினைவு நாள் ==============================  19.4.1988 பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். இசைப்பிரியாவின் கதறல் காணொளி கண்டும் இந்திய அரசின் பேய் மனம் இரங்க மறுத்தது.  அன்னை பார்வதியம்மாள் சிகிச்சைக்கு வந்த போதும் இந்திய அரசின் கல் நெஞ்சம் கரையவில்லை. தமிழகம் வந்த பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியது.  தமிழ்ப்பெண்களை மதிக்கத் தெரியாத இந்திய அரசின் இந்த இழிகுணம் நேற்று முளைத்ததல்ல; அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே முளைத்த குணம். அன்னை பூபதியம்மாளின் உயிரைப் பறித்த வரலாற்றை அறிவதன் மூலம் இதனை உறுதிப்படுத்தவும் முடியும். 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைக்கும் வி.பு. போராளிகளுக்கும் ஆயுதப் போர் நடைபெற்று வந்த கால கட்டம்.  அன்று காந்திய நாட்டிற்கு அகிம்சை வழியில் பாடம் புகட்ட விரும்பி உண்ணாநிலை கொண்டு உயிர் துறந்தவன் திலீபன்.  அவன் வழியில் உண்ணாநிலையை தொடங்கி உயிர் துறந்த உலகின் முதல் பெண்மணி தான் அன்னை பூபதியம்மாள். திலீபன் உண்ணாநிலைக்கும் அன்னை பூபதியம்மாள் உண்ணாநிலைக்கும் ஒரே வேறுபாடு த...

ரேகை சட்டத்தை எதிர்த்துப் போராடிய பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவு நாள் 03.04.1920

Image
குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்புப்போரில் உயிர் நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவு நாள் 3.4.1920  ============================== ஒரு மனிதனின் வாழ்நிலையை அவனது பிறப்பு தான் தீர்மானிக்கும் என்று மனுதர்மச் சட்டம் கூறுகிறது. அதே கருத்தைத் தான் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டமும் கூறுகிறது. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரான்சு, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் சுரண்டலுக்கு எதிராகவும், சமூகப் பொருளாதார மாற்றத்திற்காகவும் கலகங்கள் வெடித்தன. பிரெஞ்சு புரட்சியால் உத்வேகமடைந்த மக்களைக் கண்டு நடுங்கிய மேலைய வல்லரசுகள் முதலில் சுதந்திரமான வாழ்வியலைக் கொண்ட நாடோடி இனத்தவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர விரும்பின. அதன் பொருட்டு அம்மக்களைச் சமூக வாழ்வுக்கு அந்நியமானவர்கள் என்று கூறி பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களை கொண்டு வந்தன. இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றிய பிரித்தானிய அரசு அதே வழியில், தனது ஆதிக்கத்திற்கு அடிபணியாத மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகள், நாகரிகமற்றவர்கள், படிப்பறிவற்றவர்கள் என்றெல்லாம் முதலில் இழிவுபடுத்தத் தொடங்கியது. பின்னர் அம்மக்கள் மீ...