தமிழ் நாட்டின் சர்வாதிகாரி காமராசர் தோற்கடிக்கப்பட வேண்டும். -பெரியார்

தமிழ் நாட்டின் சர்வாதிகாரி காமராசர் தோற்கடிக்கப்பட வேண்டும்.
-பெரியார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஒரு சில முக்கியமான காங்கிரசு தலைவர்களையாவது அவசியம் தோற்கடிக்க வேண்டும். இது மிக மிக இன்றியமையாதது ஆகும். கீழ்க்கண்டவர்களைத் தோற்கடித்தால் காங்கிரசின் விச­ப்பற்களைப் பிடுங்கியது போலாகும் என்பது நமது கருத்து.

1.காமராசு 
2.டி.கே.கிருஷ்ணமாச்சாரி 
3.சந்தானம் அய்யங்கார் 
4.ராம்நாத் கோயங்கா 5.பக்தவச்சலனார் 
6.ஆலாஸ்யம் அய்யர் 
7.தேனி தியாகராஜன் 
8.குமாரசாமி ராஜா 

முரட்டுக்காளைக் கொம்புகளை நறுக்கிவிட்டு தீய்த்துவிடுகிற மாதிரி பொதுமக்கள் இவர்களைக் கூர்ந்து கவனிக்க (ஒழிக்க) வேண்டும்.

அலட்சியம் கூடாது. இந்த எட்டு பேரும் டெபாசிட் தொகையை இழக்கடிக்கப்படும் அளவுக்கு தோற்கடிக்கப் படுவார்களானால்; தமிழர்களுக்கு நல்ல அரசியல் அறிவு வந்துவிட்டதாகக் கருதலாம்.

இந்த எட்டு பேர் மட்டும் எப்படியாவது தோற்கடிக்கப்பட்டே தீர வேண்டும். வெறும் தோல்வி மட்டும் போதாது. டெப்பாசிட் போகிற மாதிரியான தோல்வியாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் காங்கிரசு எதிர்ப்பு சக்தி முழுவதும் இந்த எட்டு இடங்களில் ஒன்றுதிரண்டு நிற்க வேண்டும். 

-18.12.1951 விடுதலை தலையங்கம்.


தமிழ்நாட்டு சர்வாதிகாரி காமராசர்

காமராசர் தொடர்ந்து பல ஆண்டுகள் நிரந்தர தலைவராக இருக்கக் கருதுவது சரியல்ல. காமராசர் காங்கிரசை ஒழித்துக்கட்ட தம்மாலான சேவையைச் செய்துவிட்டார். இனி மற்றவர்கள் யாராவது வந்து காங்கிரசின் இறுதி கடனைச் செய்துவிட்டு போவதுதான் நல்லது.சாதி ஆதரவில் நிரந்தர தலைவராக முயல்வது சரியல்ல.

(1.2.1952 விடுதலை)

காங்கிரசை ஒழித்துக்கட்ட தக்க சமயம் வந்து விட்டது. காங்கிரசுக்காரர் ஓட்டுப்பெட்டியில் ஆளுக்கொரு பிடி மண் அள்ளிப் போடுங்கள்.

(24.10.1951 விடுதலை)

காங்கிரசுக் கட்சிக்கு யார் வேட்பாளர்களாக இருந்தாலும் ஓட்டு செய்யாதீர்கள். 

(25.10.1951 விடுதலை)

காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதே தி.க.வின் ஒரே லட்சியம்.

(15.11.1951 விடுதலை)

இந்த தேர்தலில் காங்கிரசை 500 அடி ஆழத்தில் புதையுங்கள்.

(21.11.1951 விடுதலை)

நாட்டில் பலாத்காரம் ஏற்படாமல் இருக்க காங்கிரசு ஒழிய வேண்டும்.

 (24.11.1951 விடுதலை)

காங்கிரசு அபேட்சகர்களைத் தோல்வியுறச் செய்வதே கழகத்தின் குறிக்கோள். 

தி.க.நிர்வாகக் கமிட்டி தீர்மானம். (27.11.1951 விடுதலை)

காங்கிரசை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நமது லட்சியம். 

(14.12.1951 விடுதலை)

(கிடைத்த தடியைக் கொண்டு காங்கிரஸ் என்ற ஆதிசே­ஷன் பாம்பை அடித்துக் கொல்லுங்கள்.

22.12.1951 விடுதலை)

சென்னையில் காங்கிரசுக்கு கல்லறை.

(8.1.1952 விடுதலைச் செய்தி )

புதைக்கப்பட்ட காங்கிரசுக்கு கருமாதி செய்து கல்லறை கட்டப்போகும் நற்செய்தி. 

(9.1.1952 விடுதலை)

1952ஆம் ஆண்டு தேர்தலில் காமராசரை தோற்கடிக்க கடுமையான சொற்களை பயன்படுத்திய அதே பெரியார் தான் இரண்டாண்டு கழித்து பச்சைத் தமிழன் காமராசர் என்று புகழாரம் சூட்டினார்.

காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று சொல்லிக் கொண்ட பெரியார்தான் 1954 முதல் 1967 வரை பதிமூன்று ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஓடும் பிள்ளையாக மாறினார் என்பதுதான் பெரியாரின் வரலாற்றில் நிகழ்ந்த சோகம். 


http://oosssai.blogspot.com/2013/07/blog-post_15.html

Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்