சென்னை மாநகராட்சி - மூவேந்தர் கொடியை உருவாக்கியவர் ம.பொ.சி.
வில்லும் புலியும் மீனும் சென்னை கார்ப்பரேஷன் சின்னங்கள்!
====================================
இமயச் சிகரத்தில் பறந்த கொடி ரிப்பன் கட்டிடத்தின் உச்சியிலே!
'தமிழரசுக் கழகம் தோன்றி இதுவரை என்ன சாதித் திருக்கிறது?' என்று கேள்வி கேட்கும் மேதாவிகளுக்கு நமது சாதனைகளில் புதிதாக ஒன்றைச் சொல்லுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது தமிழரசுக் கழகத் தோழர்களுக்கு.
சென்னை கார்ப்பரேஷன் தனது அதிகாரச் சின்னத் தை திருத்தி அமைத்து புகிய சின்னங்களைப் பொறித்து வைத்திருக்கிறது. அந்தச் சின்னங்கள் யாவை? கருப்பு, சிவப்பு நிறங்களா? இல்லை. பண்டைத் தமிழகத்தில் அரசியல் சின்னங்களாக விளங்கிய வில், புலி, மீன் ஆகிய மூன்றையும் தனது அதிகாரச் சின்னங்களாக ஏற்றுக் கொண்டு விட்டது சென்னை கார்ப்பரேஷன். அதற்கு சென்னை அரசாங்கமும் அங்கீகாரம் கொடுத்துவிட்டது.
இனி, ரிப்பன் கட்டிடத்தில் அறவாழி பொறித்த தேசியக் கொடியோடு மூவேந்தர் சின்னங்கள் பொறித்த கார்ப்பரேஷன் கொடியும் சுதந்திரக் காற்றில் ஆடிப்பறக்கும்.
கார்ப்பரேஷன் அதிகாரச் சின்னத்தைத் திருத்தி அமைக்க நியமிக்கப்பட்ட ஆலோசனைக் கமிட்டியில் தலைவர் ம.பொ.சி.யும், தளபதி கே.வினாயகமும் அங்கத்தினர்களாக இருந்தார்கள் என்ற செய்தியை தமிழ் மக்களுக்கு அறிவித்துக் கொள்வதில் ஆனந்தப் படுகிறோம்.
அதற்கு மேல் விளக்கம் தேவையில்லாமலே மூவேந்தர் சின்னத்திற்குப் பெருமை தேடியவர்கள் யாரென்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.
வில்,புலி,மீன் ஆகிய பண்டைச் சின்னங்கள் தமிழரசுக் கழகத்தாரின் தனி உரிமை அல்ல. அவை சாதி, சமய கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்ட மூன்று கோடி தமிழர்களுக்குரிய புராதனச் சின்னங்கள்.
இதை ம.பொ. சி, தாம் பேசிய மேடைகள் தோறும் பிரகடனம் செய்து வந்தார். ஆனால், அரசியல் பிஞ்சுகள், தேசபக்த சுகவீனங்கள் விளங்கிக் கொள்ளவில்லை; இப்போதேனும் விளங்கியிருக்கும் அல்லவா !
சென்னை கார்ப்பரேஷன் மூவேந்தர் சின்னங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் சென்னை நகரம் தமிழருக்குத் தான் சொந்தம் என்பது முடிவாகியிட்டது. அந்த முடிவுக்கு வைத்த முத்திரைகள் தான் தமிழ் மூவேந்தரின் சின்னங்கள்,
இனி, ஒரு கோடி கோபால் ரெட்டிகள் விருந்துண்ணும் இடத்தில் விஷத்தைக் கக்கினாலும் சென்னை தமிழகத்திற்குத்தான் சொந்தம் என்ற வாதத்தை அசைக்க முடியாது.
இந்த அரும்பெரும் சாதனையைத் துணிவோடு செய்த சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலையும், கமிஷனர், மேயர் அவர்களையும் அவர்கள் இதைச் செய்ததற்குக் காரணகர்த்தர்களாக இருந்த
ம.பொ.சி..
தளபதி கே. வினாயகம்...
காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.ராதாகிருஷ்ண பிள்ளை...
ஆகியோரையும் பாராட்டுகிறோம்.
கடந்த 26-ம் தேதி நடைபெற்ற கார்ப்பரேஷன் கூட்டத்தில் புதிய சின்னம்பற்றி பேசப்பட்டபோது, 'இவை தமிழரசுக் கழகத்தின் கொடிச் சின்னங்கள் அல்லவா? என்று ஒரு சில அங்கத்தினர்கள் வியப்போடு கேட்டதாக பத்திரிகைச் செய்தி கூறுகின்றது. இப்படிக் கூறி தமிழரசுக் கழகத்தைப் பெருமைப் படுத்தியதற்காக அந்த அங்கத்தினர்களைப் பாராட்டுகிறோம்.
நன்றி: ம.பொ.சி. நடத்திய "செங்கோல்"
இதழில் இருந்து.
- கதிர் நிலவன்
Tamilthesiyan.wordpress.com
#சென்னை_நாள்
#சென்னை_தினம்
#ஆகஸ்ட்_22
#Chennai_day
#Madras_day
Comments
Post a Comment