திருமணம் என்பது கிரிமினல் குற்றம்! - ஈ.வெ.இராமசாமி
திருமணம் என்பது கிரிமினல் குற்றம்!
.ஈ.வெ.இராமசாமி
====================================
திருமண வீட்டில் ஒலிபெருக்கி முன்னால் நின்று கொண்டு திருமணம் என்பது கிரிமினல் குற்றம் என்பார் ஈ.வெ.ரா.
திருமணத்தை கிரிமினல் குற்றம் என்று சொல்பவரே திருமணத்தை நடத்தி வைத்தால் அவரும் கிரிமினல் குற்றத்திற்கு உடந்தை என்று தானே பொருள்.
திருமணங்களில் புரோகித பிராமணர்களை ஒழிக்க முடியாததால், திருமணத்தை தடை செய்வதன் மூலம் புரோகித பிராமணர்களை ஒழிக்க முடியும் என்று ஈ.வெ.ரா. நம்பினாரா என்றும் தெரியவில்லை?
ஈ.வெ.ரா. நடத்தும் சுயமரியாதை திருமணங்களில் புரோகிதர்கள் கிடையாதே? அப்புறம் ஏன் திருமணத்தை தடை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.
ஏன், திருமணத்தை தடை செய்யச் சொன்ன ஈ.வெ.ரா.வே இரண்டுமுறை திருமணம் செய்து கொண்டவர் தானே?
பெண்கள் ஆண்கள் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரே வழி திருமணத்தை தடை செய்தால் குடும்பம் என்ற அமைப்பு இல்லாமல் போகாதா?
மனித உற்பத்திக்கு திருமண உறவு தேவையில்லை என்றால் , மனித உற்பத்தி நின்று விடாதா? அல்லது திருமணம் செய்யாமலே விருப்பப்பட்ட ஆணும், பெண்ணும் இணைந்து மனித உற்பத்தியில் ஈடுபடலாமா?
இதுபோன்ற கேள்விகளுக்கு ஈ.வெ.ரா.விடம் விடை தேடிப்போனால், காட்டுமிராண்டி காலத்திற்கு தான் மனிதன் போக வேண்டியது வரும்.
மனித நாகரிகத்தின் உச்ச கட்டம் குடும்பம் என்பர். குடும்பங்களில் பெண்கள் மீது ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்டால், அதற்கு எதிராகப் போராடச் சொல்வது வேறு, பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் வேண்டுவது வேறு.
இவற்றில் திருமணத்தை தடை செய்ய வேண்டும் என்ற ஈ.வெ.ரா.வின் கருத்துகள் தற்குறித்தனமானது.
ஈ.வெ.ரா. தாய், தந்தை, மகள் உறவை கொச்சைப்படுத்தி பேசவில்லை என்று வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பவர்கள் ஈ.வெ.ரா. பேசிய இதுபோன்ற பெண்ணிய கருத்துகளை பொதுவெளியில் விவாதிக்கத் தயாரா?
ஈ.வெ.ரா. உதிர்த்த பொன் மொழிகள்!
======================================
மாடுகள் தினவெடுத்துக் கொண்டால் உராஞ்சிக் கொள்வதற்குத் தேய்ப்புக் கல் அடித்து நட்டுவைக்கும் இந்து மக்கள் விதவைகளுக்கு என்ன செய்திருக்கின்றார்கள் !
- பெரியார் ஈவேரா.
(குடியரசு 13.4 .1930)
திருமணம் என்பதே கிரிமினல் குற்றமாக வேண்டும் என்று சொல்லி வருகிறேன் . நான் மனுதர்மத்தை நல்ல வண்ணம் படித்திருக்கிறேன் .அதில் சூத்திரனுக்குத் திருமணமே கிடையாது ; எனக்குத் தெரியும்.
.- விடுதலை (11. 10 .1967 )
இந்த மாதிரி ( சுயமரியாதை) வாழ்க்கைத் துணை ஒப்பந்தம முறையைக் கூட கிரிமினல் ஆக்க வேண்டும் என்று இப்போது (89 ஆம் வயதில்) நான் எடுத்துச் சொல்லி கொண்டு வருகிறேன் .
கலியாணமென்று சொன்னாலே அது கிரிமினல் சட்டப்படித் தவறாக வேண்டும் . அந்த கொடுமையினாலே மனித சமுதாய வளர்ச்சி தடைபட்டுக் கிடக்கிறது !
(விடுதலை 16 .11 .1967 )
"பெண்களுடைய அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்றால் பெண்கள் சுதந்திரம் வேண்டுமானால் இந்த கலியாண முறையையே முதலில் ஒழித்தாக வேண்டும்".
( விடுதலை 1.2.1973 )
எப்படி மனிதன் மனிதனை அடிமை கொள்வதைத் தவறு, சட்டப்படிக் குற்றமான காரியம் என்று ஆக்கி இருக்கின்றோமோ அதே போல மனிதன் பெண்களை திருமணம் என்ற பெயரால் அடிமையாக்கிக் கொள்வதை சட்டப்படியான குற்றம் என்று செய்ய வேண்டும் .
( விடுதலை 2.5.1973 )
Comments
Post a Comment