அன்னியரான துலுக்கனுக்கு - பார்ப்பானுக்கு இங்கு என்ன உரிமை! - ஈ.வெ.இராமசாமி முழு உரை.

அன்னியரான பார்ப்பனர் - துலுக்கருக்கு இங்க என்ன உரிமை!

-ஈ.வெ.இராமசாமி

====================================

எத்தனை முறை ஈ.வெ.ரா.வை பற்றி எடுத்துச் சொன்னாலும், ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகள் திருந்த மறுக்கிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் " என் தலைவர் பெரியாரே, தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டி" என்று ஜீனியர் விகடன் இதழில் பேட்டி தந்துள்ளார்.

தமிழ் மொழி எதிர்ப்பாளர், தமிழின மறுப்பாளர் ஈ.வெ‌.ரா. ஒருபோதும் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாக இருக்க முடியாது. 

அவரின் உரையாடல், எழுத்து, பேச்சு எவற்றிலும் தமிழ்மொழி, தமிழர் இனம், தமிழர் தாயக மறுப்பு ஆகியவற்றை அவர் நடத்திய விடுதலை ஏட்டையே சான்றாகத் தந்து பலமுறை எழுதியுள்ளோம்.

பிராமணீய இந்திய அரசு இசுலாமிய சமூகத்தை எப்படி அணுகுகிறது என்பதை ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை.

இந்தியாவை இந்து சாம்ராஜ்யமாக மாற்றிட இசுலாமியர்கள் தடையாக இருப்பதால், இசுலாமிய மக்களை அந்நியராகக் கூறி, இந்தியாவை விட்டு வெளியேற வைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பலின் திட்டமாகும். 

இந்த திட்டத்தை வழி மொழியும் ஒருவராக ஈ.வெ.ரா. இருந்துள்ளார் என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

1964 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு இசுலாமியர்கள் வாக்களிக்க வில்லை என்பதை சாக்காக வைத்துக் கொண்டு எவ்வளவு கேவலமாக இசுலாமியர்களை திட்ட வேண்டுமோ அந்தளவுக்கு ஈ.வெ.ரா. திட்டியுள்ளார்.

இந்த நாட்டுக்கு சம்மந்தம் இல்லாத இசுலாமியர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று ஈ.வெ.ரா. பேசியுள்ளார்.

ஈ.வெ.ரா.வின் முழுப் பேச்சை ஓரளவுக்கு விரிவாகவே இங்கு வெளியிட்டு உள்ளோம். இந்தப் பேச்சை விடுதலை ஏடே வெளியிட்டுள்ளது.

ஆளூர் நாவாஸ் போன்றவர்கள் மட்டுமல்ல; இசுலாமிய மக்களின் பாதுகாவலராக இருப்பது ஈ.வெ.ரா.வும், அவர் உருவாக்கிய திராவிட சித்தாந்தமும்தான் என்று நம்பக் கூடியவர்கள் இனியாவது மனம் திருந்த வேண்டும் . 

ஈ.வெ‌.ரா.வின் இந்த முழு உரை இசுலாமியர்கள் மீதான வன்மத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் வெளிக்காட்டும் அவரின் உள்ளத்தின் கண்ணாடியாகும்.

கடந்த காலத்தில்ஈ.வெ.ரா. இசுலாமியருக்கு ஆதரவாக பேசியதை வைத்து அவரை இசுலாமியர்களின் வழிகாட்டி என்று யாராவது சொல்வீர்கள் என்றால் நீங்களே உங்களை முட்டாளாக்கி கொள்கிறீர்கள் என்று பொருள் .

உரை படித்து உண்மை அறிக! ஈ.வெ.ரா.மயக்கம் விடுக!
 

- கதிர் நிலவன்
===================================
சிறுபான்மையினரால் பெரும்பான்மையினர் அவதிப்படும் பேராபத்து!
====================================

இன்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டால் மட்டும் தொல்லைகள் இல்லை. நமக்கு எதிராக மற்றொரு பெரிய ஆபத்து இருக்கிறது. நமக்கு இருக்கும் பெரிய ஆபத்து என்னவென்றால், இந்த நாட்டிலே இருக்கும் பெரும்பாலான மக்கள் நாம் நூற்றுக்கு 90 பேர் பழங்குடி மக்களாக இருந்தாலும் நாம் மிக சிறுபான்மையான மக்களால் ரொம்ப அவதியுறுகிறோம்.

 நாடு நம்முடையது; நாம் பெரும்பான்மை மக்கள்தான். ஆனால், சிறுபான்மை மக்களாக ரொம்பவும் அவதிப்படுகிறோம் . அது மாத்திரம் இல்லை ; இன்னும் நாளுக்கு நாள் நமக்கு பெருங்கேடு வரக்கூடிய நிலை இருக்கிறது. இதை யாரும் சிந்திப்பதில்லை. இதைப் பற்றி கவலை எடுத்துக் கொள்வதில்லை .

 நம் நாட்டுக்கு வந்த மாதிரியான இந்த ஆபத்தான முறை வேறு எந்த நாட்டுக்கும் வரவில்லை. பெருவாரியான மக்களாக இருக்கும் நாம் இந்த நாட்டுக்காரர்களாக இல்லாத- நம்மவர்கள் அல்லாத- சிறுபான்மையான மக்களால் தொல்லை அடைகிறோம். இன்னும் பெரும் தொல்லை அடையப் போகிறோம் . 

மான உணர்ச்சி இல்லாததால் நமக்கு தொல்லையாகத் தெரியவில்லையே தவிர , உண்மையில் நாம் தொல்லை அடைந்து கொண்டு தான் இருக்கிறோம்!

 துலுக்கரும் பார்ப்பனரும் அன்னியரே !
===================================

துலுக்கரை எடுத்துக் கொள்ளுங்கள் 100க்கு 5 பேர்! அவ்வளவுதான். அவன் இந்த நாட்டுக்காரன் இல்லை . எப்படி என்றால் அவனுக்கு நாட்டைப் பற்றி கவலையுமில்லை. 

 அதே மாதிரியாக பார்ப்பனர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் நூற்றுக்கு 3 பேர் தான்! அவர்களும் இந்த நாட்டுக்காரர்கள் இல்லை. அவர்கள் சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் தெரியும். 

 எங்கோ இருந்து பிழைக்க இந்த இரண்டு பேரும் வந்து நம்மிடம் உள்ள துரோகிகளைச் சேர்த்துக் கொண்டு பேயாட்டம் ஆடுகிறார்கள் பாருங்கள்!

 இதனால் நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் . இது என்ன நியாயம்? இவர்களுக்கு இந்த நாட்டிலே, என்ன நியாய சம்பந்தம் சொல்லுங்கள். ஒரு பார்ப்பானோ, துலுக்கனோ இருந்தால் அவர்கள் வேலை, பிழைப்பு, பதவி , பணம் குவிப்பது தவிர வேறு எந்த பொறுப்பும் ( இவர்களுக்கு ) இல்லை. இதற்கு ஆகவே இவர்கள் அரசியலில் நுழைந்து மக்களுக்கு எவ்வளவு தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் .

 இந்த நாட்டில் இருக்கும் நம் (கீழ்த்தர) மக்களைக் கொண்டே நம் இன மக்களையே அடியாட்களாக வைத்துக் கொண்டு நமக்கு எவ்வளவு தொல்லை கொடுக்கிறார்கள் ‌.

அதற்கு நாம் பரிகாரம் செய்யாமல் இருக்கிறோம். அரசாங்கமும் இதற்கு பரிகாரம் செய்யாது . அரசாங்கமும் இவர்களைப் போல் இந்த நாட்டுக்கு சம்மந்தம் இல்லாத அரசாங்கமே! 
......................................

துலுக்கனும் பாப்பானும் எவ்வளவு தொல்லை கொடுக்கிறான்! அரசாங்கம் இதை நினைக்கவே இல்லை. இதே துலுக்கன் இங்கு சொல்வது போல் நாம் பாகிஸ்தானில் சொல்ல முடியுமா? சொன்னால் , என்ன பண்ணுவான் தெரியுமா? தூக்கில் போடுவான் ; பெண்டு பிள்ளைகளை நாசப்படுத்தி விடுவான். நாட்டை விட்டு விரட்டி விடுவான்! 

இங்கே இருக்கும் துலுக்கர்கள் அரசாங்கத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே பிழைத்துக் கொண்டிருக்கிறானே! காரணம் இங்கே நமது அரசாங்கத்திற்கு பலமில்லை. 
..................................

பார்ப்பான் எதிர்ப்பால் என்ன மர்மம் ?
==================================
காங்கிரசை செருப்பால் அடிக்க வேண்டுமென்று சொல்லுகிறான் பார்ப்பான் ! அவனுக்கு எவ்வளவு தைரியம் .

துலுக்கனும் இந்த காங்கிரசை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிறான். பார்ப்பான் ஒழிக! முஸ்லிம் ஒழிக! என்று சொல்ல நமக்குத் தைரியம் இல்லை.

காங்கிரஸ் என்ன இவர்கள் அப்பன் வீட்டு கிள்ளுக்கீரையா ? அதில் இருக்கும் குறைபாட்டை எடுத்துச் சொன்னால் இவர்களை மனிதன் எனலாம். அதை ஒழிக்க வேண்டுமென்றானே? அவர்களுக்கு அதனால் என்ன கேடு செய்தது? பார்ப்பான் காங்கிரசை ஒழிக்க வேண்டுமொன்கிறானே, அவர்களுக்கு அதனால் என்ன கேடு வந்தது ? 

அதைச் சொல்லிவிட்டுச் செய்ய வேண்டும். உடலுழைப்பைக் கொண்டு பாடுபட மாட்டான். வண்டி இழுக்க மாட்டான் . அவர்கள் பெண்டுகள் களை பறிக்கப் போகமாட்டார்கள். இவன் சிங்காரமாக இருக்கிறவன் . அதனால் ஆதிக்கம் நழுவுகிறது என்பதற்காக ஒழிய வேண்டும் என்றால் என்ன யோக்கியம் ?

நம் அரசாங்கத்திற்கு பணம் இல்லை. பாகிஸ்தானில் என்ன செய்கிறான். தினம் ஆயிரம் இரண்டாயிரம் பேர்களை விரட்டி அடிக்கிறான். அவனுக்கெல்லாம் எங்கே இடம் கொடுப்பது என்று இந்த ஊருக்கு இத்தனை பேர் அந்த ஊருக்கு எத்தனை பேர்கள் என்று அனுப்பி வைக்கிறார்கள்.

 20 லட்சம் பேருக்கு மேல் வந்துவிட்டார்கள். இங்கே இருக்கிறவன் இதையெல்லாம் கேட்க மாட்டேன் என்கிறான் . நம்மவன் யோக்கிதை என்ன பன்றி குட்டி போட்டது போல் 40 கோடி மக்கள் இங்கு இருக்கிறார்கள் அதுதான் .

தனிநாடுதான் விமோசனம்!
===========================

இன்றைய ஆட்களுக்கு பலம் வந்ததற்கு காரணம் மத்திய அரசாங்கத்தோடு சேர்ந்து இருப்பதால்தான். நாம் தனியாக இருந்தால் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் . 

பாகிஸ்தானிலும் , இலங்கையிலும், பர்மாவிலும் இந்தியர்களை மூட்டை கட்டிக்கொண்டு வெளியே போகச் சொல்லுகிறார்கள். பர்மாவில் சொத்தை பிடுங்கிக் கொண்டு வெளியே போங்கள் என்கிறான். 

 இப்படி இருக்கும்போது இங்கு இருக்கும் துலுக்கனுக்கு இங்கே என்ன வேலை? ஆப்கானிஸ்தானத்திற்கோ, பாகிஸ்தானுக்கோ போகட்டும் .

உனக்கு இங்கு என்ன வேலை இந்த நாடு உனக்கு எப்படிச் சொந்தம்? தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் நீ யார் ? நீ தமிழனா? அப்படிச் சொல்லுவதே எவ்வளவு மோசடியான காரியம்? 

நம் மக்களும் முட்டாள்தனமாக இவர்களைப் பாராட்டிக் கொண்டு வருகிறார்கள். அதனால் முனிசிபாலிட்டிக்கும், வெங்காயத்துக்கும் நிற்கிறான்.

 ஓட்டு போடு என்று கேட்கிறான். இவனுக்கு என்ன கொள்கை ? இவனிடம் ஆன உள்ள திட்டம் என்ன ? 

சட்டசபைக்குப் போகிறவர்களுக்கு காங்கிரஸ்காரர்களுக்கு ஓட்டு போடாதே என்றால் உன் கொள்கை என்ன? துலுக்கன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்துக்களை ஒழித்துக் கட்ட வேண்டுமென்கிறான்!

 பார்ப்பான் என்ன சொல்கிறான். காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதே, செருப்பால் அடி, ஒழித்துக் கட்டு என்கிறான். அவர்களைத் தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் போய்விட்டது. ஆடுகிறார்கள். அவர்களுக்கு இடம் கொடுத்து விட்டோம்.

விகிதப்படி இடமும் தனித் தொகுதியும் கொடு !
====================================

ஐயோ பாவம் என்று பரிதாபம் தோன்றுமானால், நூற்றுக்கு 5 பேராக இருக்கும் துலுக்கன்களையும், மூன்று பேராக இருக்கும் பார்ப்பனர்களையும், அந்த விகிதத்தில் இடம் கொடுத்து எதிலும் தனித் தொகுதியாக்கி தனியே உட்கார வைக்க வேண்டும் . 

அந்த விகிதப்படியே உரிமை கொடுக்க வேண்டும் . அப்படி இல்லாமல் ஏற்கனவே, இருந்த தனித்தொகுதியை அயோக்கியத்தனமாய் அளித்து நம்முடன் கொடுத்ததால் இப்போது பெரிய தொல்லையாக இருக்கிறது‌ . 

 எல்லா காரியத்திலும் சமமரியாதை கொடுத்து விட்டோம். அதனால் இவ்வளவு செல்வாக்கு கொண்டாடுகிறார்கள் . எங்கோ இருந்து பிழைக்க வந்தவன் எல்லாம் நம் முட்டாள்தனத்தை நன்கு புரிந்து கொண்டான். 

 நாம் எகிப்தில் , பாகிஸ்தானத்தில் போய், ஒழிக என்று சொன்னால் சும்மா இருப்பானா ? இங்கே காங்கிரஸ் ஒழிக என்று சொல்லுகிறான் . மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து யானைக்கு கோவணம் கட்டுவது போல் இருப்பதால்தான் நமக்கு இந்த கதிகள் வருகின்றன.

எதிரி நமக்கு யார் ? கண்ணீர் துளி நமக்கு எதிரியாக இருக்கிறான் ! அவன் யார்? நமக்கு எப்படி இருந்தவன் அவன்?

 அவன் ஜாதகம் என்ன? அவன் திட்டம் என்ன? இன்று அவன் எவ்வளவு பெரிய எதிரியாக வந்து விட்டான் . எல்லாம் இந்த பசங்களால் தானே! இப்போது அவர்கள் ஜெயித்து விட்டோம் என்று சொல்லுகிறார்களே !

எதிலே ஜெயித்தார்கள் . இருக்கும் சுமார் 70 முனிசிபாலிடிகளில் எதில் வெற்றி பெற்றார்கள். 100 பேர் உள்ள சென்னையிலும் அவர்கள் 49 பேர் தான்.
 24 பேர் உள்ள முனிசிபாலிடிகளில் அவர்கள் 7 , 8 , 10 பேர். 32 பேர் உள்ள முனிசிபாலிடிகளில் 11 ,12 , 13 பேர் தான். எவன் எங்கு பாதிக்கு மேல் மெஜாரிடியாக வந்தான்? 

 நீங்கள் நன்கு யோசனை செய்ய வேண்டும். அவர்களுக்கு மக்களிடத்தில் எவ்வளவு மரியாதை இருக்கிறது என்று தெரியுமே ! இந்த துலுக்கனும் பாப்பானும் உதவி செய்ததால்தான் இந்த அளவுக்கு வந்தார்கள். ஒழுக்கக்கேடான, நாணயக் கேடான சேர்க்கை உடையவர்களே தவிர தனியாக நின்றான், ஜெயித்தான் என்று ஒரு ஊரைச் சொல்லுங்கள். 

 தமிழன் ஓட்டைப் பெற்றா வெற்றி பெற்றான்? பாப்பான் துலுக்கன் ஓட்டை வாங்கித்தான் வெற்றி பெற்றான் ?

பார்ப்பனர் துலுக்கர்களால் தான் ஆபத்து !
===============================

இந்த இரண்டு கூட்டத்தால் தான் உனக்கு ஆபத்து வரும் . அதற்கு பரிகாரம் செய்தாக வேண்டும். இதையெல்லாம் நம் மக்கள் நன்மைக்காக சொல்லுகிறோம். "துலுக்கனை துரத்தி விட வேண்டும் , பாப்பானை கொல்ல வேண்டும்" என்று சொல்லவில்லை அவர்களை எதிலும் ஒதுக்கி வைக்க வேண்டும்.

அன்னியர் நம்மை விரட்டுவதா ?
===============================

நாம் என்ன அவரோடு கலந்து விட்டோமா? பார்ப்பான் பூணூலைப் போட்டுக் கொண்டு தேவிடியா மகன் நீ. நான் வேறு, நீ வேறு என்கிறான்.

 துலுக்கன் குல்லாய் வைத்து வேஷம் போட்டுக் கொண்டு நான் வேறு நீ வேறு என்றும் , பேதம் காட்ட பெரிய "ராயல்" குடும்பத்தைப்போல தன் பெண்டுகளுக்கு உறை போட்டு வைத்துக் கொள்கிறான் . 

நம் பெண்கள் களை எடுப்பது, கல் சுமப்பது , மண் வெட்டுவது என்று இருக்கிறார்கள். அவர்கள் பெண்களை மட்டும் புர்கா போட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 நம் பெண்கள் அவர்கள் வீட்டுக்குப் போய் வேலை செய்கிறார்கள் . நிலைமை எவ்வளவு கீழ்நிலைக்கு வந்து விட்டது . 

இப்படியிருந்தால் நீங்கள் எப்படி முன்னுக்கு வரப்போகிறீர்கள்? இதற்கு முடிவு ஏற்படாவிட்டால் ஒரு நாளும் நீங்கள் வெற்றி பெற முடியாது. இன்று அவன் குறுக்கே நிற்கிறான். கண்ணீர் துளியாக இருந்தால் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளலாம். 

 அவர்களுக்கு ஒரு கொள்கை கிடையாது. என்ன காரியம் செய்தாவது காங்கிரசை, சமதர்மத்தை அழிக்க வேண்டும் என்கிறான் பார்ப்பானும் துலுக்கனும் .

காங்கிரசின் உயர்ந்த சமதர்ம திட்டங்கள்!
=================================

 காங்கிரசு இவர்களைப் போல் பொறுக்கி தின்று கொண்டா இருக்கிறது? இன்று காங்கிரஸ் எவ்வளவு பெரிய காரியங்களை செய்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் எவ்வளவு நன்மை வரப்போகிறது.

 சாதி முறைகளை ஒழித்து பணக்காரர்கள் கொள்ளையை ஒழித்து மக்களை சமமாக்க திட்டம் வைக்கிறார்கள் . இது எத்தனை பேருக்கு புரியும். 

பெருவாரியான மக்கள் உழைத்து பட்டினி கிடக்க அவன் தின்று போட்டு அஜீரணத்தால் உருண்டு கொண்டு இருந்தால் என்ன அர்த்தம் ? 

முஸ்லிம் ஆட்சியில் வரிக் கொடுமையும் இழிவும் !
====================================

காங்கிரசை எதிர்க்கும் முஸ்லீம்களுக்கு என்ன கெடுதலைச் செய்தோம்? மொட்டை தலைக்கு வரி போட்டோமோ? புர்க்கா (கோஷா) போட்டதற்கு வரி போட்டமோ? முஸ்லிமுக்கு வரி போட்டோமோ? துலுக்கன் கதைகளை எடுத்துப் பார்த்தால் அவர்கள் யோக்கியதை என்ன?

 குடுமி வளர்த்தவனுக்கெல்லாம் வரி போட்டார்கள். இதெல்லாம் நம்மவர்களுக்கு தெரியாததால் ரொம்ப இடம் கொடுத்து விட்டோம் ‌.

அவர்கள் தகுதி என்ன? அந்தஸ்து என்ன என்று நினைக்கவில்லை . நம்மவன் என்று தோளில் கை போட்டோம். அவன் மடியில் கை போட ஆரம்பித்து விட்டான்.

 இவன் இந்த அரசாங்கத்திற்கு யோக்கியனா? உணர்ச்சி, மானம் இருந்தால் முஸ்லீம் லீக் இருக்க வேண்டுமென்று சொல்வார்களா? இந்த நாட்டிலே எதற்கு அவசியம் அது? அவர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது ? முஸ்லிம் லீக் அரசியல் கொள்கை என்ன ? வெள்ளைக்காரன் காலத்தில் அவன் மீது ஆத்திரம் கொண்டு துலுக்கர்களுக்கு ரொம்ப ஆதரவு கொடுத்ததால் தனக்கு அந்த அளவுக்கு யோக்கியதை இருக்கிறதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள் .
............................................
இஸ்மாயில் சாயபு முனிசிபாலிடி தேர்தலுக்கு ஏன் நிற்கிறார் என்றால் காங்கிரசை ஒழிக்கத்தான் என்கிறார். முனிசிபாலிடியில் காங்கிரசுக்குப் பலத்தை குறைத்தால் அதைக்காட்டி ஒழிக்க பணம் காங்கிரசை கேட்டால் பணம் கொடுப்பான் . அதைக் கொண்டு காங்கிரசை ஒழிக்கலாம் என்று நினைக்கிறார்கள். 

இப்போது இஸ்மாயில் சாயபுக்கு பார்ப்பனர் ஒரு லட்சத்திற்கு மேல் கொடுத்து அடிமை கொண்டு விட்டார்களாம்; காங்கிரசை திருத்துவதற்காகவோ, இன்ன காரியங்களைச் செய்யவில்லை என்று எடுத்துச் சொல்வதற்காகவோ அல்லாமல் காங்கிரசை ஒழிக்கத்திட்டம் போட்டு வருகிறார்கள்; 

அவர்கள் போய், துலுக்கன் ஆண்டால் ஒத்துக் கொள்வீர்களா? இல்லை பார்ப்பான் ஆண்டால் ஒத்துக் கொள்வீர்களா? ? இல்லை கண்ணீர்த்துளிகள் ஆண்டால் ஒத்துக் கொள்ள முடியுமா? காங்கிரஸ் போனால் காலிகள் ஆட்சிதானே ஏற்படும் ? மனுதர்ம ஆட்சிதானே நடக்கும் ?
............................................

அடுத்து கூடிய சீக்கிரத்தில் துலுக்கன், பார்ப்பான் தொல்லைக்குப் பரிகாரம் காண மாநாடு கூட்டி முடிவு செய்ய இருக்கிறோம்.

 அதற்கு நீங்கள் எல்லாம் வந்து ஆதரவு கொடுத்து மேலும் இந்த தொல்லை இல்லாமல் ஒரு பாதுகாப்பு செய்து கொள்ளுங்கள். இதனால் ஏதாவது தொந்தரவு வந்தால் எங்களுக்குத்தான் வரும். அதைச் செய்தால் தான் மக்களிடையே ஒரு உணர்ச்சி ஏற்படுமென்று இதை எடுத்துக் கொண்டி ருக்கிறோம்.

நான் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பி விடாமல், சற்று உணர்ச்சியுடன் சிந்தித்து எடுக்கும் முயற்சிக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டு என் வார்த்தைகளை முடித்துக் கொள்ளுகிறேன்.

- ஈ.வெ.இராமசாமி

(19.04.1964ல் சென்னை கடற்கரையில் சுப்ரீம்கோர்ட் நீதிப் போக்கு கண்டன நாள் பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.ராமசாமி பேசியது.)

நன்றி: விடுதலை 23.4.1964

- கதிர் நிலவன் 
Tamilthesiyan.wordpress.com

Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்